Wednesday, December 31, 2014

கல்வி வேளையில் கலவியிச்சை வரலாமோ முறையோ?

Posted as a Note in FB Wall since 24.12.2014

கல்வி வேளையில் கலவியிச்சை வரலாமோ முறையோ?

பள்ளிப் பிராயம் பாடம் படிக்க பள்ளியறைப்பாடம் ஏதுக்கடா
துள்ளித் திரியும் ஓடம் துடிக்க தெள்ளுதமிழ் தெம்மாங்கு போதுமடா

கல்வியில் கலவி கலந்தால் கல்வியும் போம் கலவியும் போம்
பள்ளியில் கல் கல்லாததும் அவனியில் செல்லாவிடம் செல், 
பரணியில் காணாவிடம் காண் ஏதேகிலும் செய், கல்வி கொள்!!

கலவி வேளை வரும் போம் கல்விவேளையில் வாரா ஒழுக்கம் 
உலவி நாளை கதறினும் வருமோ நல்லொழுக்கம்
கலவி நாளையெண்ணி கல்விவேளை தொலைத்தால்
உலவி திக்கெட்டும் சாவாய் மெய்யுணர்வு வேண்டி.

உள்வினை மாயமோ ஊழ்வினை மாயமோ  
கொள்வினை பருவத்தே பயிர் செய்
உன்வினை நீயறியாய் அவனறிவான்
தன்வினை அறியான் பவனியிலோர் பாவம்
முன்வினை அறியா மானிடா தவமிருந்தும் கிட்டா பாவம்
எள்வினை கொள்ளேல் ஊழ்வினை கொணரேல்.

மெய்யென்ன பொய்யென்ன எல்லாம் மாயமடா
மெய்யென்ன செயமென்ன பயமென்ன காயமடா
மெய்யென்ன செய்யும் பொய்யென்ன செய்யும்
மெய்பொய் உள்ளாறு பொய்யெனும் கொல்.

செல் செல் செல் எனச் செல்வாய்
கல் கல் கல் எனக் கொள்வாய்
சொல் சொல் சொல் எனக் கேளாய்
நில் நில் நில் ஒருக்கணம் நில்லாய்
கல் கல் கல் என மரணம் வரினும் கற்பாய்.

செல்வம் வரினும் உற்றம் வரினும் யாக்கை போயினும்
கொள்வம் ஒழுக்கம் பெறினும் பெரிது கொண்டது கற்றது போயினும்
கொள்வம் விழுப்பம் அதனினும் பெரிது இப் பிறவியெனும் 
கோளறு பதியம் எதனினும் அரிது கற்கை நன்றே கற்கை நன்றே. 

[கோனார் நோட்ஸெல்லாம் கேட்கக்கூடாது!! புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க!!)


No comments:

Post a Comment