Saturday, August 20, 2011

Hello PM, my response to Thuglak

Courtesy Thuglak article 'Hello Prime Minister' by Sathya issue dated 21.08.2011

Here is the main Article from Thuglak:  Reason to post main article here is, reader might not get what I posted as my response, so target without source becomes meaningless, na !!

ஹலோ, பிரைம் மினிஸ்டர்...? – சத்யா 
சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தாலும், நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்தே சோனியா பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சோனியாவுக்கு சரியான தகவல்களை வழங்க, பிரதமரை விட நம்பிக்கையானவர் வேறு யார் இருக்க முடியும்? அவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? நாட்டு நடப்பு குறித்து சோனியா பிரதமருக்கு ஃபோன் செய்தால், பிரதமர் அளிக்கும் பதில்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும் – என்பது நமது கணிப்பு.




சோனியா : ஹலோ, பிரதமரா?

பிரதமர் : யெஸ் மேடம்! ராகுல்தான் இன்னும் பிரதமராகச் சம்மதிக்கலையே. அப்ப நான்தானே பிரதமர்?

சோனியா : ராகுல் உங்களை மாதிரி இல்லை. தன் விஷயத்திலே தானே முடிவெடுக்கணும்னு ஒரு பிடிவாதம். அதிருக்கட்டும். நீங்க எப்படி இருக்கீங்க?

பிரதமர் : மௌனமாத்தான் இருக்கேன். அதாவது, என் வேலையை நான் கரெக்டா செஞ்சுகிட்டிருக்கேன்.

சோனியா : ரொம்ப சந்தோஷம். அங்கே எல்லாம் எப்படிப் போயிட்டிருக்குது? எல்லாரும் உங்களுக்கு ஒத்துழைப்பு தராங்களா? 
பிரதமர் : எல்லாரும் நல்ல ஒத்துழைப்பு தராங்க மேடம். முன்னேயெல்லாம் எந்தப் பிரச்சனை வந்தாலும் ‘எனக்கு எதுவும் தெரியாது’ன்னு நானே வாயைத் திறந்து சொல்ல வேண்டியிருந்தது. இப்ப அந்தக் கஷ்டம் இல்லை. எனக்குப் பதிலா மத்தவங்களே ‘பிரதமருக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு எனக்கு ஆதரவாப் பேசிடறாங்க. ‘பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்தின் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ன்னு இன்னும் ரெண்டு நாளிலே பிரதமர் ஆஃபீஸ்லேர்ந்தே அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

சோனியா : வெரிகுட். இப்படி ஒரு ‘டீம் ஸ்பிரிட்’டைத்தான் நான் எதிர்பார்க்கறேன். இந்தியாவிலே இப்ப என்ன விசேஷம்?

பிரதமர் : விசேஷமா ஒண்ணும் இல்லைங்க. அதே பழைய பிரச்சனைகள்தான். அதே பழைய மோதல்கள்தான். புது ஊழல் எதுவும் வெளியே வரலை. போன தடவை மாதிரியே, இந்தத் தடவையும் பார்லிமென்ட்டை தினமும் நாலு வேளை ஒத்தி வெச்சுடறாங்க. நாடு அதே ரூட்லேதான் போயிட்டிருக்குது.

சோனியா : பார்லிமென்ட் நடக்காததும் ஒரு வகையிலே நல்லதுதான். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாதததுக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்.

பிரதமர் : பாராளுமன்றம் என்னைக்கு நடக்கணும், என்னைக்கு நடக்கக் கூடாதுன்னு பா.ஜ.க.தான் முடிவு செய்யும்னு சுஷ்மா ஸ்வராஜ் சொல்றாங்க.

சோனியா : அக்கிரமமா இருக்குதே. அப்ப நாம எதுக்கு இருக்கோம்? பார்லிமென்ட் நடக்கலாம்னு அவங்க முடிவெடுக்கும்போது, அவங்களுக்கு எதிரா ரகளை பண்ணி, சபையை முடக்க நம்மாலே முடியாதா?

பிரதமர் : நிச்சயமா முடியும். கந்தகார் சம்பவம்தான் தீவிரவாதம் வளர்ந்ததற்குக் காரணம்; மசூதி இடிப்புக்கு அத்வானி மறுபடியும் மன்னிப்பு கேட்கணும் – அது இதுன்னு கைவசம் நிறைய ஸ்டாக் இருக்குதே. இந்தக் கூட்டத் தொடரை இப்படியே ஓட்டிடலாம். 



சோனியா : ஓகே. விலைவாசிப் பிரச்சனை எப்படியிருக்குது? தொடர்ந்து கவலைபட்டுக்கிட்டு இருக்கீங்களா இல்லையா?

பிரதமர் : சமீப காலமா 2-ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் சொஸைட்டி ஊழல், லோக்பால் பிரச்சனைன்னு வந்துட்டதாலே, அதுங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கவலைப்பட வேண்டியிருக்குது. விலைவாசியை நினைச்சு கவலைப்பட நேரமே கிடைக்கலை.

சோனியா : அப்படிப் பொறுப்பில்லாம இருந்துடாதீங்க. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியா நேரம் ஒதுக்கி கவலைப்படறதுதான் முறை.

பிரதமர் : சரி மேடம். ‘விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தீவிரவாதம் அச்சுறுத்துகிறது. ஊழல் அதிகரிப்பு பெரும் சவாலாக உள்ளது’ன்னு சுதந்திர தின உரையிலே பேசிடறேன். வருஷா வருஷம் அப்படிப் பேசித்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட்டு வரேன்.

சோனியா : நல்ல ஐடியாதான். சரி. அமைச்சர்கள் எல்லாம் எப்படி இருக்காங்க?

பிரதமர் : அவங்கவங்க வேலையை அவங்கவங்க பார்த்துகிட்டிருக்காங்க. அடுத்த ஸி.ஏ.ஜி. அறிக்கை வரும்போதுதான் யார் யார் என்ன செஞ்சாங்கன்னு புரியும்.

