Saturday, May 8, 2021

எங்கே பிராமணன்?

 || பிராம்மணர்களை மதிக்கும் 

அனைவரும் கூட படிக்கலாமே ||


துவேஷம் இன்றி.


பிராம்மணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்..?


பாரத தேசத்தில் பல குலங்கள் உள்ளன. பல அமைப்புகள் உள்ளன. 


இவர்களுள் பிராமணர்கள் யார்? 


இவர்களின் தோற்றம் எப்போது நிகழ்ந்தது? 


பிராமணர்களால் உலகிற்கு என்ன நன்மை? 


இவை பற்றி சில விஷயங்களை நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நம் இந்துக்களுக்கு உள்ளது.


இதைப் பற்றி கூறும் முன்பு சில கேள்விகளை கேட்டுக் கொள்வோம். 


இவற்றுக்கான பதில்கள் அனைவம் அறிந்ததே !.


முதல் கேள்வி – உலகின் முதல் புத்தகம் எது..?


பைபிளா? இல்லை. ராமாயணமா..? இல்லை. குரானா..? இல்லை. மகாபாரதமா..? இல்லை. 


மகாபாரதம் முதல் புத்தகம் இல்லை என்பதால் பகவத் கீதையும் முதல் புத்தகம் இல்லை.


பிரபஞ்சத்தில் முதன் முதல் மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே ஒரு நூல் தோன்றியது. 


அதன் பெயர் வேதம். அந்தப் புத்தகத்தின் பெயர் ருக் வேதம். 


மீதி நூல்களுக்கு நம்மால் உடனே கால நிர்ணயத்தைக் கூறிவிட முடியும். 


பைபிள் 2013 ஆண்டுகள் பழமையானது. நியூ டெஸ்டமெண்ட். 


ஓல்ட் டெஸ்டமெண்ட் மோசஸ் ஆப்ரஹம் காலத்தைச் சேர்ந்தது. 


குரான் 1400 ஆண்டுகள் பழமையானது. பகவத்கீதை கிமு 3000 ஆண்டுகள்.


ருக் வேதத்தின் காலம் என்ன..? யாராலும் சரியான பதில் அளிக்க முடியாது. 


வேதம் எப்போது பிறந்தது என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. 


தெரிந்து கொள்வதற்காக சில முயற்சிகள் நடந்தன. 


ஆனாலும் கண்டறிய முடியவில்லை.


வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உள்ளது. 


ஸ்ரீராமர் வேதத்தை வசிஷ்டரிடம் பயின்றார். 


வேதம் முதன்மையானதா? ராமாயணம் முதன்மையானதா? 


வேதத்தின் காலம்தான் புராதனமானது. ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி என்ற ருஷியின் ஆசிரமத்தில் வேத அத்யயனம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. 


அதனால் வேதத்தின் காலம் ஸ்ரீகிருஷ்ணருக்கும் முற்பட்டது. 


அதனால் உலகில் முதல் நூல் எது என்றால் அது ருக் வேதமே!


அடுத்த கேள்வி – வேதங்கள் எத்தனை..? மொத்தம் நான்கு. 


ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு. 


வேதங்களில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 


இவற்றுக்கு த்ரயி என்றொரு பெயர் உண்டு. 


த்ரயி என்றால் மூன்று என்று பொருள். 


வேதங்கள் மொத்தம் நான்கல்லவா..?


த்ரயி என்று எவ்வாறு பெயர் வந்தது? 


த்ரயி என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு.


ருக் வேதம் செய்யுள் வடிவில் உள்ளது. 


யஜுர் வேதம் உரைநடை வடிவம் கொண்டது. 


சாமவேதம் பாடல் வடிவம் கொண்டது. அதனால் செய்யுள் உரைநடை கானம் என்று மூன்று விதமாக இருப்பதால் இவற்றுக்கு த்ரயி என்று பெயரிட்டார்கள் என்பது ஒரு விளக்கம். 


இதற்கு பல விளக்கங்கள் உள்ளன.


அடுத்த கேள்வி – பிராம்மண குலம் எதற்காக ஏற்பட்டது..? 


வேதங்களை பாதுகாப்பதற்காகப் பிறந்தது. 


சோமகாசுரன் என்பவன் வேதங்களை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். 


அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு வேதங்களை இரட்சித்தார். 


இது மத்ஸ்யாவதாரத்தில் உள்ள ஒரு புராணக்கதை. 


இக்கதையின் பொருள் என்ன..? 


வேதங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது சமுதாயத்தில் துயரம் நிலவும் என்பதால் வேத ரட்சணைக்காக பகவான் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது தசாவதாரங்களின் பிரதானமான காரணம்.


பிராமண சமூகம் முதலில் எதற்காகத் தோன்றியது..? 


வேதங்களை இரட்சித்து போற்றி பாதுகாத்து பரப்புவதற்காக. 


இது எந்த சந்தேகமுமற்ற பதில். இதில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை. 


நம் முன்னோர்கள் இந்த வேலையைத்தான் செய்து வந்தார்கள்.


புருஷ சூக்தத்தில் ஒரு மந்திரம் உள்ளது. 

