Wednesday, December 31, 2014

கல்விப்பாடம்

Posted as Note on my FB wall since 20.12.2014

கல்விப்பாடம் 1:

சங்கீதம் எப்படி என்னை ஆட்கொண்டது என்று பிலஹரிப் பிலாக்கணம்  பாடியாயிற்று (இங்கிதம் தெரிந்த அளவுக்குக்கூட சங்கீதம் புரியலை!!)

கல்வி அல்லது படிப்பு என்னை எப்படி ஆட்கொண்டது என்று சிந்தித்தால்..................(ஒரு 37 ஒளிவட்டம் வெண்மையாய் சிறுகச் சிறுக விரிகிறது, ஒண்ணுமில்லை, .'.ப்ளாஷ்பாக்தான்).

முறையான பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரி வாசம் கிடைக்கலை. குடும்ப சூழல் என்னை நான் விரும்பிய படிப்பைப் படிக்க (கல்லூரி சென்று) ஏதுவாயில்லாததால் அஞ்சல் வழிக்கல்விதான் வாய்க்கப்பெற்றேன். இள நிலை மற்றும் முது நிலை வணிகம் பயின்றேன். முது நிலையில் தேர்ச்சி பெற இயலவில்லை.

இள நிலை ஒருபுறம் இருக்கும்போதே ஒரு ஆடிட்டர் ஆபீஸில் தணிக்கைத் துறையில் வாய்ப்புக்கிட்டியது. 3 ஆண்டுகள் பயிற்சிக்குப்பின், இள நிலை முடியும் தருவாயில் சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ படிக்கும் ஆர்வமென்னவோ ஆழ்மனதில் இருந்தது.

என் ஆடிட்டர் முதலாளியும் துணையாய்த்தான் இருந்தார் என்னை அவ்வழியில் ஊக்கப்படுத்தினார். ஆனால், என் தனிப்பட்ட குடும்ப சூழலில் உழன்று மும்பைக்குச் சென்றேன். ஏதோ மற்றோர் நிர்ப்பந்தமான சூழலில் பெங்களூர் சென்று மீண்டும் நண்பர் உதவியுடன் வேறு ஓர் ஆடிட்டர் ஆபிஸில் சேர்ந்தேன். பின் மறுபடியும் மும்பை வாசம், திருமணம் என்று 2 ஆண்டுகள் சென்றது. பிறகு வாழ்க்கையின் ஓட்டத்தில் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்தேன்.

அவ்வளவுதான். மேற்கல்வியைத் தொடர வழி தெரியாமல் பிள்ளைகள், படிப்பு என்று 13 ஆண்டுகள் சென்றது. இடையே மறுபடியும் அஞ்சல் வழியில் ஐ.சி.டபிள்யுவுக்கு விண்ணப்பித்தேன், சில காலம் பின்னர் அதுவும் கை நழுவியது. .'.போகஸ் இல்லாமல் இருக்கும் நிலையை நிலை நிறுத்திக்கொள்வதிலேயே 13 ஆண்டுகள் போயின.

கல்விப்பாடம் 2:

பணிச்சூழலில் நல்ல பெயர் நன்னடத்தை அனைத்தும் இருந்தும், என்னவோ ஒரு ஏக்கம் உள்ளுக்குள்ளேயே இருக்கும். எப்படியாவது இன்னும் இன்னும் மேலே பொசிஷனுக்கு போகணும் என்கிற உத்வேகம் இருந்தது, மார்க்கமில்லாமல் ஒருவிதக் கையறு நிலை அப்போது (1998 2000 வாக்கில்).

இருக்கும் வேலையை தக்க வைக்கவே ராடிக்கொண்டிருக்கும்போது
37 வயதுப் பிராயத்தில் ஒரு ஆத்மார்த்தமான‌ நட்பு வாய்த்தது. பணி நிமித்தம் அவருடன் கலந்தாய்வு ஒருங்கிணைப்புடன் இருக்கும்போது வாழ்க்கைப் பாடம் நிறையப் பெற்றேன். அவர்தம் ஆரம்ப கால வாழ்க்கை, அவர்தம் குறிக்கோள்கள், கால ஓட்டத்தில் அவர் எப்படி எப்படியெல்லாம் நீந்தி எதிர் நீச்சல் போட்டு அன்றுள்ள நிலைக்கு உயர்ந்துள்ளார் என்கிற இன்ஸ்பிரேஷன் கிட்டியது. கூடவே இருவரும் அப்போதெல்லாம் தனியாய் அங்கும் எங்கள் குடும்பங்கள் சென்னையில் இருந்ததால் பணி நேரத்திற்குப் பிந்தைய நேரத்தில் அவருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாகவோ அவ்வப்போது சிற்சில பொழுதுபோக்கு என்றும் கடந்தது.