சோனியா : ஸி.ஏ.ஜி.ன்னதும் ஞாபகத்துக்கு வருது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலே ஷீலா தீட்சித் முறைகேடுகள் செஞ்சிருக்கிறதா ஸி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்குதாமே? 



பிரதமர் : ஆமாங்க. 2-ஜி ஊழல் புகாருக்கு ‘பா.ஜ.க. ஆட்சியிலேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது’ன்னு பதில் சொன்னோம். கல்மாடியை நியமனம் பண்ணதே வாஜ்பாய் அரசுதான்னு பதில் சொல்லிட்டோம். ஸி.ஏ.ஜி. அறிக்கையில் ஷீலா தீட்சித் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லைன்னு பதில் சொல்லிட்டோம். ஏன்னா அறிக்கையிலே டெல்லி முதல்வர்னுதான் இருக்குது. இந்த ஆதர்ஷ் சொஸைட்டி ஊழலுக்குத்தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.

சோனியா : நல்லா விசாரிச்சுப் பாருங்க. பா.ஜ.க. ஆட்சியிலேதான் அந்த சொஸைட்டிக்கு ‘ஆதர்ஷ்’னு பேர் வெச்சாங்கன்னு தகவல் கிடைச்சா கூடப் போதும். அதை வெச்சு எதிர்க் கட்சிகளை அடக்கிடலாம். சரி. அதை விடுங்க. மாயாவதி லாலுவாலே பிரச்சனை ஒண்ணும் இல்லையே..?

பிரதமர் : எப்படிங்க பிரச்சனை வரும்? அவங்க அரசியல் நடவடிக்கைகளைத்தான் நம்ம ஸி.பி.ஐ. உன்னிப்பா கவனிச்சிட்டிருக்குதே. இன்னொரு நல்ல விஷயம்ங்க. ஜெகன்மோகன் சொத்துக் குவிப்பு சம்பந்தமா ஸி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய ஆந்திர ஹைகோர்ட் உத்திரவு போட்டிருக்குது. கூடிய சீக்கிரம் அவரையும் நம்ம கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துடலாம்.

சோனியா : இந்த சாதனைகளுக்கு என்ன காரணம்னா, 2ஜி விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்குது. ஆனா மத்த விவகாரங்கள் நம்ம கண்காணிப்புலே நடக்குது. கேட்க மறந்துட்டேன். 2ஜி வழக்கு எந்த அளவிலே இருக்குது?

பிரதமர் : அதை ஏன் கேக்கறீங்க? 2ஜி ஒதுக்கீடு பற்றி பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் தெரியும்னு, ராசா சுப்ரீம் கோர்ட்லேயே சொல்லிட்டாரு.

சோனியா : அவ்வளவுதானே சொன்னாரு? வேறே ஒண்ணும் சொல்லிடலையே?

பிரதமர் : பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லைங்க. தி.மு.க. – காங்கிரஸ் உறவு தொடரும்னு சமீபத்திலே கூட தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியிருக்குது. தி.மு.க.விலே இன்னும் நாலு பேரைக் கைது பண்ணாக் கூட கலைஞர் தரப்பிலேர்ந்து பிரச்சனை எதுவும் வராது. இருந்தாலும் 2-ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல்களால் நாட்டுக்கே கெட்ட பெயர்னு கபில் சிபல் கூட பேசியிருக்காரு... 



சோனியா : அப்படியா? கேக்கறதுக்கே ரொம்ப ஆறுதலா இருக்குது. நான் கூட நம்ம ரெண்டு பேராலேதான் நாட்டுக்கு கெட்ட பேரோன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா யோசிச்சுப் பார்த்தா, ஊழலை சுப்ரீம் கோர்ட் விரிவா அலசிப் பாக்கறதாலேதான் நாட்டுக்கு இவ்வளவு கெட்ட பேர்னு தோணுது.

பிரதமர் : ஆமாங்க. நம்பிக்கை வாக்கெடுப்பிலே எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்குலே கூட, டெல்லி போலீஸ் அரைகுறை விசாரணை நடத்தினதாக சுப்ரீம் கோர்ட் கண்டிச்சிருக்குது.

சோனியா : அப்படியா? யாரைக் கேட்டு டெல்லி போலீஸ் அந்த அரையளவு விசாரணையை நடத்தினாங்க? மொதல்லே அதை விசாரிங்க.

பிரதமர் : அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அப்ஸல் குருவுக்கு மரண தண்டனையை உறுதிபடுத்தி, ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியிருக்குது.

சோனியா : குற்றம் நடந்து இன்னும் பத்து வருஷம் கூட ஆகலையே. அதுக்குள்ளே என்ன அவசரம்? நம்ம மதச்சார்பின்மைக் கொள்கை மேலே யாருக்காவது சந்தேகம் வந்துட்டா என்ன பண்றது? சரி, பண வீக்கம் இப்ப எவ்வளவு உயர்ந்திருக்குது?

பிரதமர் : பண வீக்கம் 8.5 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு பிரணாப் முகர்ஜி கூட கோபமாப் பேசியிருக்காரு.

சோனியா : ஏத்துக்க முடியாதா? யாரை எச்சரிக்கிறார்? பா.ஜ.க.வையா? 



பிரதமர் : பா.ஜ.க.வை எச்சரிக்கலை. பண வீக்கத்தைத்தான் எச்சரிக்கிறார்னு நினைக்கிறேன். அப்புறம், இந்த அன்னா ஹஸாரே பிரச்சனைதாங்க பெரிய தலைவலியா இருக்குது. அவர் கோரிக்கைகளை ஏத்துக்கிட்டு, லோக்பால் அமைப்புக்கு அரசு பிரதிநிதிகளாக ராசா, கல்மாடி, க்வாட்ரோக்கி, சிபுசோரன், மதுகோடாவை நியமிச்சா அவரை அடக்க முடியுமான்னு ஒரு யோசனை இருக்குது.

சோனியா : நல்ல யோசனைதான். அதுக்கும் அவர் அடங்கலைன்னா இன்னொரு வழி இருக்குது. நானே அவருக்கு ஒரு லெட்டர் எழுதி அவரை வழிக்குக் கொண்டு வரேன்.

