Sunday, September 25, 2011

இலவசமாம் இலவசம்!!


அன்று: இலவசம் இல்லையேல் ஓட்டு இல்லை, ஓட்டு இல்லையேல், உதய சூரியன் 'உதைய' சூரியனாகத் தகித்தது!!

இன்று: இலவசம் 'இலை'வசம் இல்லையேல் ஓட்டு இலைக்கு இல்லை. ஓட்டு இல்லையேல், இலை உதிர்ந்துவிடும்!!

சூரியன் குளிர்ந்தாலும் குளிராவிட்டாலும், அதன் அக்கினிக்கணைகளை சற்றே விலக்கிக் கொண்டாலும் (வான்மழைக்கு வழிவிட்டு); இலை உதிர்ந்தாலும் தளிர்த்தாலும் காய்ந்தாலும் பழுத்தாலும் வான்மழை மெய்த்தாலும் பொய்த்தாலும் தாமரை மட்டும் ஏன் இங்கே மலரவே மாட்டேன் என்கிறதே? ஓ, தாமரை மலர நிறையவே 'தண்ணீர்' வேண்டும், சூரியன் சற்றே கருணை காட்ட வேண்டும்; தாமரைக்கு மாற்றாக இங்கே அல்லி கூட இல்லை, இருந்தால் சந்திரனின் கருணைப்பார்வையில் அல்லி கூட சிலவமயம் மலர வாய்ப்புண்டு!!
ஆனால், தமிழகத்தின் கொடுமை, (ராமச்)சந்திரனின் கருணையால் 'அல்லி'ராஜ்யம் அல்லவா நடக்கிறது?

சரி, மாற்று வழியாக, மக்கள் தன் கையே தனக்குதவி என்று பலவிதக் 'கை'களைத் துணைக்கு அழைத்தால் ஒவ்வொரு கையிலும் பலவித விரல்கள் தனித்தனிக் கைகளாக அல்லவா வருகின்றன? அந்தப் பொய்க்கைகள் ஒருங்கிணைந்து ஒரே கையாக வரும் நாள் இனியும் இல்லை, இருப்பினும், கையூட்டு இல்லாமல் கையில்லை.

சூரியனும் இலையும் தாமரையும் கையும் சரியில்லை; ஆங்காங்கே அவ்வப்போது ஓடும் பம்பரங்களும் யானைகளும் சிறுத்தைகளும் நாடகத்தின் போக்கை முற்றாகத் திசைமாற்றவே உதவுகிறதேயன்றி, பொது வாழ்க்கையில் மனிதன் வாழ இவை போதாது, தேவையுமில்லை!!

ஜன நாயகம் ஒரு கேலிக்கூத்து!!


ஜன நாயகம் பண நாயகத்தின் முன் மண்டியிட்டுத் தலைவணங்கி பிண நாயகமாகி பல காலமாகி விட்டது!! பிணங்களின் கூட்டம்தான் அங்கே புதுதில்லி தலைமைச் செயலகத்திலும் ஆங்காங்கே உள்ள பிராந்தியத் தலைமையிடங்களிலும் கோலோச்சுகிறது. நாட்பட்டப் பிணங்களை பிணவறைகளிலிருந்து அவ்வப்போது ஆய்வுக்காக வெளிக்கொணர்வார்கள்; வாடை முற்றியதை ஏதோ ஒரு சடங்கு செய்து புறந்தள்ளுவதும் உண்டு.

அந்தப் பிணவறைகளில் ஒரு முறை வெளியே சென்ற பிணம் மீண்டும் வருவதில்லை, இறைவனின் கருணைப்பார்வையால் அது நடந்ததில்லை. ஆனால்,இங்கே இந்த பண நாயகக் கருணைப்பார்வை கொண்ட பிணங்கள் மீண்டும் மீண்டும் உலா வருகின்றனவே, இவற்றை ஆய்வுக்காக இல்லாவிட்டாலும், ஓய்வுக்காக வெளியேற்றும் நாள் என்று வரும்?
இந்த பிணங்களை எப்போது நாம் பாதாளச் சாக்கடைக்குள் தள்ளப்போகிறோம்?