“ப்ராஹ்மணோ அஸ்ய முகமாஸீத்

பாஹூ ராஜன்ய: க்ருத: I

ஊரு ததஸ்ய யத் வைஸ்ய:

பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: II

சந்த்ரமா மனசோ ஜாத: 

சக்ஷோ சூர்யா அஜாயத II” – இது ஒரு குறியீட்டு விளக்கம். 

அதாவது அலங்காரம். 


யாருடைய அலங்காரம்? 


சமுதாய புருஷனை ஒரு மனிதனாக உருவகப்படுத்தியுள்ளார்கள்.


நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன. 


அவற்றுள் முகம் என்பது அறிவின் இடம். முழு நரம்பு மண்டலமும் தலையில் உள்ளது. 


காலில் முள் குத்தினால் செய்தி தலைக்குச் செல்கிறது. 


அதனால் அறிவுக் கூர்மை உடையவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.


ஒரு கம்பெனியையோ அமைப்பையோ எடுத்துக் கொண்டால் அதில் நான்கு பிரிவுகள் இருக்கும். 


திட்டமிடல் பாதுகாப்பு பொருளாதாரம் தயாரிப்பு. 


இவையே பிராமணர் சத்திரியர் வைசியர் மற்றும் சூத்திரர். 


இவ்விதம் முழு சமுதாயத்தையும் நம் முன்னோர் திட்டமிட்டு வகுத்தார்கள். 


ஒரு Symmetrical சமச்சீரான அமைப்பை ஏற்படுத்தினார்கள். 


ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். 


இல்லாவிட்டால் அது சீரழிந்து விடும். 


பொருளைத் தயாரிக்க பொறியியல் திறமை வேண்டும். 


மூளை வேலை செய்ய வேண்டும். பின்னர் அதனை சீராக விநியோகிக்க வேண்டும். 


இந்த கண்ணோட்டத்தில் நம் மூதாதையர் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு சமூகங்களை புராதன காலத்தில் ஏற்படுத்தினார்கள். 


இந்த மந்திரத்திற்கு இதுதான் பொருள்.


இவர்களில் யார் உயர்ந்தவர்கள்..? கால்கள்தான் உடலைத் தாங்குகின்றன. 


அவை சரியாக வேலை செய்யாவிட்டால் சரீரம் சரியாக உபயோகமாகது. 


அதனால் கால்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். 


தொடைகளின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். 


புஜங்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். 


மொத்த உடலுக்கும் ஸ்கீமிங் மற்றும் பிளானிங் தலையில் உள்ளது. 


அதனால் மூளையின் ஸ்தானத்தில் பிராமணர்கள் உள்ளார்கள். 


இது புராதன காலத்தில் ஏற்பட்ட ஒரு சிஸ்டம்.


இந்த சிஸ்டம் பாரத தேசத்தில் மட்டுமல்ல. 


உலகனைத்திலும் உள்ளது. கிரேக்க தேசத்தில் கூட இவ்விதமே உள்ளது. 


பழைய கிரேக்க நூல்களில்… இலியட் போன்றவற்றில்…. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களின் நூல்களில் இதே போன்ற வகைப்படுகளே கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 


நாகரீகம் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இத்தகைய திட்டமிடல், சமச்சீரான வகைப்பாடு காணப்படும்.


மந்திரம் படிக்கும் பொது இறுதியில் ஆசீர்வசன மந்திரம் ஒன்று வரும்.


“சர்வே ஜனா: சுகினோ பவந்து 

ஸர்வே ஸந்து நிராமயா I

ஸர்வே பத்ராணி பஸ்யந்து

மாகச்சித் துக்க: பாக்பவேத் II” – என்று கூறி இன்னொரு மந்திரமும் கூறுவோம்.


“கோ ப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் 

லோகா சமஸ்தா சுகினோ பவந்து II” 

– என்ற இந்த மந்திரத்தில் பசு மாடுகளும் பிராமணர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்று வருகிறது.


ஆயின் பிற விலங்குகள் சுகமாக இருக்கத் தேவையில்லையா? 


பிராமணர்கள் மட்டும் சுகமாக இருக்க வேண்டுமா? 


பிற சமூகத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டாமா? 


என்று ஒரு வினா கிளம்புகிறது. 


இதற்கு பதில் என்னவென்றால் பசுவும் பிராமணனும் பாதுகாப்பற்ற சமூகமாக தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளார்கள். 


புலியும் சிங்கமும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடியவை. 


பசு தன்னைத் தானே காத்துக் கொள்ள இயலாத ஸாதுப் பிராணி. 


எனவே பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசு இனத்தைக் காப்பாற்றினால் அனைவருக்கும் பால் கிடைக்கும்.


பிராமணன் என்பவன் வேதங்களை ரட்சித்து பாதுகாக்கப் பிறந்தவன். 


பிராமணன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வலிமையற்றவன் என்பதால் மீதி உள்ள சமுதாயம் அனைத்தும் சேர்ந்து அவனை பாதுகாக்கவேண்டும். 


பாலும் வேதமும் அனைவருக்கும் பயன்படுவது. 


