Thursday, June 11, 2020

இலுமினாட்டியும் இருமின்னாட்டியும் தும்மினாப்டியும்!!

இலுமினாட்டியும் இருமினாட்டியும் தும்மினாப்டியும்!!

(எச்சரிக்கை/பொறுப்புத் துறப்பு: இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையே. உயிரோடு வாழ்ந்து மறைந்த, இன்னமும் வாழ்ந்து நம் உயிரை வாங்கும், எந்த ஒரு அகில உலகப் பெரும்புள்ளி வர்த்தக ஜாம்பவான், விஞ்ஞானி அல்லது மருத்துவ உலக ஆபத்பாந்தவான் அல்லது நாடாளும் மன்னர், சர்வாதிகாரி, எதேச்சாதிகாரி அல்லது ஜன நாயகக் காவலர் யாரையும் குறிப்பிடுவன அல்ல, அல்ல!!

எந்த ஒரு ஒப்பீட்டளவிலான மாடலிங் பார்வையாளர் மனதில் தோன்றினால் அது தற்செயலானதே!!

எதுனாச்சும் தவிசு இருந்தால் நேரில் எங்ஙனயாச்சும் சந்திக்கச் சொல்லோ சிங்கிள் சாயா, கட்டஞ்சாயா, கும்மோணம் டிகிரி காப்பி, கரும்புச் சாறு இதிலொன்றாவதில் மத்யஸ்தம் வெச்சுப்போம்!!)

ஒரு காலத்தில் அகில உலகையே ஆட்டிப் படைக்கும் வர்த்தக உலக ஜாம்பவான்கள் என ஒரு சில இலுமினாட்டிகளையும் அவர்கள் பெரும்பாலும் இரகசியமாய் அப்பப்போ பேசிப்பாங்கன்னும் அவுக சொல்லித்தான் உலக நாடுகள் அம்புட்டும் இயங்குது, ஐ. நா. சபை, உலக வர்த்தக சபை, உலக வங்கி இன்ன பிற சர்வதேச ஸ்தாபனங்களும் அன்னார் கண்ஜாடையில் மட்டுமே இயங்குது என்றும் பலவிதமான நோய்கள், இயற்கைச் சீற்றங்கள், செயற்கையாய் நடந்தேறிய இயற்கைச் சூறாவளி, ஆழிப் பேரலை, புயல், புதுப்புது நோய்கள் வருமுன்,வந்தபின் நமக்கு தரப்படக்கூடிய வேக்ஸீன் ( நோய்த்தடுப்பு ஊசி அல்லது சொட்டு மருந்து) அது இது என உலகில் எங்கே என்னென்ன நல்லது கெட்டது நடந்தாலும் இந்த இலுமினாட்டிங்க ஒப்புதல் இல்லாமல் நடக்காது எனச் சொல்லப்படுவதாய் நீ குழாயில் அப்பப்போ யாராவது நமக்கெல்லாம் படம் காட்டிட்டே வந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் 'சொல்வதெல்லாம்/சொன்னதெல்லாம்' உண்மையா நம்பள்க்கி தெள்ளி லேது!!

2000க்கு முன்பு இந்த இலுமினாட்டிக் கூட்டம் அப்பப்போ தெரிந்தெடுக்கும் அப்போதைய வர்த்த உலக ஜாம்பவான்கள், விஞ்ஞானிகள், மருத்துவ உலக சாதனையாளர்கள் அவர்தம் பரஸ்பர 'ஒத்திசைவிலேயே, ஒத்தசைவிலேயே' பூமித்தாய் இயங்கினார் என்றுதான் அவர்கள் இன்னமும் நமக்குச் சொல்லவில்லை. போகட்டும்.

அப்பப்போ எந்த எச்சிக்யூட்டிவ் ஸ்டியரிங் கமிட்டி மெம்பர்கள் மாறுவது போல, மேற்சொன்ன விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அவர்கள் கண்ணசைவில் இயங்கும் நாடாளுபவர்களும் மாற வேண்டுமே? மாறித்தானே ஆகவேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?