ஓ, ஒன்று புரிகிறது. எந்த சமூகத்திலும் நாட்டிலும் துப்புரவாளர்களைப் போற்றுவதில்லை, கொண்டாடுவதில்லை, தீபாவளி பொங்கல் இன்ன பிற பண்டிகை நிமித்தம் அவ்வப்போது சிறிய அன்பளிப்பு தருவது தவிர!! அதனால் தானோ அந்த மாபெரும் துப்புறவுப் பணிக்காக வர வேண்டிய துப்புரவாளர் இன்னமும் நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாரோ?

கனியன் பூங்குன்றனாரோ யாரோ ஒருவர் சொன்னது:
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!!"

இதை இந்தப் பிணங்கள் சற்றே மாற்றிப்புரிந்துகொண்டுள்ளார்கள். அதனாலேயே, 'யாவரும் உற்றார் உறவினரே, யாவரிடமும் (கையூட்டுக்) கேளீர்!!' என்று அங்கிங்கெணாதபடி எங்கும் கையூட்டுப் பெறும் பரிணாமத்தை தத்தம் வர்ணாசிரமக் கடமையாகச் செய்கிறார்கள். இவர்களுக்கு கைப்பூட்டுப் போடும் நாள் எந்த நாளோ?

Wednesday, September 14, 2011

சேஷப்பய்யரும் அல்லக்கை மகாத்மியமும்!!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையில் யாரோ 

ஒருவர் பன்னாட்டு அறிஞர் பெர்னாட்ஷா இந்தக் கருத்தை 

கூறியிருந்தார். அதற்கு வாசகர் ஒருவர் அவர் பெர்னாட்ஷா 

இல்லை, ஷேக்ஸ்பியர் என்று மறுதலித்திருந்தார்.  வேறொருவர் 

சேக்ஸ்பியரா சேஷப்பய்யரா என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார். 

இதென்னடா புதுப்பெயராய் இருக்கிறதே என்று யோசித்தேன். 

ஓஹோ, ஷேக்ஸ்பியர்தான் சேக்ஸ்பியராகி 

சேஷப்பய்யராகிவிட்டாரா என்று தோன்றியது. நாம்தான் 

மாற்றியோசிப்பதில் வித்தகராயிற்றே என்று இதே ரீதியில் நமது 

கற்பனையைச் செலுத்தியதில்:

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' நாடகம் நினைவில் வருகிறது. 

ஒதெல்லொ? 

ஒத்து அல்லோ? ஒத்தை அல்லோ? ஒத்தை பிராமணன் அல்லோ? 

ஒற்றை பிராமணன் அல்லோ?

முன்காலத்தில் தமிழ் நாட்டு கிராமங்கள், சிற்றூர்களில் ஒரு 

வழக்கம் உண்டு. பிராமணர்கள் பெருவாரியாக  வாழ்ந்த 

அக்கிரஹாரத் தெருக்களில் வீட்டுக்கொரு முதியவர், 

பெரும்பாலும் பாட்டிகள் வயதான காலத்தில் வீட்டு முன் 

திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். வயது மூப்பின் காரணமாக 

அவர் ஓய்வெடுக்கவும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து குசலம் 

விசாரிக்கவும் வம்பு பேசவும் அது ஒரு வாய்ப்பாகக் கூட 

இருந்ததுண்டு. சில சமயங்களில் அந்தப் பாட்டிகளே வம்பு 

வழக்குகளுக்குக் காரணமாக இருந்ததுமுண்டு; அல்லது வம்பு 

வழக்குகளுக்கு நியாயம் சொல்லி சண்டைக்காரர்களைச் சேர்த்து 

வைத்த சம்பவங்களுமுண்டு. 

அந்த வீட்டு நடுவயது அம்மணிகள் ‍ அந்தப் பாட்டியின் அடுத்தத் 

தலைமுறை மகள்களோ மருமகள்களோ வீட்டுவேலைகளைக் 

கவனித்துக்கொள்வார்கள். இந்தப் பாட்டிகள் பெருவாரியாக 

சிறுவயதிலேயே பால்ய விவாகம் செய்து ஏதோ சூழ்னிலைகளில் 

கணவனை இழந்த கைம்பெண்களாகவே பெரும்பான்மையாக 

இருந்தனர். 