பிராமணன் தர்மப் பிரச்சாரம் செய்பவன். அதனால் அவனை சரியாக பாதுகாக்கா விட்டால் சமுதாயத்தில் தர்மப் பிரசாரம் நடைபெறாமல் சமுதாயம் சமச்சீர் நிலையை இழந்து விடும். 


வேத பிரச்சாரத்திற்காக பிராமணன் பாதுகாக்கப்படவேண்டும்.


சிலரின் ‘சர்நேம்’ எனப்படும் வீட்டுப் பாரம்பரிய பெயர்களைப் பார்த்தால் அதன் மூலம் சில விவரங்கள் புரியும். 


வட இந்தியாவில் சிலர் ‘த்விவேதி’ என்ற சர்நேம் கொண்டிருப்பார்கள். 


அவர்கள் இரண்டு வேதங்களில் சிறந்து விளங்குபவர்கள். ‘த்ரிவேதி’ மூன்று வேதங்களை அறிந்த குடும்பங்கள். ‘சதுர்வேதி’ நான்கு வேதங்களில் சிறந்த குடும்பங்கள். 


‘உபத்ரஷ்டா’ என்ற குடும்பத்தார் யாகங்களை நடத்துபவர்கள். 


இவ்விதம் வீட்டுப் பெயர்களைக் கொண்டே இவர்களின் பூர்வீகர்கள் வேதங்களை எவ்விதம் காத்து வந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. ‘வேதம்’ என்னும் சர்நேம் கொண்டவர்களும் உள்ளார்கள்.


இவ்விதம் பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஒரு சமுதாயம் பாரத தேசத்திலிருந்தது. 


மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புக்குப் பிறகு நம் சமுதாயம் முழுவதும் பிரஷ்டமாகிவிட்டது… வீழ்ச்சியடைந்து விட்டது.


தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம். 


இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு கலெக்டர் இருந்தார். 


இது மதராஸ் அல்லது மதுரையில் நிகழ்ந்தது. 


அந்த கலெக்டர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 


அங்கு ஒரு தாசில்தார் எதிர்ப்பட்டார். அவர் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். 


கலெக்டரின் அருகில் ஒரு குமாஸ்தா இருந்தார். 


கோப்புகளைச் சுமந்துகொண்டு கலெக்டரின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். 


முதலியாரும் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் பணிபுரிபவர். 


கலெக்டர் முதலியாரைப் பார்த்ததும், “ஹவ் டூ யு டூ, மிஸ்டர் முதலியார்?” என்று அவரோடு கைகுலுக்கினார்.


 “ஐ ஆம் ஓகே சார்!” என்று கூறி முதலியார் கலெக்டருக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தார். 


அதன்பின் முதலியார் செய்த செயலைப் பார்த்து கலெக்டருக்கு மூளை கலங்கியது கலெக்டரின் அருகிலிருந்த குமாஸ்தாவைக் கண்டதும் முதலியார் சாலையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பாத நமஸ்காரம் செய்தார்.


கலெக்டர் வினவினார், “மிஸ்டர் முதலியார்..! 


நான் உன்னுடைய பாஸ். 


இவர் என்னுடைய கிளர்க். 


ஆனால் நீ எனக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தாய். 


ஆனால் இவர் முன்னால் மண்டியிட்டாய். ஏன்?” என்று கேட்டார். 


அதற்கு அந்த முதலியார் கூறிய பதில் அந்த ஆங்கிலேயரை யோசிக்க வைத்தது.


“சார்! நாங்கள் இப்போது ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பணியாளர்களாக சேர்ந்துள்ளோம். 


வயிற்றுப் பிழைப்புக்காக உங்களிடம் வேலை செய்கிறோம். 


நீங்கள் எங்கள் பாஸ். ஆனால் இந்த கிளார்க் எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய குரு. 


இவர் ஒரு பிராமணர். 


இவர்களின் மூதாதையர் எல்லோரும் எங்கள் மூதாதையர்களுக்கு சம்பிரதாயமாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 


இவர்கள் பாதங்களில் நாங்கள் விழுந்து வணங்குவது எங்களின் சம்பிரதாயம். நீங்கள் வெறும் பாஸ் மட்டுமே. 


அதனால் ஷேக் ஹேண்ட் கொடுத்தேன்.இது எங்கள் பாரதிய கலாச்சாரம்” என்றார்.


உடனுக்குடன் அந்த கலெக்டர் இந்த சம்பவத்தைப் பற்றி லார்டு மேக்காலேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 


“பிராமண சமூகம் பாரத தேசத்தில் மதிக்கப்படும் வரையில் நாம் இந்தியாவில் நாம் அரசாட்சியை நிறுவ முடியாது. 


நம் வேர் இங்கு தரையைத் தாண்டி கீழே பாயாது.


 பிராமணர்கள் பிற சமூகத்தால் மதிக்கப்பட்டால் நம்மால் இந்துத்துவத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இயலாது” என்று எழுதினார்.


இந்தக் கடிதம் லண்டனிலிருந்த மேக்காலேவுக்கு பிப்ரவரி 2 , 1835 அன்று கிடைத்தது. 


