Wednesday, December 31, 2014

இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!

இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!

November 14, 2014 at 8:08pm
இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=====================================

[எதுகை மோனை இலக்கணம் செய்யுள் உரை நடை எதுவாய்க் 
கொள்ளினும் அந்தி சந்திப் பிழை பொறுத்தருள்வீர்]

இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்

முதல் இருபதில் பயமறியாக் காளைக்கன்றாய்
முதல் முதல் உலகமறியாப் பருவம் வென்றாய்
முதல் தலைமுறையிடம் தயக்கம் கொண்டாய்

இரண்டாம் இருபதில் உலகறியத் தலைப்பட்டாய்
மிரண்டால் வருவதில் கலகமறியாக் காரியம் கொண்டாய்

அரண்டால் வருமோ உலகம் உன் கைக்குள், உருண்டு
புரண்டால் வருமே பலதும் உன் மெய்க்குள்

முதல் இருபதை அடக்கும் ஏனை இருபதுகள்
இரண்டாம் இருபதை மடக்கும் பிந்தை இருபதுகள்
மூன்றும் நாலும் கடக்கும் வாழ்வின் அனுபவங்கள்

முதலாம் இருபது கேட்கும் ஆயிரம் கேள்விகள்
இரண்டாம் இருபது மிளிரும் மிரளும் உருளும் பிரளூம்
மூன்றாம் இருபது மெல்ல மெல்ல நற்குணம் பேணும்

மூன்றாம் இருபதில் கடக்கும் வாழ்வின் மயக்கம்
நாலாம் இருபதில் நடக்கும் வாழ்வோ தாழ்வோ ஏன் தயக்கம்

மூன்றாம் இருபது கடக்கும் ஏனை இருபதுகளின் ஏற்றம் இறக்கம்
(மூன்றாம் இருபது தாங்கும் ஏனை இருபதுகளின் ஏற்றம் இறக்கம்)

நாலாம் இருபது பாங்காய் ஏற்கும் மற்றை இருபதுகளின் மயக்கம்
நாலாம் இருபது தேங்காய் ஏங்கும் கூற்றை வருவது நோக்கும்

முதலோ கடையோ பிறழ்கின் இரண்டும் மூன்றும் தாங்கும் குடும்பச் சுமைகள்
முதலிரண்டில் வாரா ஞானமும் பேறும் கடை இரண்டில் வாழ்வைத் தாங்கும்
கடையிரண்டில் வருமே பேறும் புகழும் முதலிரண்டில் உணரா வேட்கை
முதல் மூன்றில் காணா யாவும் நான்கில் கொள்ளும் வாழ்வின் யாக்கை

வாழ்வில் இருப்பதை இருபது இருபதாய்க் கொண்டால், ஓர் 
இருபதில் இருப்பது மற்றை இருபதில் இல்லை

வாழ்விலும் தாழ்விலும் இருபது இருபதாய்க் கடந்தால்
வாழ்வதும் தாழ்வதும் நாரணன் செயலே!! 

No comments:

Post a Comment