அந்த வீட்டு ஆண்கள் அந்தணர்கள் பெரும்பாலும் தன் 

வேலைகளைக் கவனிக்கவோ வேறு சொந்த வேலைகளைப் 

பார்க்க வெளியே செல்ல வாசலுக்கு வரும்போது இந்தப் 

பாட்டிகள்தான் சகுனம் பார்த்துச் சொல்வார்கள். 

வாசலில் தெருவில் போவோர் வருவோர் இந்தப் பாட்டிகளிடம் 

குசலம் நலம் விசாரித்துச் செல்வார்கள், இவர்களூம் அவ்வண்ணம் 

போவோரிடம் அரட்டை இத்யாதி செய்து பொழுதுபோக்குவதுண்டு. 

ஆண்கள் வெளியே செல்லும்போது யாராவது எதிரே வருவதைக் 

கவனித்து வருபவரின் பின்புலத்தை மனதில் கொண்டு, 'டேய் 

சபேசா, சுமங்கலி வரா, நல்ல சகுனம்தான், போகிற காரியம் 

நல்லபடியா நடக்கும், கிளம்பு!!' என்பார்கள். 

அல்லது, ஒரு அமங்கலிப் பெண் (கணவனை இழந்த கைம்பெண்) 

வந்தால், 'டேய் குப்பு, இப்போ போக வேண்டாம், உள்ளே போய் 

சிறிது தண்ணியோ நீர்மோரோ அருந்திவிட்டு பின் புறப்படு' 

என்பார்கள். கைம்பெண்கள் துர்ப்பாக்கியசாலிகள் என்று ஒரு 

பக்கம் பச்சாத்தாபமும் அனுதாபத்துடனும் பார்க்கப்பட்ட அந்தக் 

காலத்திலேயே அவர்கள் சுப காரியங்களில் கலந்து கொள்வதை 

இப்பெரியவர்கள் அனுமதிப்பதில்லை.

அதே நோக்கத்தில் நல்ல காரியத்திற்கு வெளியே செல்பவர்கள் 

அமங்கலிப் பெண் எதிரே வருவதை கெட்ட சகுனமாகவே 

கருதினர். 

அது மாதிரி திருமணமான ஆண்கள் தம்பதியாக வந்தாலோ 

தனியாக வந்தாலோ சுப சகுனமாகப் பார்க்கப்பட்டது. அதுவே, 

அது மாதிரி ஒற்றை பிராம்மணர் (அந்தணர்) வந்தால் கெட்ட 

சகுனமாகவும் கருதப்பட்டது. இதில் ஒரு தப்பான கண்ணோட்டம் 

எனக்குத் தெரிகிறது. 

பெரும்பாலும், திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் இருவராக 

வந்தால் சுப சகுனமாகவும் தனியாக ஒருவர் வந்தால் கெட்ட 

சகுனமாகவும் பார்க்கப்பட்டது. 
இது தவறு என்று எனக்குப்படுகிறது. இதில் ஒரு தெளிவு 

மக்களுக்கு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 

எப்படி கணவனை இழந்த கைம்பெண் வந்தால் அசுப சகுனமாகக் 

கருதினார்களோ, அது போல மனைவியை இழந்த ஆண் தனியே 

வரும்போதுதான் 'ஒற்றை பிராமணன்' வருகிறான் என்று கெட்ட 

சகுனமாகக் கருதினார்கள் என்று புரியும். 

இதைத்தான் பெரும்பாலும் தவறாகப் பலர் 

புரிந்துகொண்டுவிட்டார்கள், தனியாக ஒரு பிராம்மணர் வந்தால் 

கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் 

பிராம்மணர்கள் உத்தமமானவர்கள், உலக க்ஷேமத்திற்காக 

வேள்விகளும் யாகங்களும் செய்யப் பணிக்கப்பட்டவர்கள், 

அதற்காகவே சிறிய வயதிலேயே குறைந்த பட்சம் இரண்டு 

வேதமோ, மூன்று வேதமோ நான்கு வேதங்களையுமோ 

கற்றுணர்ந்து தங்கள் வாழ்வையே லோக க்ஷேமத்திற்காக 

அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று நம்பிக்கையுடன் 

பார்க்கப்பட்டவர்கள். அதனாலேயே அரசாங்கத்தினரும், 

ராஜவம்சத்தினரும் அந்தணர்களுக்கு சிறப்பு மரியாதை 

செய்ததுண்டு. 