அவ்வாறு புதியதாய் இந்த கூட்டத்தில் வர்த்தக சாம்ராஜ்யத்தின் பிரதி நிதி ஒருவர் நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்டவர். நம்ம அம்புட்டுப் பேர் கையிலும் அலுவலகத்திலும் வீட்லயும் ஆளுக்கொரு ஜன்னலைக் கொடுத்தவர், கூடவே எதுனாச்சும் எளுதணுமா இந்த வெச்சுக்கோ என வோர்ட், கூடவே புள்ளி விவரம் அலசி ஆராயணுமா, வெச்சுக்கோ குறுக்கும் நெடுக்கும் கோடுபோட்ட கட்டம் போட்ட ஷீட். அம்புட்டையும் யாருக்காவது வெளக்கிச் சொல்லணுமா இந்தா புடி ப்ரசன்டேஷனுக்கு ஒரு பவர் புள்ளி. அம்புட்டையும் நீயே ஒரு செயலூக்கியாய் செய்து பார்க்கணுமா, நிகர லாப நட்டம் அறியணுமா? இந்த வெச்சுக்கோ ப்ராஜெக்ட்ஸ்.

அந்த புண்ணியவான் ரிடையர் ஆனப்புறம் பொழுதுபோகலேன்னு தன் கஜானாவிலிருந்து இந்த மருத்துவ ஆராய்ச்சி, உலக சமாதானம், உலகாயத நோய்த்தடுப்பு முன்னெடுப்பு என கொஞ்சம் அள்ளி வீசுறாப்லயாம்.
மருத்துவ உலகில் என்னென்ன ஆராய்ச்சி செய்தாலும் அன்னாருக்கு ஒரு கட்டிங், அன்னார்தான் எச்சிக்யூட்டிவ் ஸ்பான்ஸார் என ஒரு மாய உலகம் வேற தனியா போய்க்கிட்டிருக்குன்னு சொல்லிக்கிறாங்க.

இவர் இப்படின்னா, பூமித்தாயின் முதல் குடிமகன்/மகள் ஆதாம் ஏவாள் முதலில் கடிச்சுத் துப்பிய பழம், அதை தன் இலச்சினையாய் கொண்டவர்கள் சும்மா விடுவார்களா? அந்தாளு ஜன்னல் கொடுத்தாப்லயா, நான் தாரேன்னு அவர் ஒண்ணு கொடுத்தாப்ல. அவுகளும் இந்தப் போட்டியில் இருக்காகளா இல்லியா அவுகளுக்கே தெரியாதாம். நமக்கெப்படித் தெரியும்? பின்னே எதுக்குய்யா அவுக பேரைச் சொல்றேன்றீயளா? ச்சும்மனாச்சுக்கும், ல்லுல்லுவாய்க்காட்டிக்கும். 'அ'ன்னு ஒண்ணு இருந்தா போட்டிக்கு 'ஆ'ன்னு ஒண்ணு இருக்கத் தாவல்ல?

இப்போ 2019 புச்சா ஒரு சார்ஸ்2 என அறியப்படும் கொரோனா எனும் கோவிட்19 நாமகரணமிடப்பட்ட வைரஸ்? அது வைரஸா, பாக்டீரியாவான்னு ஒரு பக்கம் சில மெத்தப் படித்த வல்லுனர்கள் சிண்டைப் பிய்ச்சுக்கிட்டு இருக்கும் வேளையில் இந்த கொடிய வஸ்துவுக்கு வேக்ஸீன் எனும் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக அளவில் பல நாடுகளில் பல தனித் தனியேவும், சில ஒருங்கிணைந்தும் தொடர் ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

வேக்ஸீன் வரும்வரை தற்காலிக நிவாரணியாக என்னென்ன பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அம்புட்டு ஜவாப்தாரிகளும் (அதாங்க விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் நாடாளும் அரசகுலம்) யோசித்ததில்: மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைட்ரோ க்ளோரோக்வின் எனும் மருந்து தரலாம்; கபசுரக் குடி நீர் தரலாம்; இஞ்சி,மிளகு, எலுமிச்சைச்சாறு கலந்த பானம் தரலாம் என ஆளாளுக்கு ஒவ்வொரு நிவாரணி சொல்றாங்க. பலருக்கு இவை மூலம் நிவாரணமும் ஆகி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேற்சொன்ன ஆராய்ச்சிகளுக்கு நடுவே ஜெனிவா, நியூ யார்க், வாஷிங்டன், லண்டன், பெய்ஜிங், மாஸ்கோ, ஜெர்மனி என ஆங்காங்கே கூடிப் பேசும், ஆராய்ச்சிக் குறிப்புகளை அலசி சரி வேற ரூட்ல எதுனாச்சும் தெரியுமா செய்து பார்க்கலாமா என்றும் ஒரு க்ரூப் யோசித்ததில் அதிலும் ஒரு 30 பேர் (சுமாராக) இருக்கும் குழு கூடி ஆராய்ந்ததில் ஒரு ஒட்டுமொத்தப் புரிந்துணர்வுக்கு அவர்கள் வர இயலவில்லை. ஆங்கிலத்தில் சொல்வது போல கன்சென்ஸஸ் வரவில்லையாம். 3 கோஷ்டியாய் அவிங்க அடிச்சுக்காத குறையாக இருக்காகளாம்.