உடனுக்குடன் பதில் வந்தது. “இந்திய சமுதாயத்தை அழிப்பதற்கு வழி தேடுங்கள்!


 பாரதிய கலாச்சாரத்தையும் ஹிந்துக்களின் வாழ்க்கை வழி விதங்களையும் எவ்வாறு அழிப்பது என்று யோசியுங்கள்..! 


அவசரமாக முதலில் பிராமண வகுப்பை இந்தியாவிலிருந்து அழித்து ஒழிக்க வேண்டும்” என்ற பதில் பிரிட்டனிலிருந்து வந்தது.


அதன் பின் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்நாட்டில் பிராமண இனத்தை அழிக்கத் தொடங்கினர். 


அது இந்தியாவின் பிற இடங்களுக்கும் தொடர்ந்து. 


இதுவே பிராம்மண இனத்தின் அழிவிற்கு வித்திட்ட நிகழ்ச்சி..!


தற்போது நாம் எல்லாம் ஏதோ கொஞ்சம் பிராம்மணர்களாக வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். 


நம்மில் பலருக்கு சாப்பாட்டுக்கு குறையில்லை.


ஆனால் பிராமணர்கள் அனைவரும் அவ்வாறு அல்ல. 


பிறரிடம் கையேந்தும் நிலையில் பலர் உள்ளனர். 


மிக மிக ஏழ்மையில் வாடுகிறார்கள். பிராமணன் என்றால் சமையல்காரன் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. 


அதுவும் ஒரு கௌரவமான வேலைதான் உணவளிக்கும் பணி.


மேற்கு கோதாவரி மாவட்டத்தில் முங்கொண்டா என்றொரு கிராமம் உள்ளது. 


இந்த கிராமத்தில் பிராம்மணக் குடும்பங்கள் நிரம்பியிருந்தன. 


அனைவரும் வேத பண்டிதர்கள். 


இன்று அங்கு சென்று பார்த்தால் அவர்களைக் காண முடியவில்லை. 


என்ன ஆனார்கள்..? 


வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடி சென்று விட்டார்கள். 


பறவைகளைப் போல் கூட்டமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். 


எங்கே போனார்கள்..? 


வெளிநாடுகளுக்குச் சென்று பெட்டில் ஆகி விட்டார்கள்.


இன்று அனைத்து வெளிநாடுகளிலும் பிராமணர்கள் அதிகளவில் நல்ல இடத்தில் காணப்படுகிறார்கள். 


நியூஜெர்சியில் ஒரு மில்லியன் பிராமணர்கள் உள்ளார்கள். 


ஒருவரல்ல… இருவரல்ல..! இதனை ‘ப்ரெயின் ட்ரெயின்’ என்பார்கள்.


நம் மேதமைச் செல்வங்கள் எல்லாம் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டன.


நம் தேசத்தை ஊழல் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். 


இதுதான் நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை.


எல்லா புத்திசாலி பிள்ளைகளும் பாரத தேசத்தை விட்டு சென்றுவிட்டனர். 


அவர்கள் ஒரு டாலரில் உணவு உண்டு இன்னொரு டாலரை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். 


அதனைக் கொண்டு இந்தியாவில் உள்ள பெற்றோர் உயிர் வாழ்கிறார்கள். 


இன்று பிராமணர்களிடம் உடுத்திக்கொள்ள இரண்டாவது உடை இல்லை. 


நீங்கள் கோதாவரி மாவட்டம் சென்று கோனசீமா எனப்படும் இடத்தைப் பார்த்தால் அத்தகைய ஏழ்மை நிலையில் பிராமணர்கள் வசிப்பதைக் காண முடியும். 


இது உண்மை. 


இதனை யாரும் மறுக்க முடியாது.


இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது..? 


இது யோசிக்க வேண்டிய விஷயம். 


வரலாறு தொடங்கிய நாள் முதல் பாரத தேசத்தைப் கண்ணின் இமை போல் பாதுகாத்து வந்த நம் பிராமணர்கள் இன்று அவல நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.


சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாச சுவாமி. 


ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குரு வியாசராய தீர்த்தர்.ஒரு சன்யாசி அவருடைய புத்தி கூர்மையால் முழுமையான பேரரசாக விஜயநகர சாம்ராஜ்யம் எழுந்து வளர்ந்தது.


வெளிநாட்டில் ஒரு சமூகம் உள்ளது. 


அவர்கள் ஜூஸ். 


யூதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். 


கடின உழைப்பாளிகள். இவர்களை ஹிட்லர் என்ன செய்தான்..? 


60 லட்சம் யூதர்களை ஒரே நாளில் கொன்று குவித்தான். 


அவர்கள் மேல் அத்தனை வெறுப்பு அவனுக்கு. 


அவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் மேதமை வாய்ந்தவர்களாக… புத்திசாலிகளாக இருந்ததுதான்..!


அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள் எல்லாம் யூதர் சமூகத்திலிருந்து வந்தவர்களே! 


காரல் மார்க்ஸ் ஒரு யூதர். 


ஐன்ஸ்டீன் ஓர் யூதர். 