எத்தனை நிர்ப்பந்தங்கள், எத்தனை குடும்பக் கஷ்டங்கள், மனக்கிலேசங்கள் இருப்பினும், மேற்கல்வி என்கிற ரீதியில் நம்முடைய சாப்ட் ஸ்கில் எப்படி வளர்த்துக்கொள்ளணும் என்று அவர்தான் எனக்கு 3 வருடங்கள் போதித்தார். சில பல வழிமுறைகளை நான் கைக்கொண்டு 2003ல் சென்னை திரும்பி என் துறை ரீதியாய் ஒரு சர்டிபிகேஷன் கோர்ஸ் படித்தேன். அன்றைய நிலையில் குடும்பச் சூழலில் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு 13 ஆண்டுகளுக்குப் பின் மொத்தமாய் 20 வருட அனுபவம் கிட்டிய நிலையில் ஒரு புதுப்பாதையில் பரிமளிக்க முதல் 3 ஆண்டுகள் நான் மேற்கொண்ட தியாகங்கள் பற்பல. சகித்துக்கொண்ட விஷயங்கள் பற்பல. பொருளாதார சமூகவியல் சம்பந்தமாக கண்ணுற்ற அனுபவித்த இடையூறுகள் பல. என் வாழ்க்கைத் துணைவி என் கஷ்டங்களில் உடனிருந்தார். துவங்கியது முதலே என் இளைய சகோதரருக்கும் எனக்கும் இருந்துவந்த புரிந்துணர்வு ஒத்துழைப்பு இத்யாதி காரணமாய் புதுப்பாதையில் பீடு நடை போட என்னை நான் ஆயத்தப்பட்டேன்.


யதார்த்தமே உன் விலையென்ன?

யதார்த்தமே உன் விலையென்ன?

December 24, 2014 at 1:24pm
நம்மில் பலருக்கு எந்த வயதில் எதெதற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்? எதெதைத் தள்ளணும் அல்லது கொள்ளனும்னு புரியறதேயில்லே. 

கூட்டுக் குடும்பம் என்று இருந்த நாட்களில் பெரியோர் சொல்வது கண்டிப்பாய் (சிலவமயம்) தண்டிப்பாய்க் கூட இருக்கும். வேறு வழியின்றி அத்தகைய கண்டிப்புச் சூழலில் வளர்ந்து கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அலைந்து திரிந்து குட்டிக்கரணம்போட்டு களவும் கற்று (சிலர்) களவு சபலம் இத்யாதி விஷயங்களில் ஆட்பட்டோ ஆட்படாமலேயோ ஒழுக்கத்தின் வேர்களை உணர்ந்து திருந்தியவர்கள், அதன்பொருட்டு வாழ்க்கையில் மேலே சென்றவர்கள் பாக்கியசாலிகள். 

வாழ்வின் ஆரம்பக் காலத்தில் (முதல் 20) பெற்றோரின் அரவணைப்பும் அன்பான கவனிப்பும், அந்த அன்பினூடே வளர்சூழலில் வளர்ந்தவர்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர்கள். 

முதல் 20ல் நாம் வாய்க்கும் வாழ்க்கை அடுத்த 20ல் நம்மை நெறிப்படுத்தும் அல்லது தீயதை நோக்கிச் செலுத்தும். இரண்டையும் தாண்டி வந்துவிட்டால் தான், தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று வந்துவிட்டால் மனிதனுக்கு பொறுப்புணர்வும் ஒழுக்கமும் தானாகவே வரும். வரணும், வந்தால் வரம்!! வராவிடில் முன் ஜென்ம சாபம்தான்!! சந்தேகமே வேண்டாம். 