பிரதமர் : எப்படி?

சோனியா : ‘பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தூண்டி விட்டு, ரம்ஜான் மாதத்தில் உண்ணா விரதம் இருப்பது நியாயமா? சிறுபான்மையினர் வருத்தப்பட மாட்டாங்களா? ஜனவரி 26 குடியரசு தின விழா முடிஞ்சதும், 27-ஆம் தேதி நீங்க உண்ணாவிரதம் தொடங்கினா, நானும் உங்களோடு உண்ணாவிரதம் இருந்து ஊழலை ஒழிக்கத் தயார்’னு எழுதறேன். உடனே எனக்கு நன்றி தெரிவிச்சு உண்ணாவிரதத்தை ஒத்தி வெச்சுடுவார். 

My response to above with the original follows the original article here:




Readers’ response starts here (predominantly interesting responses including mine extracted here). 

Pun intended, no offense meant to anyone – a honest disclaimer.

Singai Sivas 
//பிரதமர் : யெஸ் மேடம்! ராகுல்தான் இன்னும் பிரதமராகச் சம்மதிக்கலையே. அப்ப நான்தானே பிரதமர்?  
 
சோனியா : ராகுல் உங்களை மாதிரி இல்லை. தன் விஷயத்திலே தானே முடிவெடுக்கணும்னு ஒரு பிடிவாதம். அதிருக்கட்டும்.//  
 
நம்ம உடான்ஸ்:  
 
இந்தத் தொலைபேசி உரையாடல் முடிந்தபின் மன்மோகன் சற்று நேரம் சுதந்திரம் கிடைத்த இடைவெளியில் தனக்குள் யோசிக்கிறார். 'அடடே, பிரதமர் பதவி பற்றியும் ராகுலைப் பற்றியும் கேட்டதற்கு மேடம் இப்படிச் சொல்லிவிட்டாரே, அவர் சொல்வது உண்மைதானோ? நமக்கு சொந்தமாக முடிவெடுக்கத் தெரியலையோ' அய்யஹோ என் செய்வேன், பரம்பொருளே' என்று கீழ்க்கண்டபடி சிலாகிக்கிறார்/புலம்புகிறார் (ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் பழைய பாடல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!).  
 
"
நம்ப முடியவில்லை..............வில்லை.............வில்லை.........  
அவளா சொன்னாள்? இருக்காது, அப்படி எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது,  
நம்ப முடியவில்லை............வில்லை...........வில்லை............"
Yesterday, 08:17:36
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-24x24.png
Singai Sivas 
இந்த 'வில்லை'க்கு மாற்று கூட உண்டு. அப்படிப் புலம்பிக்கொண்டே வில்லையை (மாத்திரையை) தேடுகிறார், ஆறுதலும் உறக்கமும் வேண்டி, எப்பூடி!!!
Yesterday, 08:20:51
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-24x24.png
N.S.M. Shahul Hameed 
சிவாஜி படத்துல சோகப்பாட்டு வந்தாலும் சில படங்களில் திருப்புமுனை ஏற்பட்டு ஜாலியாகவும் கதாநாயகனுக்குப் பெருமையாகவும் முடியும்.  
 
அந்த மாதிரு ஒரு திருப்பம், இருக்கும் உண்மைகளை நாட்டுக்கு எடுத்து  
 
"
பாரு பாரு நல்லா பாரு  
பயாஸ்கோப்பு படத்தை பாரு  
நல்லாவே நிமிர்ந்து பாரு - நம்ம  
நாட்டுப்பணம் போண கணக்கை  
சரியாக எண்ணிப்பாரு !" பாடிக்காட்டிவிட்டு ஒரு மாபெரும் வீரனைப்போல் பதவித்துண்டை தூக்கி எறிந்துவிட்டு சில காலம் திகாரில் தங்கவும் தயங்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டு வீடு நோக்கி பீடு நடை போட்டாரானால், யுக யுகத்திற்கும் அவர்தான் நவீனகால இந்தியாவின் கதா நாயகன்!.
Yesterday, 15:23:35
– Like – Reply
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
casbbalchandhar, Bangalore 
All observations made by the above friends are simply supurb
Yesterday, 20:06:03
– Like – Reply
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
இக் கட்டுரை தொடர்பாக நம்ம (என்) உடான்ஸ் தொடர்கிறது. பெருவாரியான காட்சிகளை 'இன்செப்ஷன்' ஆங்கிலத் திரைப்படத்தில் வருவதுபோல் கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு என்கிற ரீதியில் புரிந்துகொண்டு படித்தால் ஏதோ சொல்ல வருகிறேன் என்று புரியும். புரியாதவர்களுக்கு நான் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.  
காட்சி 1  
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின் சோனியா சற்றே யோசிக்கிறார். பாவம், இந்த சிங்ஜி, கிட்டத்தட்ட 8 வருடங்களாக நம்மிடம் வெகு விசுவாசமாக மறு பேச்சு, விவாதத்திற்குக்கூட எதிர்பேச்சு என்கிற லாவணி பாடாமல் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருக்கிறார். நாம் வேறு இப்போது ஊரிலில்லை, நம் பாரம்பரிய சொத்தின் (இந்தியத் திரு நாடு) நிர்வாக அதிகாரி என்கிற முறையில் அவரிடம் நாம் இத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டியதில்லை.  
நம் இளவரசர் வேறு திருமணம் கூட செய்யாமல் நாட்டுப் பணியில் தன்னாலான கடமையைச் செய்து வருகிறார்; இளவரசர் அரியணை ஏகும் நாள் வெகு தூரத்திலில்லை, அரியணை அவருக்குத் தானாகவே கிடைக்க வேண்டும், நாமோ அல்லது இளவரசரோ ஏதோ சொல்ல அல்லது செய்யப் போக அது விபரீதமாகி, ஒரு அவசர கதியில் சிங்ஜி நிர்வாகப் பதவியை தூக்கியெறிந்து விட்டால், அதே அவசர கதியில் இளவரசர் அரியணை ஏறும் அவசியம் நேரிடும். பின், நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் நினைப்பது இருக்கட்டும், இந்த சிங்ஜி என்ன நினைப்பார் 'தன் விசுவாசத்தின் அளவையும் வீர்யத்தையும் ராணி புரிந்துகொள்ள மறுக்கிறாரே' என்று இளவரசர் அரியணை ஏறும் நேரத்திலோ பிறகோ சிங்ஜியும் அவர்தம் குடும்பத்தினரோ தவறாகப் புரிந்து கொண்டு நமக்கு ஏதோ சாபம் கொடுத்து விட்டால் என்ன செய்வது? உடனே சிங்ஜியை கொஞ்சம் ஆறுதல் படுத்த வேண்டும். இன்று நீண்ட நேரமாகிவிட்டதால் நாளை காலை முதல் வேலையாக சிங்ஜியிடம் பேச வேண்டும் (என்று சோனியா உறங்கச் செல்கிறார்).  
(தொடரும்)
Today, 09:45:13
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
(தொடர்கிறது)  
 