ஜீசஸ் கிரைஸ்ட் ஒரு யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் கிறிஸ்தவர் அல்ல. அவரைக் கொண்டு உருவாக்கிய மதம் கிறித்தவ மதம்.


யூத மதம் எங்கிருந்து உருவானது? அது ஹிந்து மதத்தில் இருந்து பிறந்தது. 


ஹிந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் பிற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த போது மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை பெற்றார்கள். 


இவர்கள் யாதவர்கள். கிருஷ்ணனின் உறவினர்கள்.


யது என்ற சொல்லே யூதர் என்றானது. மகேசா என்ற சொல் மோசஸ் என்று மாறியது. 


ப்ராஹ்மண் என்ற சொல் ஆப்ரஹாம் என்று மாறியது. 


ஓம் என்பது ஆமென் ஆனது. ஆமீன் என்றானது. 


ஆமீன் என்றால் சாந்தி. 


ஓம் சாந்தி என்று பொருள். 


இவர்கள் பிற்காலத்தில் தாம் பாரதியர்கள் என்பதை மறந்து போனார்கள். 


ஹிந்துக்கள் மீது படையெடுத்தார்கள். ஒரே மனித இனத்தில் ஏற்பட்ட வரலாற்று பரிணாமங்கள் இவை.


சாணக்கியரைப் பற்றி சிறிது பார்க்க வேண்டும். 


சாணக்கியர் சந்திர குப்தனின் குரு. 


சந்திரகுப்தன் ஒரு சக்கரவர்த்தி. சாணக்கியர் ஒரு பிராமணர். 


மிக எளிய ஆடையோடு இருப்பவர்.


ஒரு கிரேக்க தூதர் சந்திரகுப்தனை சந்திக்க வந்தார். 


தான் வந்த காரணத்தை கூறி சில ஓலைகளைக் கொடுத்தார். 


ஆனால் சந்திரகுப்தன் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் தன் குருவிடம் சென்று கொடுக்கும்படி கூறினான். 


ஒதுக்கமாக காட்டில் ஒரு குடிசையில் வசித்த சாணக்கியரைப் பார்த்து அந்த தூதர் வியந்து போனார். 


அப்போது சாணக்கியர் வறட்டி தட்டி காய வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி.


தன் சமையலுக்கான ஏற்பாடுகளை தானே செய்து கொண்டிருந்தார். 


கிரேக்க தூதருக்கு ஒன்றும் புரியவில்லை. 


சக்கரவர்த்தியான சந்திரகுப்தனுக்கு இந்தப் பைத்தியக்கார பிராமணனா குரு? 


என்று விளங்காமல் விழித்தார். 


வந்த விஷயத்தைக் கூறி ஓலைச்சுவடிகளை அளித்தார்.


அவற்றைப் பெற்றுக் கொண்டார் சாணக்கியர். 


வந்தவரை உபசரித்து அமர வைத்தார். இருட்டத் தொடங்கியது. 


குடிசைக்குள் ஒரு சிறு கை விளக்கு எரிந்தது. 


மாலை சந்திரன் உதயமானான். 


சந்திரோதயம் ஆனவுடனே சாணக்கியர் அந்த விளக்கை அணைத்து விட்டு, “வெளியில் போய் அமரலாம், வாருங்கள்..!” என்றார்.


தூதருக்கு ஒரே வியப்பு.


 “இருந்த ஒரு விளக்கையும் ஏன் அணைத்தீர்கள்?” என்று கேட்டார். 


“இந்த விளக்கை ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் வேண்டும். 


சந்திரகுப்தனிடம் சென்று கேட்டு வாங்கவேண்டும். 


அரசாங்க கஜானாவை துர்விநியோகம் செய்ய எனக்கு உரிமை இல்லை. சிக்கனமாக இருக்க வேண்டும்” என்றார்.


அதுதான் தேசபக்தி. 


அதுதான் தேசியவாதம். 


அதுதான் சாணக்கியர். 


அதுதான் பிராமணர்கள் தேசத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு. 


அவர்கள் காட்டும் மனிதாபிமானம். அதற்காகத்தான் சாணக்கியரை நாம் இன்றளவும் போற்றுகிறோம்.


அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் தம்மை ‘போஸ்டன் பிராமின்ஸ்’ என்று கூறிக் கொள்கிறார்கள்.


பிராமணியம் என்பது தூய்மையின் குறியீடு. 


முழுமைக்கான அடையாளம். 


சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. 


பிராமணர்கள் சத்துவ குணச் செல்வர்கள். 


சத்திரியர்கள் ரஜோ குணம் நிறைந்தவர்கள். 


க்ஷாத்திரம் ராஜன் போன்ற சொற்கள் ராஜஸ குணத்தின் அடையாளங்கள்.


இன்றைய சமுதாயத்தில் க்ஷாத்திரம் இல்லை. வீரம் இல்லை. 


அனைவரும் பலவீனர்கள் ஆகிவிட்டார்கள். 


பிராம்மணனைப் போட்டு அடிக்கிறார்கள். 


அதில்தான் வீரம் காட்டுகிறார்கள். இன்று சமுதாயத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. 


இத்தகைய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?