3ம் 20ல் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வோம், அடுத்த தலைமுறை நம்மை முன்மாதிரியாய்க் கொண்டே வளரும். முதல் 40ல் நமக்கேற்பட்ட அனுபவங்களின் விழுமியங்களே படிமானங்களே பின் 40ல் நாம் நம் அடுத்த தலைமுறைக்கு எதைத் தருகிறோம் அல்லது காண்பிக்கிறோம் என்பதின் சூட்சுமம். 

எப்பேற்பட்ட அனுபவமும் அந்தந்த வயதில் அவரவருக்கு யதார்த்தம்தான். யதார்த்தத்தை வாழ்வியலின் மகத்துவத்தை உணர சிலருக்கு ஒரு பிறவியே பத்தாது. சிலர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டும் பிறவிப்பயனை ஊழ்வினையின் பலனை அனுபவித்தே சுகம் என்றால் என்னவென்றே அறியாமல் மாண்டவர் உண்டு.

முன் 40ல் நமக்குக் கிட்டாதது நம் குழந்தைகளுக்கு யதார்த்தமாக நாம் தந்துவிடும் பார்வையில் குறிக்கோள் என்று இல்லாமலே வாழ்ந்தாலும் தானாகவே நிகழும் ஒரு நிகழ்வாகவே அந்த டிரான்சிஷன் நடந்தேறும். 

அப்படித் தானாகவே கிடைக்கும் நல்லதுகளை அதுதான் யதார்த்தம் என்று கொள்ளும் இளம் தலைமுறை அவர்தம் மத்திம வயதில் (2ம் இருபது) கெட்டது என்ன என்று தெரியாமலே சொல்லிக் கொடுக்காமலே வளரும் சூழல் இங்கு பெரும்பான்மை.

அதீதமாய் அன்பு காட்டுகிறோம் என்கிற பெயரில் இன்றைய நடுத்தர வயதினர் செய்திருக்கக்கூடிய தவறுகள் (தவறு என்று உணராமலேயே) இயல்பாய் அப்படி அவர்கள் தம் வாழ்க்கையை கடந்திருப்பர். 

ஆனால் சில பல நேரங்களில் அந்த அறியாத் தவறுகள் நம்மை நம் வாழ்வின் பிற்பகுதியில் (பின் 40ல்) தாக்கும், தாக்கும்போது முன்னிருபதில் வாங்கிய அடிகள் நம்மை மீண்டும் ஒரு முறை 'மலரும் நினைவுகளை'க் கிளறும். 

நம்மில் சிலர் (பலர் என்று சொல்ல ஆசை, ஆனால் உண்மை நிலைக்கு மரியாதை தரணுமே, அதுவும்தானே யதார்த்தம்தானே) மேற்சொன்ன அனுபவங்களைத் தாண்டியிருப்பார்கள். 

பின் 40ல் இதையெல்லாம் தாங்கிக்கொண்டு மனித உறவுகளின் மாண்பினையும் நீட்சியையும் அந்தந்த சூழலில் அதனதன் பரிமாணம் (பரிணாமம்?) அறிந்து நல்வழியில் செல்வதும் அல்லதில் செல்வதும் அவரவர் பகுத்தறிவு காட்டும் பாதை. எல்லாம் அவன் செயல்!!  

ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!

Posted on my FB wall as a Note since 27.12.2014

Credit Courtesy goes to my Thuglak Reader Forum Friend from Abu Dhabi / Dubai - Mr Guru Prasad (Wahe Guru).

ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!...

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:
* சிக்ஸ் அடுச்சா அவுட்டு
* 1பிட்ச் கேட்ச் இருக்கு
* தொடர்ந்து 3 பால் விட்டா அவுட்டு
* முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl
* இருட்டியதும் Fast Bowl போட முடியாது
* டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்
* நாங்க மட்டும் மெதுவா போட்டோம். நீயும் போடு
* ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu
* Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக
அனுப்பப் படுவார்.
* முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடிச்சவந்தான் போயி பந்த எடுக்கனும்
* பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும்
* பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது, அந்த உரிமை கீப்பருக்கு மட்டுமே...

யார் தமிழர்?

Posted as a Note on my FB Wall since 26.12. 2014 

ஒரு சின்னப் பெரிய சந்தேகம், விளக்கம் தேவை (பேஸ்புக்கிலிருந்து ஒரேயடியாக விலக்கம் தேவையா இல்லையான்னு இதுலேருந்தே புரிஞ்சுடும், ஹா........ங்........... நான், என்னைச் சொன்னேன்!!)

