Sunday, September 12, 2021

Ishaan Krishnan interview QA - additional Vadivelu style Memes

 ஒரு ஏழாங்கிளாஸ் பச்சைப் பயபுள்ள, எதோ தெரியாத்தனமா வாய்விட்டுக் கேட்டுட்டாப்ல, அதுக்காக, இப்பிடியா போட்டுத் தாக்குறது? ஈஸ்வரா, நாராயணா, மகாதேவா மொமென்ட்


கோம்ஸ் இது உனக்காக தனிப்பட யோசிச்சது, சற்று முன்:


வோர்ட் டாக்குமென்ட் முச்சூடும் படிச்சபின், இஷான் அம்மாவிடம் சொல்லுவது (மைன்ட் வாய்ஸ்னு வெச்சுக்கோயேன்) :


'யாரும்மா இவர்? சிங்கப்பூர்ல இருக்காரா ? சென்னையில் இருக்காரா? 


நான் இவரைப் பார்த்திருக்கேனா? 


சிங்கப்பூர்னா எங்கேம்மா எந்த ஏரியாம்மா? 


புக்கிட் பஞ்சாங்டா. 


யூ மீன், ப்ளூ லைன்? டவுன் டவுன் லைன்? 


அவரை எப்பவாவது நம்மாத்துக்கு கூப்பிடுவாயா? வருவாரா? 


ஹூம் வருவாரே, ஏதாவது அக்கேஷன் இருந்து அப்ப கூப்பிட்ட மாமா வருவாளே? 


எதுக்கு கேட்கறே, இஷான்? மாமாவை பார்க்கணும்போல இருக்கா? 


அட போம்மா, அவர் வர்றதா இருந்தா சொல்லு, நான் நாலு நாளைக்கு இந்தப் பக்கமே வரலே, பூன் லே சாமா மாமா வீட்டுக்கு போயிடறேன். அவர் வந்துட்டுப் போனப்புறம் ஃபோன் பண்ணு, அப்பறமா வர்றேன். 


என்னம்மா இவர், தெரியாத்தனமா ஸ்கூலுக்காகத்தானே நாலு கேள்வி கேட்டேன், எனக்காகவா கேட்டேன்? 


இந்தாளு இப்ப்டி பொரட்டி எடுத்திருக்காரு? சரியான டிக்சனரிம்மா இவர். எப்படிம்மா இவரை அவாத்துல சமாளிக்கறா ? 


(அவ்.........வ், நான் என்னியச் சொல்லிக்கிட்டேன்) 


க்ருஷ்: அங்க என்ன சத்தம்? 


ஒண்ணுமில்லைப்பா, அம்மாக்கிட்டே பேசிண்டிருக்கேன் (அவ்...........வ்)

கொசுறு: இஷான், அந்த மாமா சாமா மாமா வீட்லதான் இன்னிக்கு பூரா டேராவாம். நம்ம மாமா எதுக்கோ பூஜைக்கு கூப்பிட்டிருக்காளாம் அதனால் கார்த்தால 10 மணிலருந்து சாயந்தரம் 8 மணி வரை மாமா அங்கேதான் இருப்பாளாம். 


என்னய்யா உலகம் இது? எங்கிட்டுப் போனாலும் கேட்டைப் போடறாங்களே, நான் பச்சை மண்ணு, எங்கிட்டுப் போவேன்?

இன்னும் ரெண்டு ஸ்கிட் யோசிச்சிருக்கேன், again Vadivelu slang, யோசிக்க யோசிக்க எனக்கே சிரிப்பை அடக்க மிடியல. 10 நிமிஷமா எனக்கு நானே சிரிச்சுண்டு இருக்கேன்😎😎😎

Read in Vadivelu slang

இன்று 12.09. 2021, 61ம் அகவையில் எழுந்தருளும் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சமர்ப்பணம்!!

****************

அனன்யா சில வருடங்களுக்குப் பிறகு:


அதாருய்யா என்ற அண்ணான் இஷானை கலாய்ச்சது, கதற வுட்டது? 


வெளியே வாலே, உள்ற இன்னா பண்ணிக்கிட்டிருக்கே? 


யாரும்மா நீயி, இன்னா வேணும் உனுக்கு? 


என்னிய உனுக்கு தெரியாதுலே. என்ற அண்ணன் இஷானை நோக்குத் தெரியுமா? 


இஷானா, ஆரது? பேர் புச்சா இருக்கே? அவரு போட்டோ எதானு வெச்சிருக்கியா? பார்த்தா நெனைவு வரும் தாயே. 


இந்தா, பார்த்துக்க, நல்லா யோசிச்சுச் சொல்லு. 


இவனா? இந்தப் பயபுள்ள நல்லாத் தெரியுமே? இன்னாவாம்? 