காட்சி 2  
மன்மோகன் கவலையோடு வில்லைகளையும் சிறிது பாலையும் அருந்திவிட்டு உறங்கச் செல்கிறார் (இங்கேதான் டெலிபதி ஆம்னிபதி விசுவாசியோபதி முதலாளியோபதி வேலை செய்கிறது).அங்கே சோனியா உறங்கச் செல்கிறார், இங்கே சிங்கும்.  
 
இனி வருவது (மன்மோகனின் கனவு):  
சோனியா பாடுகிறார் (கற்பகம் திரைப்படத்தில் நாயகனை ஆறுதல் படுத்த நாயகி பாடுவதாக வரும் பாடல் தொனியில் அறிக).  
 
மன்மோகனே அழலாமா? கண்ணீரை விடலாமா?  
என்னடிமையாய் நீ இருக்க, உன் தலைவியாய் நானிருக்க‌  
ம்ன்மோகனா, மன்மோகனா ?  
 
சிங்ஜி சற்றே உறக்கம் கலைந்து 'என்ன நடக்கிறது' என்று ஆசுவாசித்து, பால்கனி வரை சற்று உலாத்தி விட்டு சிறிது தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் உறங்கச் செல்கிறார் (அவர்தம் கனவு தொடர்கிறது).  
 
சோனியா பிரிதொரு பாடல் பாடுகிறார்:  
 
மயக்கமா, கலக்கமா,  
மனதிலே குழப்பமா,  
வாழ்க்கையில் நடுக்க‌மா?  
 
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்  
வாசல் தோறும் வேதனை இருக்கும்  
வந்த துன்பம் எது வந்தாலும்  
வாடி நின்றால் ஓடுவதில்லை  
வாடி நின்றால் ஓடுவதில்லை  
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்  
 
(
மயக்கமா)  
ஏழை மனதை மாளிகையாக்கி  
இரவும் பகலும் காவியம் பாடி  
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து  
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு  
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு  
உனக்கும் கீழே உள்ளவர் கோடி  
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு  
 
(
மயக்கமா) (மயக்கமும் கலக்கமும் தொடரும்)
Today, 09:56:09
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சிகள் 2, 3, 4 என்று இவர்களின் வாழ்க்கையில் கால ஓட்டத்தில் ஏதேதோ நடந்து மன்மோகன் பதவியிழந்து பரிதவிக்கிறார். இளவரசர் அரியணைஇ ஏறி ஆட்சி பீடத்தில் அமருகிறார், நாட்டு மக்களுக்கு தன் நல்லாட்சியையோ பொல்லாட்சியையோ தர முயற்சிக்கிறார், நாம் அந்த 2ஜி, 3ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் இன்ன பிற விளையாட்டுகளுக்குள் போகப்போவதில்லை, அது தற்போதைய ஆட்சியாளர்களின் பாடு, தலைவலி.  
 
நம் சிந்தனையெல்லாம் மன்மோகன் மற்றும் சோனியா பற்றியது.  
 
காட்சி 12:  
 
அப்போதுதான் ஒபாமாவின் கருத்தாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ஒரு தகவல் வருகிறது. அதாவது உலக வங்கியின் தலைவர் பதவிக்கு நிர்வாக அனுபவமும், பொருளாதார, நிதி மேலாண்மை தொடர்பான அனுபவமும், இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டில் பல்வேறு பதவிகளை வகித்தவரும் பிரதமராக இருந்து அவர் ஆற்றிய சீரிய பணிகளைக் கண்டு அமெரிக்க அதிபர் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு மன்மோஹனே சரியான நபர் என்று கருதுவதாகவும் இன்ன பிற ஐ. நா. சபை அங்கத்தினர்களின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் மன்மோஹன் தயாரா என்று கேட்டுச் சொல்லுமாறு சோனியாவிடம் சொல்கிறார்கள். சோனியா ராகுலிடம் ஆலோசிக்கிறார். ராகுலும் 'பெரும் முட்டுக்கட்டை விலக நேரம் கனிந்துவிட்டது, பெரிசு ரொம்பவே நொந்துவிட்டார், அவரை நாம் இந்தப் பணியை ஏற்கச் சொல்வோம்' என்று அவரும் சம்மத்திவிடுகிறார். சோனியாவும் உடல் நிலை, ஓய்வு இத்யாதி காரணமாக அமெரிக்காவில் சில காலம் இருக்கலாம், என்று முடிவு செய்து இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். செல்லும் வழியில் சுவிட்சர்லாந்தில் இறங்கி ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்கள்.  
 
 
இருவரும் இரவு உணவருந்திவிட்டு தத்தம் மருந்து மாத்திரைகளை அருந்திவிட்டு உறங்கச் செல்கிறார்கள்.  
(தொடரும்)
Today, 10:08:49
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சி 13 (சிங்ஜி கனவில் அவரே பாடுகிறார், நாயகன் ‍ நாயகி டூயட் என்று நினைக்க வேண்டாம், ஒரு விதமான சேர்ந்திசையாக அறிக).  
 