தமிழன் தமிழன் என்று சொல்கிறோமே? யார் மெய்யான தமிழர்?

தமிழர்களை வகைப்படுத்தினால் பல வகை உண்டு:
1) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், மறந்தும் தமிழ் நாட்டைத் தாண்டி அக்கரை செல்லாதவர்கள்

2) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், சுற்றுலாவுக்காகவோ திருமணம் கருமாதி போன்ற விசேஷங்களுக்காக மட்டும் எல்லை தாண்டியவர்கள் (இந்த எல்லை இந்தியாவுக்குள்ளோ பரதேசமோ எங்கிட்டாவது இருந்து விட்டுப்போகட்டும்)

3) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், ஆனால் பிழைப்புக்கு வழி தேடி பிற மாநிலம் அல்லது பிற நாட்டுக்குச் சென்று குடியேறிவிட்டவர்கள். ரிடையர்மென்டுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து சாகும்வரை வாழும் உத்தேசம் உள்ளவர்கள். நல்லது கெட்டதுக்கு மட்டும் இங்கு வருபவர்கள் (சுற்றுலா உள்பட). 

4) ஆப்ஷன் 3க்கு நேர் எதிர் (50%). அதாவது வெளி மாநிலம் அல்லது தேசத்துக்குச் சென்று விட்டவர்கள், நிரந்தரவாசிகளாய் வெளியிலேயே சாகும்வரை இருக்க உத்தேசமுள்ளவர்கள். 

5) ஆப்ஷன் 3க்கு நேர் எதிர் (100%). அதாவது தமிழும் தெரியாது, பிழைப்பும் இங்கு இல்லை, எனவே இங்கு வந்து செட்டிலாகும் எண்ணம் சாத்தியமில்லை. தமிழ் நாட்டில் பிறந்தது ஒன்றே இவர்களின் தமிழ் நாட்டு லிங்க். 

6) அடிப்படையில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 தலைமுறையில் முன்னோர் (தாய்வழி அல்லது தந்தைவழி) தமிழ் நாட்டினர். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளி மாநிலம் அல்லது நாடு. ஆனால் தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுதப்படிக்கத் தெரியாது, தமிழ் நாடு எங்கள் பூர்வீகம் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். 

7) ஆப்ஷன் 6க்கு நேரடி எதிர் (50%). அதாவது தமிழ்னாடுதான் பூர்வீகம், ஆனால் இங்கு வசிப்பதில்லை. ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். நன்கு பேசத் தெரியும். தமிழ் நாட்டு கலை இலக்கிய இயல் இசை நாடக விஷயங்களில் ஆர்வம் உண்டு, பரிச்சயமும் உண்டு, அதன் மூலம் ஒரு தொழில் சார்ந்த வளர்ச்சி வாய்க்கப்பெற்றவர்கள் எனலாம். ஆனால் நல்லது கெட்டது இல்லை சுற்றுலா தவிர தமிழ் நாட்டோடு தொடர்பில்லை. வாழ்வியல் முறையால் தமிழராய் வெளியே வாழ்பவர்கள். 

8) ஆப்ஷன் 6க்கு நேரடி எதிர் (100%): அதாவது பிறப்பால் முன்னோர் வம்சத்தால் தமிழர் இல்லை. எதாவதொரு பிற மானில சார்புள்ளவர்கள். பிற மானிலப் பூர்விகம் எனலாம். ஆனால் தொழில் நிமித்தம் இங்கு வந்து செட்டிலானவர்கள், தமிழ் பேசத் தெரியும் தெரியாது என்கிற பாகுபாடு இல்லை. தமிழ் நாட்டில் வாழ்வதால் இங்குதான் ஜீவிதம் என்கிற நிலையில் உள்ளவர்கள். நல்லது கெட்டது சுற்றுலாவுக்கு மட்டும் வெளியே செல்பவர்கள். 

9) அடிப்படையில் இந்தியரே இல்லை. தமிழ் நாட்டில் வாழ்பவரே இல்லை. ஆனால் தமிழர்தம் நாகரிகம், கலை, இலக்கியம், இயல் இசை நாடகம் இத்யாதி கலாச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவிலேயே வாழ்வதில்லை. ஜீவாதாரம் இங்கு இல்லை. நல்லது கெட்டது சுற்றுலா என்பதுதான் தமிழ் நாட்டோடு இவர்களின் லிங்க். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்து இன மத சாதிக் கோட்பாடுகளை எல்லாம் தாண்டி பண்பாடு கலாசாரம் அதைப் பேணுவது, அதைத் தங்கள் வாழ்வியலாகக் கொண்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்பவர்கள். அதுதான் அவர்களது தமிழ் நாட்டு லிங்க். 