வாட்ஸப் வடகறி என அன்பாய் நம்மில் பலரால் அறியப்படும் வடைகளில் ஒன்று, இரண்டு, மூன்று என ஒன்றானவன் இரண்டில் மூன்றானவன் என தமிழ் மூதாட்டி ஔவை சொன்னது போல் 'ஒருங்கிணைவோம் வா' என அவுக பேசி முடிவெடுக்க இயலவில்லை போல. ஒரு கோஷ்டி நாம தினம் குடிக்கிற டீத் தண்ணி இருக்கே, அதோட நதி மூலம் ரிஷி மூலம் இலை இருக்கே அதில் ஏதோ ஒரு கெமிக்கல் அல்லது கனிமம் இருக்காமே அது கொரோனா மாதிரி வைரஸை சமாளிக்க நல்லது என்று சொல்லிக்கினாங்கோ. மொழ நீளத்துக்கு ஒரு ஆராய்ச்சி அறிக்கையும் வந்துச்சு. வாட்ஸப் வடகறிகளில் ஒண்ணு ஆச்சா?

டீ இலையெல்லாம் கெடியாது, நாங்க ஒத்துக்க மாட்டோம், காப்பித் தண்ணி ஒண்ணு இருக்கே, அதுல இருக்குற கனிமம் அதுதான் இந்த கொரோனாவுக்கு நல்லது என ரெண்டாவது கோஷ்டி அதே அறிக்கையில் எங்கெல்லாம் டீத்தண்ணி சம்பந்தமாய் எழுதியிருக்கோ அதில் காப்பித் தண்ணிதான் ஒசத்தி, அதைக் கொடுங்க என வாட்ஸப் வடகறி ரெண்டாவது, ஆச்சா?

ஊடால 3வது கோஷ்டி இவுக என்ன பேசுறாங்க ஒண்ணியும் வெளங்கல்லியேன்னு மீட்டிங் ரூமுக்கு அப்பால போய் 'தம்'அடிக்க போனாங்களா? அவுக சும்மா இல்லாம, அதே அறிக்கையில் 'டீத் தண்ணியும் கெடியாது, காப்பித் தண்ணியும் கெடியாது. நாங்க பொழுது போகாமல் மண்டை காய நிக்கிறப்போ ஊதித் தள்றோமே நிக்கோடின் எனும் சிகரெட் அதுல இருக்கு பலான பலான மேட்டரு, அதுகண்டி அதே மொழ நீள அறிக்கையில் டீ, காப்பி சம்பந்த எழுத்தை நீக்கிட்டு ' நிக்கோட்டின்' பழகிக்கோங்க, கொரோனாவோடு குடும்பமே நடத்தலாம் என 3வதுவாட்ஸப் வடகறி வந்தாச்சு, ஆச்சா? (இன்னாது இன்னும் நீ முடிக்கலியான்றீயளா?)