இரண்டு வேதங்களைப் படித்துக் கற்றுணர்ந்த பண்டிதர்களை 

'த்விவேதி' என்றும், மூன்று வேதங்களை அறிந்த பண்டிதர்களை 

'த்ரிவேதி' என்றும் நான்கு வேதங்களையும் 

கரைத்துக்குடித்தவர்கள், மகா பண்டிதர்கள், விற்பன்னர்கள் என்று 

'சதுர்வேதி' என்றும் முற்காலத்தில் சொல்வார்கள். இதை 

அடியொட்டித்தான் வட நாட்டில் (உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற 

மானிலங்களில் காசி, கயா, அலகாபாத் போன்ற வடப் 

பிராந்தியங்களில்) பலர் பெயருக்கு முன் த்விவேதி, த்ரிவேதி, 

சதுர்வேதி என்று அறியப்பட்டனர். தென்னிந்தியாவில் அப்படி 

அவர்கள் அறியப்பட்டதில்லை. பெரும்பாலும் தங்கள் பெயருக்கு 

முன்னால் சைவ வழி வந்தவர்களென்றால் 'அய்யர்' அல்லது 

'ஐயர்' என்றும் வைணவ வழி வந்தவர்களென்றால் 'ஐயங்கார்' 

அல்லது 'அய்யங்கார்' என்றும் சில சமூகங்களில் 'ஷர்மா' 

அல்லது 'சர்மா' என்றும் அறியப்பட்டார்கள். 

அப்படி மதிக்கப்பட்ட பிராம்மணர் ஒருவர் எதிரே வந்தால் அது 

எப்படி அசுப சகுனமாக இருந்திருக்க முடியும்? என்வே கணவனை 

இழந்த கைம்பெண் எப்படி கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டாரோ, 

அது போலவே மனைவியை இழந்த ஆணையும் கெட்ட 

சகுனமாகவே பார்த்திருக்கக் கூடும் என்று லாஜிக்கலாக எனக்குத் 

தோன்றுகிறது.  

அது போகட்டும். சொல்ல வந்தது வேறு. 

அந்தக் காலங்களில் பெரும் பணக்காரர்களுக்கு நம்பிக்கையான ஊழியராக, கணக்கராக, நிர்வாக அதிகாரியாக இருந்தவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்த மனைவியை இழந்த ஆணாகத்தான் இருந்தனர். அந்த நபருக்கு குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஒரு பெரிய குடும்பம் இருந்த சூழ்னிலையும் உண்டு. சில நேரங்களில் சிலர் வாரிசுகள் இல்லாத தனி ஆளாக இருந்திருக்கிறார்கள். 

இந்த மாதிரி நபர்கள் அந்தப் பணக்காரர்களின் பெருவாரியான வேலைகளை ஒரு தனியதிகாரி அந்தஸ்தில் திறம்பட நிர்வகித்தும் உள்ளார்கள். இந்த மாதிரி ஆட்கள் அந்தப் பணக்காரர்களின் வலது கரம் போல் கருதப்பட்டார்கள், இவர்களை மீறி பணக்காரரின் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கக்கூட முடியாது, அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் உள்பட. அந்த அளவுக்கு நம்பிக்கையான கையாட்களாக இவர்கள் பார்க்கப்பட்டார்கள். 

பிராமண சமூகம் மட்டுமல்ல, மற்ற சமூகத்தினரிலும் பெருவாரியாக பணக்காரர்கள் பண்ணையாராகவும் ஊர் மிராசுதாராகவும் மணியக்காரராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தனியதிகாரி எல்லா சாதியிலும் உண்டு. 

அந்தக் கையாட்கள் கையாள் என்கிற ரீதியில் பார்க்கப்பட்டார்கள். சில நேரங்களில் சில பணக்காரர்கள் கெட்ட சகவாசத்தினாலோ தனக்கே உரிய கெட்ட நடத்தை ரீதியாகவோ நல்லதும் கெட்டதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. அப்போதெல்லாம், இந்த கையாட்கள்தான் முன்னிருந்து இவர்களின் பாதுகாவலராக இருப்பார்கள்.  