யோவ், வென்று, என்ற அண்ணன் என்னாய்யா பண்ணினான் உனுக்கு? ஏழாப்பு படிக்கச் சொல்லே ஏதோ இஸ்கோல்ல டீச்சர் மக்கா கேட்டாய்ங்கன்னு நாலு கேள்வி கேட்டாப்ல. நீ பட்ச்சவன் தானே, இன்னா பண்ணி இருக்கோணும் நீயி? உனுக்குத் தெரிஞ்ச கேள்விக்கு தெரியும், அப்பிடி இப்பிடின்னு நாலு வரி பதில் கொட்த்துட்டு எஸ்ஸாயிருக்கோணும் நீயி. பதில் தெரியலியா, சாய்ஸ்ல உட்டிருக்கோணும், நீயி. 


ஆமாம் தாயி, நாந்தேன் 10 கேள்விக்கும் சரியா வெளக்கம் சொன்னேனே, அதுல எதுனாச்சும் ப்ராது ஆயிப்போச்சா தாயி? 


யோவ், 10 இல்லேய்யா, 11 உனுக்கு கணக்கும் சரியா வராது. 


மத்த கேள்வில்லாம் விட்டுடுய்யா, அந்த 6 வது கேள்வி அதுக்கு நாலே நாலு வரில் பதில் குட்த்திருந்தீயன்னா, நான் ஏன்யா நாலு வருஷம் கழிச்சு என்ற அன்பு அண்ணன், பாசமிகு அண்ணன், அவனுக்காக இப்போ திருப்பாச்சி அருவாவோட வரப் போறேன்? 


இன்னாது, திருப்பாச்சியா? ச்சொல்லவேயில்லே? என்னம்மா ஆச்சு? பார்த்தாப் பச்சைப் புள்ள போல இருக்கியே, திருப்பாச்சி அது இதுன்ற? 


யோவ், நான் ஆரு தெரியுமா? என் பின்னணி தெரியுமா உனுக்கு? 


என்னம்மா, கண்ணுலயே பயம் காட்டறியே? இப்ப என்னாச்சும்மா, வெவரமாச் சொல்லும்மா. 


அடப் போய்யா, உன்ற 11 பதில் படிச்சு என்ற அண்ணன், அதுவும் அந்த 6வது கேள்விக்கு நீ குட்த்தியே லெங்க்த்தா ஒண்ணு, அதுல மெயின், சப்செக்சன், சப் சப் பாயின்ட்டு வேற. 


அவன் என்னவோ இஸ்கோல்ல போயி நீ சொன்ன மேனிக்கே ப்ராஜெக்ட்டை தள்ளி விட்டான். 


அவன் ப்ராஜெக்ட்டை படிச்சுட்டு அங்கிட்டு நாலு வாத்தியாரு, ரெவ்வண்டு டீச்சரம்மா அம்புட்டுப் பேரும் சோலியே வேணாம்னு ரிஜைன் பண்ணிட்டு போயிட்டாங்கய்யா. 


என்னம்மா சொல்றே? அவ்வளவு கேராவா இருந்துச்சு நம்ம ஸ்க்ரிப்ட்டு? 


அட ஏன் கேக்குறேய்யா, என்ற அண்ணன் அன்னிக்கு இஸ்கோலுக்குப் போனவந்தேன், அதுக்கு அப்பால ப்ராஜெக்ட் அது இதுன்னு யாராவது அங்க்கிளாண்ட போனேன்னு வெய்யி, இந்த ஊட்லயே வோர்ல்ட் வார் 3 வரும்னு என்ற ஐயனையும் அம்மாவையும் பயமுறுத்தி வெச்சிருக்கான்யா. இப்போ எனக்கு என்ற இஸ்கோல்ல அதே மாதிரி இன்னொரு ப்ராஜெக்ட் குட்த்திருக்காங்கய்யா. அதுக்கு உன்னாண்டதான் வர்றதா என்ற ஐயனும் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்காங்க.  


அவங்க வந்தா 'ஒண்ணும் மிடியாது'ன்னு எஸ்ஸாயிடு. இல்லேன்னா என்ன தாயீ? 


இல்லேன்னா நடக்குறதே வேற. உன் சங்காத்தம் வோணாம்னுதானே க்ளெமென்ட்டிலேருந்து கெளம்பி புவான்காக் வந்தோம், இங்கிட்டும் வந்து எங்களை சீண்டினா? ச்சும்மா விடமாட்டேன்யா. வர்றியா, வர்றியா, ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு, பாக்குறியா, பாக்குறியா? 


அடி ஆத்தீ, என்னிய விட்டிடும்மா, நான் எதுவும் எளுதலே!! 


அ...............து................து...........!! 


No comments:

Post a Comment