எழுந்து போயிடாதீங்க, வேற ஒரு ஊர்ல வேற ஒரு ஆபீஸ் லேபரட்டரில வேற ஒரு ஆராய்ச்சி செய்தாகளாம். இது வைரஸும் இல்லை, பாக்டீரியாவும் இல்லை, இது அதுக்குள்ளே ஒரு நல்ல வைட்டமின் புரதம் அம்புட்டும் வெச்சிருக்கு. அதுனால கொரோனா ஒரு கொடிய விலங்கு அல்லது பூச்சி மாதிரி சீப்பாய் எடை போட வேண்டாம், ஆப்பிள் ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பப்பாளில்லாம் கொடுக்கறாப்போல கொரோனா புரதச் சத்து கொண்ட ஒரு புதிய வகை பழம் ஒண்ணு நாங்க இட்டாந்திருக்கோம், இனிமேட்டுக்கு இதையே வளரும் பிள்ளைகளுக்கும் வாழ்ந்து கெட்ட முதியோர்களுக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் கொடுக்கலாம். கொரோனா 21ம் நூற்றாண்டின் அரு மருந்து இல்லை, அரிய வகை புத்தம் புது டெம்ப்ளேட் பழமாக்கும், ஔவைக்குக் கிட்டிய நெல்லிக்கனி போல் இது நம்ம கொரோனாக்கனி. ஒவ்வொரு வீட்டிலும் இந்தச் செடி வளர்க்கணும் இதைக் காயாகவும் தின்னலாம், பழமாகவும் எடுத்துக்கலாம். விருப்பப்பட்டால் ஜூஸ் பிழிஞ்சு பழச்சாறாய் கூட அருந்தலாம்.

கொரோனாவாவது கோவிடாவது, அவனவன் போய் புள்ளைக் குட்டிய படிக்க வைங்க!! ஆக வேண்டிய சோலியப் பாருங்க எனச் சொல்லி அகில உலக மகா ஜாம்பவான்கள் அடுத்த 5 வது வாட்ஸப் வடகறி இட்டாராங்கோ!! உஷார்!! முடிஞ்சா அந்தப் பழத்தின் கூட வாங்க பழகலாம்!!

கொரோனா நல்லது!! விரோதிக்காண்டாம்!!

Wednesday, June 3, 2020

கேரளத்தில் யானை உணவில் வெடிமருந்து வைத்து கொடூரக் கொலை!!