பொதுவாக எந்த ஒரு திருமணமான ஆணுக்கும் அவர்தம் மனைவிதான் வலதுகரம் போல் செயல்படுவார்,இருப்பார், தார்மீக ரீதியில். அந்த மனைவியை வலக்கரத்தை இழந்தவரை கைஅல்லாதவர் என்ற அர்த்தத்தில் பார்த்தால் கைஅல்லன், அல்லக்கை என்றும் பொருள் கொள்ளலாம். 

காலப்போக்கில் இந்த சமூகத்தில் எல்லாப் பெருந்தனக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தனி அதிகாரி போல் ஒருவர் அல்லக்கையாக ஒருவர் இருப்பார். 

இப்போது புரிகிறதா இக்கட்டுரைத் தொகுப்பின் உள்ளர்த்தம்?

அல்லக்கைகள் என்று பெரும்பாலும் அறியப்படுபவர்கள் தங்கள் தலைவர் எங்கே போனாலும் கூடவே போய் அவருக்கு நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் கூடவே பாதுகாவலராக அரணாக இருப்பார்கள். இதுதான் அல்லக்கை மகாத்மியம் என்று நான் கருதுகிறேன்.  

Tuesday, September 13, 2011

உடை உடை எல்லாம் உடை!!

Referring to below blog post by Uthaya Suriyan, I had responded as under:

This post is partly an extract from that blog, and the rest my own further thoughts that I felt as a continuum here (blogged instead here).
http://pusuriyan.wordpress.com/2011/07/29/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/#comment-281