(MMS)
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன  
மணி மாளிகைதான் கண்ணே (மணி மாளிகை = உலக வங்கி)  
 
 
(MMS)
அன்னத்தைத் தொட்ட கைகளினால் (அன்னம் = உலக வங்கிப்பதவி)  
மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன் (மதுக்கிண்ணம் = இந்திய அரசுப்பதவி எதுவும்)  
 
(SG)
க‌ன்ன‌த்தில் இருக்கும் கிண்ண‌த்தை எடுத்து  
ம‌து அருன்தாம‌ல் விட‌ மாட்டேன் (ம‌து = ஏராள‌மான‌ நிதி ஆதார‌ங்க‌ள்)  
 
(MMS)
உன்னையல்லால் ஒரு தலைவரை(தலைவியை) இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்  
 
(SG)
உன் பதவி இருப்பது என்னிடமே அது உயிர் போனாலும் தர மாட்டேன்  
(மயக்கமென்ன) (தொடரும்)
Today, 10:23:20
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சி 14 ‍ நியூ யார்க்கில் சிங்ஜி பதவியேற்றபின் இருவரும் மாலைச் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு சற்றே காலாற நடக்கிறார்கள் (கடற்கரையோரமாக) நியூ யார்க்கில் கடற்கரை உண்டா இல்லையா என்கிற விவாதத்திற்குள் நாம் போகவேண்டாம், கனவுதானே, தமிழ்னாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஜோடிகளே நொடிப்பொழுதில் சுவிட்சர்லாந்திலோ நியூஜிலாந்திலோ துருக்கியிலோ டூயட் பாடுவதை ஏற்றுக்கொண்ட தமிழ்கூறும் நல்லுலகில் நாமும் ஓர் அங்கம் என்கிற டிஸ்கிளைமரோடு இந்தக் கனவுப் பாடலோடு என் உடான்ஸ் நிறைவடைகிறது).  
 
 
Happy indru mudhal happy  
Happy indru mudhal happy  
koAdai mazhai megathai kandu  
aadum mayile vaa  
aadi varum thogai kaiyil  
moodum azhagey vaa  
thuNai engey idho ingey  
sugam engey ithO ingey  
ahahhahaaaaaaaaaa  
Happy indru mudhal happy  
Happy indru mudhal happy

Tuesday, August 16, 2011

நான் ரசித்த கார்ட்டூன்ஸ்

Courtesy : Cartoonist Madhi's Master Pieces >> Dinamani issue dated 13th Aug 2011


நிதானத்துல பேசுற பேச்சுதான்!

First Published : 13 Aug 2011 08:11:41 AM IST

Sunday, July 31, 2011

அபாய கட்டத்தில் இந்திய அஞ்சல் நிலையங்கள்!

சமீபத்திய ஜூனியர் விகடன் 31.01.2011 இதழில் 'அபாய கட்டத்தில் அஞ்சல் நிலையங்கள்!' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். அதிலிருந்து சில கருத்துக்களும் (அப்படியே) என் அபிப்பிராயங்களும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


'இந்திய அஞ்சல் துறையின் 247 ஆண்டு வரலாற்றில், மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், தபால் நிலையங்களின் எண்ணிக்​கையை படிப்படியாகக் குறைத்து, அஞ்சல் துறையை ஒட்டுமொத்தமாக மூடும் பாதையைத் நோக்கிச் செல்கிறது, மத்திய அரசு. 


இந்தியாவில் இப்போது 1,57,979 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. இவற்றில் கிராமங்களில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 1,39,182. கிட்டத்தட்ட 4,75,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒரு தபால் நிலையம் சராசரியாக 7,716 பேருக்கு சேவை செய்வதாகக் கூறுகிறது, இந்திய அஞ்சல் துறையின் ஆண்டு அறிக்கை!'


'அடிப்படை வியாபாரக் கட்டமைப்பில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாத அஞ்சல் துறை, வருவாயைப் பெருக்கத் தங்கக் காசு தொடங்கி தீபாவளி பட்டாசு வரை விற்பனை செய்கிறது. உலகின் முன்னோடி நிறுவனம் என்ற பெருமையை மறந்து, அமெரிக்காவின் 'மெக்கின்ஸே’ நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கிறது இந்திய அஞ்சல் நிறுவனம்'.



'மெக்கின்ஸே’ கொடுத்து இருக்கும் பரிந்துரைகளில் முக்கியமானவை இதுதான். நகர்ப் புறங்களில் உள்ள 9,797 அஞ்சலகங்களை மூடுவது. விரைவு அஞ்சல் மையங்களின் எண்ணிக்கையை 315-ல் இருந்து 89-ஆக குறைப்பது. அஞ்சலகச் சேவையின் முக்கிய ஆதாரமான ரயில்வே மெயில் சேவை மையங்கள் எண்ணிக்கையை 421-ல் இருந்து 84 ஆகக் குறைப்பது போன்றவைதான். இந்த செயல்பாடுகளைப் பார்த்தால், படிப்படியாக அஞ்சலகங்களை மூடி அஞ்சல் சேவையில் இருந்து அரசு விடுபட நினைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
இந்தப் பரிந்துரையை அமலாக்கக் கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த அஞ்சல் துறை ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். ''எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எங்கள் போராட்டத்துக்கு உண்டு. ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் அல்ல, எங்கள் துறையைக் காப்பாற்றும் உரிமைப் போராட்டம்!'' என்கிறார்கள் ஊழியர்கள்.
கூரியர் நிறுவனங்களிடம் இருந்து வெற்றி சூட்சுமத்தைக் கற்றுக்கொவதற்கு பதிலாக, கூரியர் நிறுவனங்களிடம் அஞ்சல் துறையை முழுமையாக ஒப்படைக்கும் வண்ணம், இந்தத் துறையில் இருந்தே அரசு வெளியேறுவதைப் பார்த்தால், என்னமோ நடக்குது... மர்மமாக இருக்குது!'




இனி என் கருத்து:


தற்போது சுமார் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரைக் கேட்டால் நான் சொல்லப் போகும் தகவமைவு (சூழ் நிலை) புரியும், அது ஒரு மலரும் நினைவாக என்றுமே காலத்தாலழியாத நினைவாகத் தெரியும். 