/ யானையை கொன்றதற்கு வருந்தும் நெஞ்சங்கள்,,,,,,,,,
ஏன் மீன் ஆடு மாடு கோழிகளை பற்றி நினைப்பதில்லை விந்தையான மக்கள்// என ஒரு கேள்வி எழுந்தது.
அதற்கு என் ஆழ்மனதில் தோன்றிய கருத்துக்கள்:
மீன் ஆடு மாடு கோழிகளையும் உணவிற்காகக் கொல்லாதே என்றுதானே சாத்வீகிகள் கோருகிறார்கள்? அதற்கே இங்கே கொனஷ்டை வியாக்கியானங்கள், விவாதங்கள்!! செடிகொடிப் பூவிற்கு உயிர் இல்லையா அதை ஏன் பறிக்கிறாய்? என்று வெட்டி விதண்டாவாதம்தானே ஏற்கெனவே இருக்கே? இது புதியதாய் யானை மூலம் மடை மாற்றும் குயுக்தி தான். இதைப் பற்றி சமூகம் பேசத் துவங்கிவிட்டால் ஆடு மாடு மீன் கோழியப் பற்றி ஒரு பய வாயத் தொறக்க மாட்டான் இல்லே?
கொல்லும் மெத்தட் இங்கே முக்கியம், ஏன், எதற்கு, எப்படி?
மற்றவை உணவிற்காக பர்பஸாகக் கொல்லப்படுவது.
யானையை யாரும் உணவாக உண்பதாக எனக்கு தெரிந்து கேள்விப்பட்டதில்லை. இருந்தால் யாரும் குறிப்பிடலாம், அப்போது கூட அதை உணவுக்காகவே யாரும் வளர்ப்பதில்லை.
இங்கு இந்த எபிசோடில் யானையை மெனக்கெட்டு வெடிவைத்து உணவின் வழி (கிட்டத்தட்ட ஃபுட் பாய்ஸன் தான்) கொல்ல வேண்டிய அவசியம் யாருக்கு, ஏன் வந்தது? விசாரணை, வழக்கு என போய் கோர்ட் மூலம் உண்மைகள் வரும்வரை காத்திருக்கலாம்.
ஆனால், முன்முடிவெடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டு வரும் எனத் தெரிந்தே சொல்ல விழைவது:
யானை என்பது இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை சார்ந்தது. கடவுளின் தேசம் என அறியப்படுகிற ஒரு (பிர)தேசத்தில் மூன்று முக்கிய கடவுளர்களின் அன்பர்களிடையே அந்த யானை என்பது ஒரு பேசுபொருள் ஆனது விந்தையல்ல.
இந்து ஆலயம் சார்ந்த வழிபாட்டின் ஒரு அங்கம், கோயில்களில் யானை என்பது ஒரு அங்கம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, தனிப்பட்ட மனிதனே விரும்பி வளர்க்கும் ஒரு ஜந்து இந்த யானை என்பது கேரளத்தில் மட்டுமே ஏராளமாய் பிரசித்தம்.
தனக்கு உணவிற்கும் வாழ்வாதரத்திற்கும் வழியிருக்கோ இல்லையோ யானையை வளர்ப்பது அங்கு ஒரு ஃபேஷன் அல்ல, பேஷன். It's simply NOT a fashion statement, but out of passion, many are keeping elephants as one of their family member(s). அடிப்படைக் கட்டமைப்பில் அம் மக்களிடையே அது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.
இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாத பிறரும் யானை வளர்க்கலாம், அல்லது, குறைந்தபட்சம் யானைப் பாகன் எனும் தொழிலுக்காகவாவது இந்து அல்லாதவர் யானை அருகே களமாடலாம், அந்த பேணலில் அவர் உயிர் வாழலாம்.
அப்படிப்பட்ட யானை என்கிற ஒரு ஜீவனை உணவில் வெடிவைத்துக் கொல்லும் கொடூரமும் இதர மீன், கோழி, ஆடு, மாடு உணவிற்காகவே வளர்க்கப்பட்டு உணவிற்காகவே கொல்லப்படுவதையும் ஒன்று போல் பாவிக்க முடியுமா?
It's all pure cultural misgivings, and the apolitical way of conveying a message by one segment of society to the other, either of them claiming to be religious to the core, propagating or marketing their own religion to the core ONLY to convert the rest into their fold, by hook or crook, by obliging in kind or enforcing a dictum on the victim or targeted economically weaker segment, Period.
Engaging in such violent expression of killing methods, the culprits and anti-social elements openly challenge the other segments
'உங்களுக்கு முக்கியமான ஒன்றை சமூகத்தின் அடிப்படையிலிருந்தே ஆட்டுவிக்கிறோம். கோயில்களிலும் மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் முன்னர் இறங்கினோம், இப்போது நீங்கள் விழுந்து விழுந்து கும்பிடும் வழிபாட்டுத் தெய்வம், முழுமுதற்கடவுள் என நீங்கள் குறிப்பிடும் தெய்வத்தின் குறியீடு அதிலிருந்து எமது அடுத்தக்கட்ட தாக்குதல் இதோ ஒரு சாம்ப்பிள். வாங்கடா, வந்து நின்று எங்களை வெல்லுங்கடா' என அவர்கள் விடுக்கும் ஓப்பன் சேலஞ்ஜ் இது.
Take it, if this country is going to diisintegrate into pieces, it would NOT commence from Uttar Pradesh, Bihar, Gujarat, Assam or Hyderabad or Nizamabad or Shaheenbagh, they are just nomenclature or namesake hotspots, but real disintegration would have its base from God's Own Country, Kerala.
Waste Bengal already contributing enough in that direction.
TN, AP would be just a 'me too played in the game' tamasha, ugliest it would be.

சர்வர் சுந்தரம் திரைப்படம் ஒரு மாறுபட்ட திறனாய்வு!!