ஏனென்றால் பிராமணர்கள் இரண்டு முக்கியமான தெய்வீக சக்திகளை இழந்து விட்டார்கள். 


நம் முன்னோர்களிடம் பரம்பரையாக இருந்து வந்த சக்திகள் இரண்டு. 


முதலாவது சாபம் கொடுப்பது. 


இரண்டாவது அனுகிரகம் செய்வது.


சத் பிராமணன் ஒருவனுக்கு மனம் நோகுமானால் எதிரில் இருக்கும் தீயவன் அழிந்து போவான். 


பிராம்மணன் ஆசி கூறி அனுக்கிரஹம் செய்தால் அது அப்படியே நிறைவேறும்.


ஆனால் இன்று பிராமணர்கள் காலில் விழுவதை ஒரு அவமானமாக நினைக்கின்றனர்.


இன்று எத்தனையோ பிராமணர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். 


அவை பலவும் நிலைப்பதில்லை. காரணம் என்ன? 


பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தின் அருளை இழந்துவிட்டார்கள். 


யாரும் காயத்ரி மந்திர ஜபத்தை சரியாகச் செய்வதில்லை.


இன்று ஒரு கேள்வி எழலாம். 


எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று பலரும் நினைக்கலாம்.


முன்பிருந்த சமூகச் சூழல் வேறு. 


இன்று அவசர யுகம் என்று கூறலாம். 


வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்தே உடலும் மனமும் சோர்ந்து போகிறது என்று கூறலாம்.


ஆனால் டிவி சீரியல் பார்ப்பதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கு இன்று நேரமும் மனமும் உள்ளது. 


அவற்றை பார்க்கா விட்டால் எந்த நஷ்டமும் இல்லை. 


ஆனால் காயத்ரியை ஜபம் செய்யா விட்டால் நஷ்டம் உண்டு.


‘கய்’ என்றால் உயிர் என்று பொருள். 


‘த்ரா’ என்றால் ரட்சணை. 


நமக்கு பத்து பிராணன்கள் உள்ளன. அவை பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என்பவை. இவை பஞ்சப் பிராணன்கள்.


இவற்றைத் தவிர ஐந்து உப பிராணன்கள் உள்ளன. 


நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன்.


இந்த பிராண சக்திகள் நம் உடல் முழுவதும் பரவி உள்ளன. 


இவை இல்லாவிட்டால் சிவம் சவமாகிவிடும். 


பிராண சக்திகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றுதானே நாம் விரும்புவோம்? 


பின் அவற்றை காத்துக் கொள்ள வேண்டாமா? 


காயத்திரி மந்திரத்தால் அவற்றை இரட்சித்துக் கொள்ள வேண்டும்.


மந்திரம் உச்சரித்தால் உயிர் எவ்வாறு பாதுகாக்கப்படும்? 


மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால் தானே உயிர் பாதுகாக்கப்படும்? என்று கேட்கலாம்.


நம் உடலில் கால் முதல் தலை வரை மின்காந்த அலைகள் பரவியுள்ளன. 


பிராம்மணர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? 


காலையிலேயே துயிலெழுத்து காயத்ரி ஜபம் செய்து தம் உடலில் இருக்கும் மின்காந்த சக்தி அலைகளை உறுதியாக்கிக் கொண்டார்கள். 


அக்காரணத்தால் அவர்கள் உடல் முழுவதும் தெய்வீக சக்தி இருந்தது.


“ஓம் பூ: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I 

தியோ யோந: ப்ரசோதயாத் II” என்று காயத்ரியை பிரார்த்தனை செய்தார்கள். 


“என் அறிவைத் தூண்டுவாயாக!” என்று காயத்ரி மாதாவாகிய விஷ்ணு வை பிரார்த்தனை செய்தார்கள். 


அறிவு தூண்டப்பட்டு பாதுகாக்கப் படாவிட்டால் என்ன ஆகும்? 


நம் மூளை கூர்மையடையாது. எதிலும் முன்னேற்றத்தை காண முடியாது.


அதனால் நம்முடைய முதலும் முக்கியமானதுமான கடமை பிராமணர்களைப் பாதுகாப்பது. 


பசுக்களைப் பாதுகாப்பது. ‘கோ’ என்ற சமஸ்கிருதச் சொல் ‘கௌ’ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியது. 


ஆங்கிலம் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட மொழி அல்ல. 


சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த ‘பேத்தி’ என்று கூறலாம். 


லத்தீனும் கிரேக்கமும் சமஸ்கிருதத்தின் சகோதரிகள். 


டோர் என்றால் கதவு. இது த்வார் என்ற சொல்லிலிருந்து உருவானது.


 நக்தா என்றால் சம்ஸ்கிருதத்தில் இரவு. அது நைட் ஆனது.


 எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் வேர்ச் சொல் சம்ஸ்கிருதமாக இருக்கும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்.


இன்று நாம் சமஸ்கிருதத்தைக் காப்பாற்றுகிறோமா? போகட்டும்… 


கௌரவ மரியாதையாவது அளிக்கிறோமா? 