தமிழ்னாட்டிலிருந்து வெளியே (வெளி நாடு உள்பட) பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் தத்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தபால் அனுப்புவார்கள் (அஞ்சலட்டை, உள்னாட்டுத் தபால் மற்றும் 30 அல்லது 50 காசு உறை இத்யாதி), அப்படி வரும் தபால்களை வீட்டுவாசலில் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோர் பல கோடி. ஈ மெயில், செல்போன், எஸ்.எம்.எஸ் இத்யாதி வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்தோடு ஒப்பு நோக்கின், தற்போதைய நிலவரம் தெரியாது, அப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இருவேளை டெலிவரி உண்டு, பதிவுத் தபாலும் பண அஞ்சலும் இரண்டாவது தவணையில்தான் வரும். 


அப்போதெல்லாம் தபால்காரர் (ஆணோ பெண்ணோ) அடுத்தத் தெருவில் வந்தாலும் முன்கூட்டியே சென்று வாங்கிக் கொள்ள நினைத்தாலும் பெரும்பாலும் அவர் மறுத்துவிடுவார். 'வீட்டுக்குப் போங்க, அங்கேதான் வருகிறேனே?' என்பார். அதோடு, அன்றெல்லாம் தபால்காரர் என்பவர் ஒவ்வொருவருக்கும் தத்தம் குடும்ப அங்கத்தினர் போல் நம் வீட்டு நல்லது கெட்டது விழாக்களுக்கு பரஸ்பர அழைப்பிதழ் தந்து குசலம் விசாரித்து வாடிக்கையாளர் ‍ மற்றும் சேவை செய்பவர் என்கிற வித்தியாசமின்றி ஒரு வித பரவசம் உண்டாக்கும் அன்னியோன்யம் இருக்கும். 


ஹூம், இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால், நம் அடுத்தத் தலைமுறையினருக்கு இப்படிப்பட்ட சமூகப் பரிமாணங்களையே அவர்களுக்குத் தெரியாது, சொல்லியும் புரிய வைக்க முடியாது, கமல் சொல்வது மாதிரி (பம்மல் கே.சம்பந்தம் திரைப்படம் என்று நினைவு) இதெல்லாம் ஆராயக் கூடாது, அனுபவிக்கணும், அப்போதுதான் அதன் நெளிவு சுளிவுகளும் வேதனைகளும் புரியும். 


மும்பை டி.என். ரோட்டிலும் பல்லார்ட் எஸ்டேட் போன்ற பழைய பாரம்பரியக் கட்டிடங்கள், சென்னை பாரீஸ் கார்னர் பாரம்பரியக் கட்டிடங்கள், சின்னங்கள், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன், எழும்பூர் ஸ்டேஷன், பழைய ஸ்பென்சர் கட்டிடம் (அண்ணா சாலை) இத்யாதி ஒரே இரவில் இடித்து (அல்லது இடிந்து) தரை மட்டமானால் சென்னை வாழ் நடுத்தர மற்றும் முன் தலைமுறையினருக்கு ஒரு வித மனோ வேதனை பற்றுமே (ஏக்கத்தோடு கூட), அது போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது, இந்திய அஞ்சலகத் துறை இழுத்துமூடப்படும் என்கிற தகவல் படிக்கும்போது. கண்ணீர் வருகிறதைய்யா? 


என்று தணியும் இந்த அன்னிய மோகம்? என்று தணியும் இந்த பன்னாட்டினரிடம் அடிமைப்படும் கையாலாகாத்தனம்? என்று தணியும் இந்த 'பரங்கியர் சொன்னாலும் செய்தாலும் எல்லாமுமே சரி, நம்மவர் செய்தால், சொன்னால் எட்டிக்காயாகக் கசக்கிறதே' என்கிற மனோபாவம்?


டெலிவரி செய்யாத பாஸ்போர்ட் மற்றும் கடிதங்கள் குப்பையில் - அந்த ஆவணங்களிலும் தபால்களிலும் எத்தனை எத்தனை பேர்களின் தலையெழுத்து மாறும் (படிப்பு, வேலைவாய்ப்பு, இத்யாதி!!) வாய்ப்புகள் ஒளிந்திருந்ததோ? இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் அராஜகங்கள் - அதுவும் அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் மூலம், பணிபுரிபவர்களால் - அரங்கேறும், வெட்கக்கேடு!! சில பல சொந்தச் சூழ்னிலைகளால் வெளி நாட்டு வேலை வாய்ப்பு வந்து, பின் உதறி, பிற்காலத்தில் மறுவாய்ப்பு வந்து லபக்கென்று வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியோர் 'போச்சுடா, தப்பித்தோம்!!' என்று பெருமூச்சு விடுவார்கள்.



இதே ஜூ.வி. இதழில் வேறு ஒரு கட்டுரையில் மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியதாக ஒரு தகவல் வந்திருந்தது; அது அப்படியே இந்திய அஞ்சல் துறை விஷயத்திலும் முற்றிலும் சாலப் பொருந்துகிறது. 


சகாயம் சொன்ன சிறிய கதை உதாரணம்:

'ஜெல்லி மீன், நத்தையைச் சாப்பிடும். அப்போது தன் ஓட்டுக்குள் புகுந்துகொள்ளும் நத்தை, ஜெல்லி மீனின் வயிற்றுக்குள் போனதும் மெள்ள வெளிவந்து, ஜெல்லி மீனின் வயிற்றைக் கடித்து அதைக் கொன்று விட்டு வெளியேறுமாம். இன்றைய தேதியில் ஊழலும் லஞ்சமும் இந்த நத்தையைப்போல, மெது வாக நம் தேசத்தில் நுழைந்து, அழிக்கிறது' - 


மாவட்ட ஆட்சியர் சகாயம் சொல்லிய கதை அப்படியே இந்திய அஞ்சலகத்துறை, பிராவிடன்ட் பண்ட், சிறு மற்றும் குறு வணிகத்துறையில் பன்னாட்டு முதலாளிகள் காட்டும் ஆர்வம், புற்றீசல் போல் பல துறைகளில் இந்த பன்னாட்டு மோகம் எப்படியெல்லாம் நம் இந்தியாவைச் சீரழிக்கப் புகுந்துள்ளது என்று புரிய வைக்கிறது. நன்றி திரு. சகாயம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டதற்கு.