  1. 1) அடப் போங்க சார், ச்சும்மா பொழுதுபோகாமல் இரு வேலைகளுக்கு இடையே வேறு என்ன செய்யலாம் என்று தற்செயலாக உங்கள் பதிவுகளை வேறு வேறு தலைப்புகளில் வலையுலா செய்துகொண்டிருந்ததில் இந்தப் பதிவும் என் கண்ணில் பட்டது. என்னை சற்றே என் பாணியில் கதைக்கத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.
    கலாசாரம், நாகரீகம், பண்பாடு இத்யாதிகளை மீறி யோசித்ததில்:
    ஒரு ஊரின் அல்லது பிரதேசத்தின் உடை மற்றுமொரு பிரதேசத்தில், ஏன் வேறு நாட்டில் கூட வெவ்வேறு பார்வைகளில் பார்க்கப்படுகிறது.
    13 14 அவகைகளுக்குள் பெண்கள் (சிறுமிகள் எனலாமா?) மிடி அல்லது குட்டைப்பாவாடை என்று போடுவார்கள். நம் ஊரில் அது சாதாரணம், குற்றமாகக் கருதப்படாது, பொதுவாக எந்த ஊரிலும். சிங்கப்பூரில் சிறுமி, குமரி, வாலைக்குமரி, பணிக்குப்போகும் பெண்கள், முதிர்கன்னிகள் என்று வயது பிராயம் வித்தியாசமில்லாமல் அணிவது சகஜமானது (இலங்கை அல்லது சீன மரபு வழியாக இருக்கலாம்.
  2. 2) நமக்கு அருவருப்பாகத் தெரிவது பிறதேசத்தவருக்கு அப்படித் தோன்றவேண்டும் என்று கட்டாயமில்லை. சிங்கையில் சிலர் அணிந்துவரும் உடைகளைக் கண்டால் நமக்கு வாயல்ல, கண்ணல்ல, முழு அங்கமுமே கூசும், அதுவும் உள்ளாடை என்று ஒன்று உள்ளது என்று இந்தப் பெண்களுக்கெல்லாம் தெரியாதா ? இல்லை, ஏன் இந்த கள்ளாடைப் பட்டவட்டமான பரிவர்த்தனம் என்று கேட்கத் தோன்றும், எம்.ஆர்.டி அல்லது பேருந்தில் செல்லும்போது பலவமயம் நான் எனக்குள் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் கூச்சம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்களோ என்று தோன்றும். கூடவே நம்மூர் பெண்களின் குணாதிசயத்தை ஒப்பீடு செய்யும் மனது. என்னதான் நம் பெண்கள் பெருவாரியாக முழுவதும் தன்மையாக, பண்புடன் ஆடை அணிந்துவந்திருந்தாலும், எதிரே ஓர் ஆள் வருகிறார் என்றதும் (அவரது வயது வித்தியாசம் பாராமல்) நம் பெண்கள் முதலில் செய்வது முந்தானையை அல்லது தலைப்பை அல்லது துப்பட்டாவை கொஞ்சம் சரிசெய்வார்களே, இதெல்லாம் காலங்காலமாக நமது இரத்தத்தில் ஊறியது. நீங்கள் கேட்கலாம், தற்காலப் பெண்கள் இதுமாதிரி இருக்கிறார்களா என்று.
  3. 3) நாகரிக உலகில் உடை என்பதில் நகரம், கிராமம், சிற்றூர், பேரூர், மா’ நகரம், நாடு கடந்த வித்தியாசமில்லாமல் தேச எல்லைகளுக்குட்படாத இந்தக்காலத்துப் பெண்கள் துணிவிஷயத்தில் துணிந்துசெய்யத் துவங்கியுள்ளதை நான் இப்படிப் பார்க்கிறேன்.
    இதை ஒரு ந‌வீன‌ உடை ஆத்திச்சூடி என‌லாமே, (அவ்வை ம‌ன்னிப்பாராக‌!!).
    1.கலாசாரம் என்பதெல்லாம் உடை
    2.பண்பாடு, கட்டுப்பாடு, எல்லாம் உடை
    3.சமூகக் கோட்பாடுகளை உடை
    4.சமயக் கோட்பாடுகளை உடை
    5.நாகரிகமாக அணிவதே உடை(அது அனாகரிகமாக இருப்பின், காண்பவர் குற்றம்)
    6.அம்மா அத்தை சித்தி பெரியம்மா சின்னம்மா, பாட்டி, முப்பாட்டி அணியாததெல்லாம் உடைத்தெறிந்து உடை விஷயத்தில் எதையும் உடை
    7.உடை உடை எல்லாவற்றையும் உடை
    8.உடை உடை எதுவேண்டுமானாலும் துணியாக (கைக்குட்டை கூட உடைதான்) அணியத் தயங்காமல் உடுத்து, உன் உடை
    9. உடைதனில் துன்பம் உடைத்தாயின் உன் தாயின் நினைவில் மாற்றான் கருத்தை உடை
    10. மரபை உடை
    11. உடை விஷயத்தில் எந்த மண்ணாங்கட்டி என்ன சொன்னாலும் அந்த மண்ணாங்கட்டிகளை உடை உடை என்று உடை
    12. தடையில்லை எமக்கு எது உடை என்பதில், இடையில் உடையென்று ஒன்று இல்லாதிருப்பினும் காண்பவன் கருத்தினை உடை, முடிந்தால் அவன் முதுகெலும்பை உடை
    13. லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்: இது நம் உடம்பு (மெய்). மெய் மெய் இது பொய் பொய் என ஆன்றோர் என்னதான் சொன்னாலும் மெய்யைப் பேணுவதில் எத்தனைப் பொய்கள் வேண்டுமானாலும் செய், அதில் இடையில் உடை என்பதே இல்லாமல் இடையிடையே உடை இருப்பினும் இல்லாவிடினும் உடை என்பதில் எதையும் உடை