சமுதாயத்தில் யாராவது பிராம்மணனை மதிக்கிறார்களா? யாருமில்லை.


இந்து மதத்திற்கும் பிராமணர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இன்று யாரும் மதிப்பளிப்பதில்லை. 


பின் சமுதாயத்தை யார் பாதுகாப்பார்கள்?


பாரத தேசத்தில் ஐந்து ‘க’ காரங்கள் உள்ளன.


 இந்த ஐந்தும் பாதுகாக்கப் பட்டால் இந்தியா பாரத தேசமாக… புண்ணிய பூமியாக விளங்கும்.


காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.


“நான் இந்தியாவில்தான் வசிக்கிறேன். ஆனால் பிராமணர்களின் மேல் எனக்கு மதிப்பு கிடையாது. 


நான் வேதங்களை மதிக்க மாட்டேன். அது ஏதோ பழைய நூல். 


தற்காலத்திற்கு உதவாது. அவற்றை ஏன் படிக்க வேண்டும்?” என்று கேட்பவன் ஹிந்து அல்ல.


“பசுமாட்டை நான் மதிக்க மாட்டேன். கோமாதாவை வணங்கமாட்டேன். 


பிற விலங்குகளைப் போல அவற்றையும் கொல்லலாம். 


தவறல்ல. அது எந்த விதத்தில் சிறந்தது? ஆடு தாழ்ந்தது….மாடு மட்டும் உயர்ந்ததா? 


ஏன் இந்த வேறுபாடு? 


நாய் தாழ்ந்ததா? அது மனிதனைக் காவல் காக்கிறது. 


அதனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பேன். 


மடியில் வைத்து சோறூட்டுவேன். நாயை அன்போடு வளர்ப்பேன். 


பசுவைக் காலால் உதைப்பேன்” என்பவர்களிடம் ஒரு கேள்வி.


நாயின் சிறு நீரைக் குடிக்கலாமா? 


அது மருத்துவ குணம் கொண்டதா? ஆனால் பசு மாட்டின் சிறுநீரை அருந்தலாம்.


 நம் முன்னோர்கள் பஞ்சகவியம் காலையில் அருந்தி வந்தார்கள். 


இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் சிறுநீர் சிறிது அருந்தி வந்தால் நோயின்றி வாழமுடியும். 


விடியலில் எழுந்து குளித்து விட்டு சிறிது பசுஞ்சாணி அருந்த வேண்டும். 


இது தற்போது சாத்தியமா? சாத்தியம்தான்! அதனால் என்ன நன்மை? 


அல்சர் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது.


 சர்க்கரை நோய் நெருங்காது. கேன்சர் வராது. 


இது உண்மை. எந்த ஆரோக்கியக் கேடும் அருகில் நெருங்காது.


 நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கூறியவை இவை!


பசுமாட்டின் உடலில் பதினான்கு புவனங்களும் உள்ளன என்பதால் அதனை வணங்குகிறோம்.


 காலையில் பசுமாட்டைச் சுற்றி வந்து பிரதட்சணம் செய்து வணங்கினார்கள் நம் முன்னோர். 


இன்று அந்த கலாச்சாரம் கிராமங்களில்கூட தென்படுவதில்லை. காணாமல் போய்விட்டது.


கங்கையில் நாம் சேர்க்கும் கழிவுகளைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். 


கல்கத்தா ஹூக்ளி நதி முழுவதும் சேறாக உள்ளது. 


நம் இந்திய கலாச்சாரம் போலவே நதிகளும் நாசமடைந்து விட்டன. 


ஊழல் நிறைந்த சமுதாயத்தில் வாழும் நாம் புண்ணிய நதிகளை பாழ் செய்து விட்டோம். 


நம்மை நாம் பிராம்மணர்கள் என்று எவ்வாறு அழைத்துக் கொள்வது?


பிராம்மணர்களுக்கும் பிறருக்கும் என்ன வேறுபாடு? 


சாணக்கியர் தன் தவ சக்தியால் ஒரு பெரிய அரசாங்கத்தை அடக்கியாளக் கூடியவராக இருந்தார்.


தங்குடூரு பிரகாசம் பந்துலு ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். 


குள்ளமாக சிவப்பாக இருப்பார். எப்போதும் ஒரு மேலங்கி அணிந்திருப்பார். 


வெயிஸ்ட் கோட். 


ஏனென்றால் உள்ளே அணிந்திருந்த கிழிந்த சட்டையை மறைப்பதற்காக. அவ்விதம் உயர்ந்த மனிதர்கள் எளிமையை விரும்பி ஏற்றார்கள்.


இன்று ஒரு பஞ்சாயத்துபோர்டு அதிகாரியின் அறைக்குச் சென்றால் கூட அறை முழுவதும் ரூபாய் நோட்டுக் கட்டுகளை பார்க்க முடியும். 


மிகப் பெருஞ் செல்வம் முடங்கிக் கிடக்கிறது. 


இந்தியா ஏழை நாடல்ல. இந்தியா மிகப் பெரும் செல்வம் நிறைந்த நாடு. 


ஆனால் பொதுமக்கள் ஏழைகள். அரசியல்வாதிகள் செல்வந்தர்கள்.