Thursday, July 21, 2011

ஏழ்மை ஒழிப்பு நாடகம்

இந்தியாவின் தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட ஒரே வழி ஏழ்மையை ஒழிப்பதுதான். ஏழ்மையை எப்படி நீக்குவது? ஏழை என்று ஒருவன் இருக்கும்வரை ஏழ்மையை ஒழிக்க முடியாது. யார் இப்போது இந்தியாவில் உண்மையான ஏழை?

மகாத்மா காந்தி சொல்லியுள்ளது போல், இந்தியாவின் உயிர் நாடி கிராமங்களே. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறும்? கிராமங்கள் முன்னேற ஏழை முன்னேற வேண்டும். கிராமங்களை நகரங்களாக்கிவிட்டால், ஏழை நகரவாசியாகிவிடுவான். ஏழை நகரவாசியாகிவிட்டால், அவனிடம் நிலம் இருக்காது. நிலம் இருந்தால்தானே அவன் உழவுத்தொழில் செய்து, வருமானம் பார்த்து, தன் குடும்பத்தினை முன்னேற்ற முடியும்?

உழவுத் தொழில் செய்ய இப்போது பற்பல பிரச்சினைகள். தண்ணீர் இல்லை, சரியான தரமான உரமில்லை, விதையில்லை, மின்வசதி இல்லை, எனவே உழவுத்தொழில் செய்ய முடியாது. அதனால் நிலம் தேவையில்லை. நிலத்தை விற்று அல்லது கான்கிரீட் வீடு கட்டிவிட்டால் வேறு தொழில் செய்யலாமென்றால், வேறு தொழில் செய்யப் பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி பெற பணம் வேண்டும். வேறு வழியின்றி நிலத்தை விற்கிறான், நகரம் நோக்கிப் பயணிக்கிறான். கிராமத்து ஏழை என்கிற நிலையிலிருந்து நகரத்து ஏழை என்கிற பதவி உயர்வினைப் பெறுகிறான்.

இப்படியாகத்தான் இங்கு இன்றைய இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பு என்கிற நாடகம் அரங்கேறி வருகிறது. யாரோ புண்ணியவான் (?) மனதில் தோன்றியதோ என்னவோ, ஏழையை ஒழித்து விட்டால் ஏழ்மையும் ஒழிந்தாற்போல்தானே? அதுதான் நம் நாட்டு அரசியல்வியாதிகளும் நிர்வாகத் துறையினரும் ஆட்சி அதிகார வர்க்கத்தினரும் தத்தம் திட்டங்களை வகுக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த அல்லது கேட்டமாதிரி, ஏழை என்று ஒருவனை ஏழையாகவே வைத்திருந்தால்தான் ஏழ்மை ஒழிப்பு என்கிற நாடகத்தை இவர்கள் தொடர்ந்து நடத்த முடியும்?

இவர்கள் யோசித்து நிறைவேற்றுவது போல், ஏழைகளை பெருவாரியாக ஒழிதது, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக தம்பட்டமடித்துக் கொண்டால், ஜிடிபி உயரும், பின் ஜிஎன்பி உயரும், அதன்பின் விலைவாசிக் குறியீடு சாதகமாகக் காண்பிக்க முடியும் (உண்மைக்கு மாறாக).

India - Current State of Affairs


Talking and thinking about Current State of Affairs of and in India, I can only sum up this way. India or its Government-that-be on the day, has reached a level of highest saturation point where it can call itself into a state of ‘Nikamba’ in two scenarios:
1)      A head of family with 3-4 children all in their ages between 1-10 at the most; the spouse is illiterate and is only capable of handling the household chores and nothing else; she has no knowledge or courage to suggest any alternatives to the head of family, who himself knows nothing but doing petty jobs here and there; he has no technical skill set to improve himself to gain some knowledge of few craftsmanship or to do something to earn and so make a living for himself and support his family. Passers-by and the neighborhood including near and dear friends or relatives can only help  occasionally to feed the children at the most when their coffers are filled enough with some money so they can afford and think of helping this poor man. His self-respect stops him to go and ask for paisas from others leave-alone allow his spouse or children to go and beg for food. If someone helps, fine, else, he lives life like this. Whoever helps from the neighborhood, there is no guarantee or assurance that they are assisting with a whole-heart; there can be instances where the giver has some ulterior motives to make use of his poverty, they on one side feed his children and on other side, encourage or persuade his elder children (boys or girls, it does not matter) to indulge in anti-social activities; go and make friendship with anti-social elements, thus when time passes by, they become an irritant to the neighborhood and the society that they become thieves, or whatever they could become in not-so-obvious pattern. Now, who is to blame for this family’s state-of-affairs? Is it the Children to blame for becoming anti-social or the parent who is hapless too, in terms of financial strength? If end of the day, his house is robbed and whatever is left over, were also being taken away by thieves or robbers. Now, this family will be on the road, including the head and spouse, leave alone children, as they are already on the road.
2)      An impotent husband who cannot obviously keep his spouse happy and pleased. He is so capable to make money and justify his livelihood but his problem he cannot satisfy his wife’s desires and ambitions. When time passes, the lady ventures out for want of satisfying her urges and she indulges in sort of activities to keep herself happy, she does not listen to her husband’s words or does not bother about his opinion as well. The neighborhood takes advantage of this situation and exploits the lady’s potentials and end of the day she is the most-sought-after lady in that village. Later, due to age, lady thinks of returning home by then the husband already became insane and insolvent and lost all his wealth what he thought that would suffice to make a living for him and her; but now when she returns the chap cannot help, even if he is willing to pardon and take her home. Who is to blame here the lady or the husband?
In both scenarios above, it is the head of the family to be blamed, who reached a state of ‘Nikamb’ with no knowledge of what to do and how to address his problems and how to trouble-shoot? If he is wise enough, the first one could have learnt more craftsmanship or some kind of training to do some lawful business or self-style profession to make a decent living for his family and children; the second one could have taken a call at the beginning stages of his post-married life when he realized he cannot do much; he could have opted to divorce her legally and let her go freely as she may pleases. Now he did not do that at all, and the lady was the sufferer and indirectly he himself suffered and invited the public wrath.
This is what exactly is happening in current state of affairs in India. The powers-that-be do not want to admit their mistakes or that they are incapable of tackling the situation or save the people from such terrorist or extremist activities derived both from internal and external sources, it does not matter really of the origin here. As long as the govt. is not capable to stop such atrocities, it must step down honestly and give way to the others who are much more capable of handling the situation, instead of always claiming to be hapless, helpless and blaming the sources from across the border for all the internal occurrences affecting the socio-political well-being of the state.  