4) சூரியன் சார், கடந்த பதிவுகளில் அவ்வையின் ஆத்திச்சூடியை ‘மிமிக்’ செய்ய முயன்றேன், ரசித்தீர்களா தெரியலை?
கூடவே, கொஞ்சம் அதீத உரிமை எடுத்துக்கொண்டு சற்றே வள்ளுவனையும் கொஞ்சம் அகத்தையும் கொஞ்சம் புறத்தையும் (அக நானூறு, புற நானூறு) சீண்டிப் பார்த்தேன், கற்பனைக்குதிரையை ஓட்டினேன், உடை தொடர்பாக, என் எண்ண ஏட்டில் வந்த விடைகள் இங்கே. உரிமை மீறலுக்கு வருந்துகிறேன் (தங்கள் வலைப்பதிவில் சற்றே மிகையாக என் வலைப்பதிவும் கூட்டணி பெற விஞ்சுகிறதோ என்று ஐயம் வரலாம், இதை இனி குறைத்துக்கொள்ள முயலுகிறேன்).
//எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு//
நம் நாகரிக யுவதிகள் இக்குறளைச் சற்றே புலம்பெயர்த்து தவறாகப் புரிந்து கொண்டார்களோ?
நாம் அணியும் உடை கண்ணுற்று யார் என்னென்ன சொல்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? யார் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள்? பாராட்டுக்கள் பலவிதமா? ஷொட்டுக்கள், திட்டுக்கள், குட்டுக்கள் எவை மிகுதியாக உள்ளன?
ஷொட்டுக்கள் டானிக் (குளிகை) மாதிரி, மிகையானாலும் அன்றிலும், அப்படியே விட்டுவிடலாம்.
குட்டுக்கள் மிகையானால் காண்பவனை எப்படிக் குதறலாம்?
திட்டுக்கள் மிகையானால் தீவிரமாக நடவடிக்கை தேவை. என்னென்ன செய்யலாம்?

குட்டுபவனை குர்பானி செய்து குயின்ஸ்லாந்துக்கு அனுப்பலாம்
திட்டுபவனை தீவிரவாதியாக்கி திகாருக்கு அனுப்பலாம். 


ஷொட்டுபவனில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு வாரம் உடையில்லாமல் ஷெய்சல்ஸ் தீவில் உல்லாசமாக உற்சாக பானமேற்றி, அவனிஷ்டப்படி ஒய்யார நடை போட்டு உடைதனில் ஊழல் செய்யாமல் மெய்யாலுமே மெய்வழிச்சாலை நோக்கி அரங்கேற்றலாமே?


மெய்வழிச்சாலைக்குள் பயணமானால், பயணத்தை எந்த மொழியில் பேணிப்பேணி உல்லாசம் காணுவது? 


இருக்கவே இருக்கிறது நம் தாய்மொழி நற்றமிழ். 


சற்றே செந்தமிழில் உடை பற்றி தமிழை உடைக்காமல் உலா வரலாமா?
***********************************************************************************




எச்சரிக்கை: 
தமிழ் இலக்கணம், எதுகை, மோனை, பண், எண் சீர் விருத்தம், சந்திப்பிழை, சந்தப்பிழை, இன்னபிற சொற்குற்றம் பொருட்குற்றம் மன்னிக்கப்படுவதாக!! 


========================================================================



தேம‌துர‌த் த‌மிழோசை அலையோசையில் மெல்லிசையாய் ஆங்கொலிக்க‌
தூம‌துர‌க் குயிலோசை ப‌ண்ப‌லையில் இன்னிசையாய் ஈங்கொலிக்க‌

பள்ளு தமிழில் விண்ணதிர பல்லாங்கு நீ பாட‌
எள்ளு தமிழில் மண்ணதிர பொல்லாங்கு நான் புரிய‌

துள்ளு தமிழில் தித்திக்கும் தேன்பாகை நீ அளிக்க‌
தெள்ளு தமிழில் எத்திக்கும் தேனருவியில் நான் குளிக்க‌




பைந்தமிழாம் பைங்கிளி பண்பாட அருகிருக்க 
பூந்தமிழாம் பொன்னாடை எதற்கு ? பையப்பைய விலக்கு!!




செம்மொழியாம் தமிழ் இருக்க செவ்வாடை எதற்கு?
நற்றமிழாம் நாவிருக்க நாணலாடை எதற்கு?









கற்ற தமிழ் நினைவிருக்க கந்தலாடை நமக்கெதற்கு?
உற்ற தமிழ் ஒருங்கே கவி நடம்புரிய கூந்தலாடை உனக்கெதற்கு?





சந்தத் தமிழ் சிருங்காரமிட இடையிடையே
சந்தித் தமிழ் உடைச் சேதாரம் நமக்கெதற்கு?




செம்மொழியில் சேதாரமில்லாமல் ஞானப்பால் நான் ப‌ருக‌
மும்மொழியில் கோசார‌மில்லாம‌ல் ஏன‌ப்பால் நீ போகிறாய்?