சர்வர் சுந்தரம் திரைப்படம் ஒரு மாறுபட்ட திறனாய்வு!!
1964ல் வெளி வந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் நாகேஷ் அவர்களின் வாழ்வில் அவர் நடித்த பல திரைப்படங்களில் நம்மையெல்லாம் மகிழ்வித்த ஒரு நல்ல சித்திரம் என்றால் மிகையல்ல.
சமீபத்தில் அப் படத்தின் கதைக்கோணம் பற்றி யோசித்ததில் இந்தக் கொனஷ்டை கோயிந்து, கோக்குமாக்குக் கோவாலுக்கு வந்த சிந்தனை. பாசிடிவ், நெகடிவ் என இருவேறு அம்சங்களில் ஆராயலாம்.
முதலில் பாசிடிவ் சிந்தனை:
கதைக்களம் நாம் அறிந்ததே, ஒரு சிறு முன்குறிப்பாய் இங்கே.
ஏழை இளைஞன், தந்தையில்லை, தாய் மட்டுமே ஆதரவு. படிப்பறிவும் குறைவு, அந்தக் காலப் பி.யு.சியோ பட்டப்படிப்போ (என்ன படித்தான் நமக்கு நினைவில்லை). ஆனால், பிழைப்பிற்காக ஒரு உணவகத்தில் பணிபுரிகிறான். அவன் முதலாளிக்கு அவனை ரொம்பப் பிடிக்கும், அம்மட்டில் முதலாளிக்கு விஸ்வாசமான ஊழியன்.
வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும்போது ஓரு நாள் கஸ்டமர்களில் ஒருவராய் வரும் ஒருவர் தன் பழைய பள்ளிக்கால நண்பன். நண்பனுக்கு நண்பன் உதவி என இந்த ஏழை இளைஞனுக்கு அவன் விரூம்பிய நாடக நடிப்பு அதன் மூலம் திரைப்பட நடிப்பு என வாழ்வாதாரம் மேலோங்க ஒரு வாய்ப்பு வருகிறது.
இடையே முன்னர் பணியாற்றிய முதலாளியின் மகள் மீது இந்த இளைஞனுக்கு ஒரு ஆர்வக் கோளாறில் வரும் காதல். எதேச்சையாக, தன் பள்ளிக்கால நண்பனுக்கும் அதே பெண்ணுடன் காதல் என்பது இந்த அப்பாவி இளைஞனுக்கு தெரிய சாத்தியம் அதுவரையில்லை. பிறகு அவன் வாழ்வில் ஜெயித்து காதல் கைகூடியதா இல்லையா என்பது வெள்ளித் திரையில் கண்டோம், களித்தோம், நாகேஷ் எனும் ஒற்றை நாயகனுக்காய் ரசித்தோம்.
திரையில் பார்த்த ஒரு ரூட் பாசிடிவ்தான். வேறென்ன பாசிடிவ் ரூட் இது மாதிரி இளைஞர்களுக்கு சமூகத்தில் வாய்க்கும்?
1. அந்த பள்ளிக்கால நண்பன் யாரும் வரவில்லை. இளைஞனின் உழைப்பு, நேர்மை, விஸ்வாசம் என சுமார் ஓரிரு ஆண்டுகள் அவதானிக்கும் முதலாளி அவன் நிர்வாகத்தில் இன்னொரு உணவகம் திறந்து அவன் பொறுப்பில் அந்த உணவகத்தை நிர்வகிக்கச் செய்யலாம். அதை வைத்து அவன் வாழ்வில் தன் வழியே முன்னேறலாம். இந்த முதலாளி ஒரு கருவிதான் அவன் வளர்ச்சியில். மற்றபடி அவன் வெற்றிக்கு அவனே முன்மாதிரி.
2. இளைஞனின் மேல் நம்பிக்கை வைத்து இவன் போல் ஊரில் இருக்கும் 'தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க' அம் மாதிரி இளைஞர்களை அழைத்து தன் நிறுவனங்களில் அவரவர் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பளிக்கலாம். அதில் முதல் இளைஞன் ஒரு மனித சக்தி மேம்பாடு எனும் ரூட்டில் (ஹ்யூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்) அம் முதலாளிக்கு ஒரு சோர்ஸாய் இருக்க வாய்ப்பு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ஏஜென்சி போல் அந்த இளைஞன் வாழ்க்கையை தொடரலாம்.