Saturday, December 4, 2010

தும்மல் ராசாவின் துள்ளலான சந்தேகங்கள்

1) கிராமி அவார்ட், கிராமி அவார்ட்னு சொல்றாங்களே, அதை ஏன் மகா மெகா மாநகரங்களில் விழா வைத்து வழங்குகிறார்கள்?

2) சின்னத் திரை மற்றும் வெள்ளித் திரை ஆடல் பாடல் போட்டிகளில் ஜோடிகளுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்குன்றாங்களே, அது அவர்களுக்குள் உள்ள பிசியாலஜிக்கல் அல்லது பயாஜலக்கல் அல்லது பிசியோ பயாலஜிக்கல் காரணங்களாலா? அல்லது ஒருவர் மற்றவரின் மேல் வைத்த பய லாஜிக்கல் காரணங்களாலா?

3) அதுபோல் சூப்பர் சிங்கர்ஸ் முதலான பாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களைப் பார்த்து, சில சமயம் நடுவர்கள் 'உனக்கு ஸ்ருதி சேரவே இல்லை, ஸ்ருதி சரியாக ஒத்துழைக்கவில்லை' என்கிறார்களே, பேசாமல் இது போன்ற நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக 'ஸ்ருதி' என்ற பெயருள்ளவர்களை மட்டுமே நியமித்து (ஒரிஜினல் ஸ்ருதிகள்தான், ஸ்ருதி என்கிற புனைப்பெயர் அல்லது ஆன்‍ஸ்கிரீன் பெயர் கூடாது), போட்டியாளர்கள் பாடும்போது ஒருங்கிணப்பாளரும் நடுவில் மேடையில் இருக்க வேண்டும் என்று விதிகளை தளர்த்தினாலென்ன?

4) 2G Scam : Could it be true ?
I just did a simple and at-random calculation: Thirukural has 133 chapters with a total of 1330 Kurals. Just multiply 133x1330 works out to 176890. If you consider the approx. amount of loss to the Govt. Exchequer purportedly reported by CAG, it appears they managed to loot Rs.19 Crore per word per Kural approx. (176890,00,00,000) - Kudos to the great disservice these people did for Tamil !!! (Just a different thinking perspective (Maathi Yosi), Period !!

5) Great People who faced an early death / Spiritual elevation :
Here is a list of few great people, who contributed by their philosophy or works on Spirituality, Religion, Literature and/or Science. There must be some similarity leading to their earlier elevation to spiritual immortality. None of these lived more than 40 years.  There may be more such great scholars worldwide who would have contributed to Science, Spirituality etc. Can some through some light on this?
5a) Adhi Sankaracharya (788 CE to 821 CE), Mukti at age 33 yrs.
5b) S Ramanujam, Mathematician (1887 - 1920) Died at age 33 yrs.
5c) C P Ramanujam, one more Mathematician (1938-1974) Died at 36 yrs.
5d) Jesus Christ 5 BC/BCE - 30 AD/BCE) Spiritual elevation supposedly at age 35 yrs. There are claims that  he lived much longer and died at much later age in Indian Continent.
5e) Subramaniya Bharathi, Tamil Poet/Writer (Dec 11, 1882 to Sep 11, 1921) Died at 39 yrs.
5f) Swami Vivekananda (1863-1902) Died at age 39 yrs.

இதற்கு நான் எனக்கே சொல்லிக் கொண்ட காரணம். நம் எண் சாண் உடலில் 2.3% அல்லது 3.2% (எதுவோ) மட்டுமே கொண்டது மூளை. அதை அதன் பரிபூரண சக்திகொண்டு உபயோகித்தவர்கள் ரிஷிகள் அல்லது தபோவலிமை கொண்ட ஞானிகள். அவர்களே 100% பிரயோகம் பண்ணியிருப்பார்களா தெரியாது. சராசரி மனிதன் 5% பயன்படுத்தினாலே பெரிய விஷயம். மேற்சொன்ன அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அல்லது அவதார புருஷர்கள் ஒருவேளை அதீதமாய் 30,40% க்கு உபயோகப்படுத்தி இருக்கக்கூடும். அதனால், மூளையின் பிரலாபம் நிறைய எனர்ஜி சென்றுவிட்டதால் ஸ்தூல சரீரத்தின் ஆயுசு குறைவாய் முடிந்ததோ? 

இதற்கு ஒரே விதிவிலக்காய் ஒருசில அவதார புருஷர்களைச் சொல்லலாம். ஸ்ரீராகவேந்திரர், அவருக்கு விதிக்கப்பட்டது சுமார் 740 சொச்சம் ஆண்டுகள் இப்புவியில். அவர் முக்தியடைந்ததாய் சொல்லப்பட்டு இப்போது சுமார் 350+ ஆண்டுகள் ஆகின்றது. அதாவது, ஸ்தூல சரீரத்துடனேயே அவர் த்யானத்தில் இருக்கிறார். ரஜினி புகழ் பாபா கூட அதுபோல் 1000 அல்லது 2000 வருஷம் எனச் சொல்லப்படுகிறது. இதுபோல் திபெத்தில் ஒருவர் உண்டு, ஜப்பானிலும் ஒருவர் உண்டு.