இசைத்தமிழ் ஆங்கொலிக்க இன்னிசை பாய்ந்தோட‌
விசைத்தமிழ் எம் மெய்பாட உன்னிசை ஓய்ந்தோட 


பாச‌த்தமிழ் நம் உடனிருக்க கனனிப் பஞ்சாடை நமக்கெதற்கு?
நேசத்தமிழ் நம் நாவிருக்க கன்னித் துள்ளலாடை உனக்கெதற்கு?





உற்ற‌ த‌மிழ் ந‌ம்மிடையே நாவூற‌, நாண‌லாடை ந‌ம‌க்கெத‌ற்கு?
பெற்ற‌ த‌மிழ் உன்னிடையே பேயாட்ட‌மாட, 
பெண்ணே நீ பொன்னாடை வில‌க்கு. 


இல‌ட்சிய‌ம் ந‌ம்மை இல‌க்கு நோக்கி ஈர்க்கும்போழ்து
உடை இல‌க்க‌ண‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு?


இல‌க்க‌ண‌த்த‌மிழ் எத்துணைதான் ப‌யின்றாலும் ச‌ற்றே
இல‌க்க‌ண‌ம் மீறுவ‌தில் உற்சாக‌ம் கொள்ளேன், க‌ண்ணே!!




பைந்தமிழில் பொழுதெல்லாம் பண்ணிசை நான் பாட 
பொன்னாடை நீ விலக்கினால் சேர்ந்திசையாகுமே கண்ணே!!




இயற்றமிழில் இழைந்தோடும் இன்னிசையில் 
உயற்றமிழில் நாம் பாடுவோமே பண்பாட்டின் பறையடி!!


பறையடிக்க மெய்யிடித்து மெய்வலிக்க மெய்யிழுத்து
கறையிடிக்க‌ பொய்க்காலில் பொய்வேஷம் போடுவோமே, 
மெய்யாலுமே மெய்வேஷம் அகற்றுவோமே!!


ஈன்றமிழில் அன்னை முலைப்பால் ஈகையிலே அவள் உடைவிலக்கி 
ஊன்றமிழில் அவள் மெய்வலிக்க நாம் தந்த சுமையை அவள் விலக்கினாளா?


ஈன்றமிழில் உந்தன் காமப்பால் ஊறையிலே உன் உடைவிலக்கி
ஊன்றமிழில் எந்தன் ஏமப்பால் நீ பருக நம் சுமையை யார் வில‌க்குவாரோ?



ஆதிமனிதன் ஆவலோடு ஆப்பிளை அருந்தினான், இங்கே
பாதிமனிதன் கூவலோடு உன் கன்னத்து ஆப்பிளை விருந்தோம்பினான்.

மீதிமனிதன் ஏவலோடு உன் மெய்வருத்தக் கூலி  எனக்கெதற்கு?
மீதிமனிதள் ஆவலோடு என் மெய்பருகக் கேலி உனக்கெதற்கு?

அருட்பாவை முன்னிருக்க மருட்பார்வையுடன் 
பொருட்பாவை என்னிலிருக்க மெய்ப்பாவை நீ பருகு!!

காமத்துப்பாலை நீ அருந்த மிச்ச சொச்சமுள்ள‌
காமத்துப்பாலை நான் அருந்த எச்சமிடாமல் ஏகடியம் யார் செய்வது?

விசைத்தமிழ் உந்தன் உள்ளீடே பாய்ந்தோட உன் செல்ல‌

வசைத்தமிழ் எந்தன் உள்நாவில் நடமிட, காண்போமே காதற் காவியம் !!



எண் சாண் உடம்பின் இணை சேர் பொருத்தம் முக்கியமா?
முன்பின் ஏன் இங்கே எண் சீர் விருத்தம், அவசியமா?


ஒரு ஊதாப்பூ மலரும் முன் கண் சிமிட்டுகிறது,
மறு ஊதாப்பூ மலர்ந்த பின் மெய் சிலிர்க்கிறது!!


ஒரு ஊதாப்பூ உதிரும்முன் உவகை கொள்கிறது,
மறு ஊதாப்பூ உதிர்ந்த பின் உலகை வெல்கிறது!!



ஒரு ஊதாப்பூ உலரும் முன் பேருண்மை காண்கிறது,
மறு ஊதாப்பூ உலர்ந்த பின் பேராண்மை உணர்கிறது!!