3. இளைஞனின் உழைப்பை அனுசரித்து அவன் கல்வித் தகுதி என்னென்ன என்பதை உணர்ந்து தன் இதர நிறுவனங்கள் (அதாவது சூப்பர் மார்க்கெட், ஃபார்மஸி, என்ன உண்டோ) அங்கே அந்த இளைஞனைப் பொறுப்பில் அமர்த்தலாம். காலப் போக்கில் அவன் வளர்ச்சியை அனுசரித்து தன் மகளையே கூட அவனுக்கே மணமுடித்து வைக்கலாம். அதன் மூலம் அவனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பும் கூடுதல் பொறுப்பும் வரும் இல்லையா?
கவனிக்க, இதுவரை, அந்த இளைஞனின் சமூகப் பின்னணி, சாதி, மத, இனக் குறியீடுகள் லிஸ்ட்லயே இல்லை. ஆனால், நம்ம பாணி 20ம் நூற்றாண்டின் திரைப்படங்கள், வாழ்வியல் அச்சு அசல் நிகழ்வுகள் காட்டும் நெகடிவ் ரூட்டில் யோசித்தால்:
அவர் முதலாளி என்பதால் அனேகமாய் அவர் சமூகத்தில் முற்பட்டோர் வகுப்பாய் இருக்கவே சாத்தியம் அனேகம். அவரே ஒரு பிற்பட்டோர் சமூகத்தில் இருந்து வந்த முதலாளி, சாதி சமூகக் கடப்பாடுகளைத் தாண்டி வந்தவர் என இருந்தாலுமே கூட அவருக்கும் இந்த சாதி மத இனப் பாகுபாடுகளின் தாக்கம் குடும்ப அளவிலாவது, தன் நெருங்கிய வட்டாரத்திலாவது இருக்காதா என்ன? அவர் என்ன தேவலோகத்தில் இருந்து வந்தவரா என்ன? சராசரி மனிதக் கூட்டத்தில் அவரும் ஒரு அங்கம்தானே?
ஆக, ஆக, என்ன சொல்ல வர்றோம்னா, அந்த முதலாளி ஒரு ஆதிக்க சமூக அங்கம். இளைஞன் ஒரு கீழ் மத்திய அல்லது வறுமைக்கோட்டில் உலாவும் ஆதிக்க சாதியல்லாத சமூக அங்கம் எனக் கொள்வோம்.
என்னென்ன வாய்ப்புகள் அவனுக்கு காத்திருக்கலாம்?
1. முதலாளியும் இளைஞனும் ஒரே மத,இன, சாதியாய் இருந்தால் மேலே பாசிடிவ் சங்கதிகளில் சொன்ன ஏதோ ஒன்று சாத்தியமாகி இருக்கலாம்.
2. இளைஞன் அதே மதம், ஆனால் வேறு சாதி, சற்றே கீழ்மட்ட அங்கம் எனில் அவனது உழைப்பு, விஸ்வாசம் பார்த்து தொழிலில் முன்னேற அவனை பயன்படுத்திக் கொள்வது மட்டுமே முதலாளியின் சிந்தனை. மற்றபடி அவன் யாரோ இவர் யாரோ. இது கூட சரிதான். வாழ்க்கை என்பதே கொடுக்கல் வாங்கல்தானே?
3. இளைஞன் சாதி, மத, இனக் கடப்பாடுகளில் தீவிர சிந்தனை உள்ளவன் எனில் என்ன செய்யலாம்? தொழிலில் முன்னேற வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முதலாளியை முறைத்துக் கொள்ளாமல் தன் வழியில் இருந்தால் சரி. ஆனால், சாதி, மத, இன குறியீடுகள் காட்டும் 'மனோ விகாரங்கள்' தலைக்கேறினால்?
4. முதலாளிக்கு என்னென்ன பிசினஸ் இருக்கு? அதில் தான் என்னென்ன எங்கெங்கே நுழைந்தால் தனக்கோ தன் சாதி, மத, இனக் குழுவுக்கு சாதகமாய் இருக்கும்? சாதகமாய் இல்லாத பட்சம், வாழ்வாதாரத்திற்காக அவரிடம் அணுகி நிலை நிறுத்திக் கொண்ட பின்னர், சொந்தக் காலில் நிற்கும் தகுதி வந்தாச்சு எனும் சுயப் புரிதல் வந்தபின், தன் சாதி, இன, மதக் கடப்பாடுகளின் வழி வரும் சிந்தனை அவனிடம் ஒரு மாற்று யோசனை(களை) விதைக்காதா? அவன் தான் வீரியமான சிந்தனைக்காரன் ஆச்சுதுங்களே?
5. சாதகமாய் இல்லாத அம்சங்களை சாத்தியமாக்கி சாதக பாதகம் உணர்ந்து காய் நகர்த்து 'அரசியல் சித்து விளையாட்டு' அதில் இறங்கினால், முதலாளியின் அடிப்படையையே அசைக்கலாமே? விஸ்வாஸமாவது ஈர வெங்காயமாவது?
எவ்வளவு பார்த்திருப்போம், இச் சமூகத்தில் ரியலாகவும் திரைக்கதைகள் வழியும்?
அப்போ, நீதி, நேர்மை, நியாயம், உழைப்பு, விஸ்வாசம் எல்லாம்? அடப் போங்கய்யா!!