வேதத்தில் உள்ளவை வெறும் பாரத தேச மக்களுக்காக கூறப்படவில்லை.


 முழு மனித இனத்திற்குமான சொத்துக்கள் அவை. 


ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒரு மந்திரம் உள்ளது.


“சம் கச்சத்வம், சம் வதத்வம், சம் வோ மனாம்ஸி ஜானதாம், தேவா பாகே யதா பூர்வே…..”


இதன் பொருள் என்ன..?


சம் கச்சத்வம் – மனித இனம் முழுவதும் ஒற்றுமையாக சேர்ந்து நடப்போம். 


ஓ உலக மனிதர்களே! அனைவரும் ஐக்கியமாக சேர்ந்து நடப்போம்.


சம் வதத்வம் – நாம் அனைவரும் ஒரே சிந்தனையோடு ஒரே கொள்கையில் நிற்போம்.


சம் வோ மனாம்ஸி ஜானதாம் – நாம் அனைவரும் மனம் ஒருமித்து இருப்போம். 


நம் அனைவர் மனமும் ஒன்று கலந்து இருக்கட்டும்.


தேவா பாகே யதா பூர்வே – நம் புராதன புண்ணிய புருஷர்கள் எவ்வாறு கூறினார்களோ நாமும் அதேபோல் வாழ்வோம்.


இந்த மந்திரத்தின் தேவை இன்றைக்கும் உள்ளதைக் காண முடிகிறது. 


இந்த மந்திரங்களை எழுதி எத்தனையோ கோடி வருடங்கள் கடந்துவிட்டன. இன்றைக்கும் அதற்கான தொடர்பு காணப்படுகிறது. 


மனித இனத்திற்குப் பயன்படும் மந்திரங்கள் இவை.


பிராம்மணன் காயத்ரி மந்திரத்தின் சக்தியைப் பெற்றானாகில் துஷ்ட சக்திகள் அழிந்து போகும். 


ஆனால் தற்காலத்தில் அத்தகைய தெய்வீக சக்தி பிராம்மணனிடம் அரிதாகி விட்டது. 


தற்போது நேர்மறையான சக்தி வாய்ந்த அலைகள் பிராமணனால் சமுதாயத்திற்கு வழங்கப் படுவதில்லை. 


காயத்ரி மாதா நமக்கு சக்தி அளிப்பதில்லை. 


ஏனென்றால் நாம் அவளை வணங்குவதை நிறுத்தி விட்டோம்.


இளைய சமுதாயம் இனியாகிலும் வேதத்தை மதித்து காயத்திரி ஜபம் செய்யக் கற்க வேண்டும். 


காலையில் எழுந்து குளித்து காயத்ரியை வணங்கி அவள் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.


உண்மை எப்போதும் வெல்லும். ருதா என்ற சமஸ்கிருதச் சொல்லிருந்து ட்ரூத் என்ற சொல் பிறந்தது. 


சத்தியமே பேச வேண்டும். சமுதாய நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.


பிராமணன் செய்யும் தவம் அவனுக்கு மட்டுமல்ல. அனைத்து குலத்தவருக்கும் சென்றடையும். 


தேசம் தலமாக விளங்கும். பிராமணர்கள் தங்களின் தாழ்ந்த நிலைமைக்கு யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. 


நாமே நம் நண்பர்கள். 


நாமே நம் பகைவர்கள். 


பிராம்மண தர்மத்தைப் காப்பாற்றிக் கொண்டே அவரவர் உத்தியோகங்களைச் செய்து வர வேண்டும். 


இன்றைக்கு நாம் ஓரளவாவது நலமாக இருக்கிறோம் என்றால் நம் பூர்வீகர்கள் செய்த தவமே காரணம்.


அறிவுக்கூர்மை மிகுந்த யூதர்களை ஹிட்லர் வேட்டையாடிக் கொன்றது போலவே தற்போது பிராம்மணர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். 


ஏனென்றால் பிராமணர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். 


பொறாமையும் அசூயையும் நிறைந்தவர்களுக்கு அறிவுத் திறன் மிக்கவர்களைப் பார்த்தால் பொறுக்க இயலாது.


இரண்டாயிரம் ஆண்டுகள் யூதர்கள் தமக்கென்று ஒரு நாடு இன்றி மேற்கத்திய நாடுகளால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் வாடினார்கள். 


1948ல் அவர்களுக்கு ஒரு சிறிய நாடு கிடைத்தது. 


அதுவே இஸ்ரேல். 


அது தெலுங்கானா மாநிலம் அளவு நிலப்பரப்பு கொண்டது. 


ஆனால் இப்போது அவர்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். 


அரபு நாடுகளை எல்லாம் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவில் பிராமணர்களின் மீது பல திசைகளிலிருந்தும் தாக்குதல் நடக்கிறது. 


பிராமணர்களை அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.


பகவத்கீதை மீதும் பிராமணர்கள் மீது மட்டுமே குறிவைத்து எதிர்ப்பு கிளம்புகிறது.

 

பசுமாடுகள் கொல்லப்படுகின்றன. 


இந்த அழிவுக்க?

No comments:

Post a Comment