10) ஆப்ஷன் 9க்கு 25% எதிர். அதாவது அதில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் இவர்களுக்குப் பொருந்தும், ஆனால் இவர்கள் வாழ்வது தமிழ் நாட்டில், செட்டிலானது தமிழ் நாட்டில். சாகும் வரை இருக்கப்போவது தமிழ் நாட்டில். 

11) லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், மேற்சொன்ன அனைத்தும் (இன மொழி மத சாதி பூர்விக லிங்க் அனைத்தும்) இருந்தும், தமிழ் தெரிந்தும் தமிழ் நாட்டின் மூச்சுக்காற்று கூட பட்டால் பாவம் என்று ஒதுங்கி வெளிப் பிராந்தியத்தில் அல்லது வெளி தேசத்தில் இருப்பவர்கள், முழுக்க முழுக்க தாங்கள் வாழும் நிலத்தின் நாகரிகம் அல்லது கலாசாரத்துடன் ஒன்றிப்போயுள்ளவர்கள். 

யார் உண்மையான தமிழர்கள்?  இது ஒரு இமாலயக் கேள்வி!! 

அதெப்படி நீ இமாலயக் கேள்வி என்று போடலாம்? அருணாசலக் கேள்வி அல்லது தொட்டபெட்டாக் கேள்வி என்று ஏன் போடலை?

ரொம்ப நோண்டினால் தொட்டபெட்டா தமிழ் நாடா கர்னாடகாவா என்று ஐயப்பாடு வந்துவிடும். நானு ஹேளிது கொத்தாயித்தா?

அருணாச்சலம் லவணியூண்டு பந்துலு சந்துலு ஆந்திரா ராயலசீமாகண்டி சேருலு சந்தேகமுலு!!

வால்பாறை லவலேசம் கேரளம்தன்னே என்று யாரும் பொங்கிட சான்ஸ் உண்டல்லோ?

திரேதாயுக அல்லது கிருதயுக சந்தேகங்கள்:

Posted since 28.12.2014 on my FB wall :

ஒரு கலியுக யதார்த்தவாதியின் யதார்த்தமான அல்லது எதேச்சையான திரேதாயுக அல்லது கிருதயுக சந்தேகங்கள்:
===============================================================
மாதவன் ஸ்ரீரங்கம் ரேஞ்சுக்கு எனக்கு சிந்தனைகள் ஒரு கலியுக யதார்த்தவாதியின் யதார்த்தமான திரேதாயுக சந்தேகங்கள்ளாம் வருதே, இன்னா பண்றது? கத்துண்ட வித்தையெல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒருக்கா கொட்டில்லாமா? இல்லை அப்டியே கோழிய அமுக்கற மாதிரி உள்ளாரயே போட்டு ஊத்தி மூடிட்லாமா?

பாரதியார்:
மகா கவி பாரதியார் பாட்டு எழுதினார், கவிதை எழுதினார், தேசப்பற்றுடன் தீர்க்கதரிசியாய் பற்பல விஷயங்களை எழுதினார், சிறை சென்றார், சுதந்திர வேள்வியில் பங்குகொண்டார், காந்தி மகான் அவர்களின் சுதந்திரப்போரில் தன் பங்குக்கு தோழர்கள் சுப்ரமணிய சிவா, வ.உ.சி, இன்ன பிற நல்லோர்களின் ஆதரவுடன் தன் பங்கைப் பாங்கே செய்தார்.

அவர் வாழ்ந்த மட்டிலும் அவர் வாழ் நாளில் அவர் சொல்லை யாரும் மதிக்கலை, அவர் சமூகத்திலேயே கூட அவரை யாரும் ஒரு பொருட்டாய் மதிக்கலை என்பார்கள், அவர் குடும்பத்தைக் கூட சரியாகக் கவனிக்கலை, ஏழ்மை அவர்தம் இல்லத்தில் தாண்டவக் கூத்தாடியது என்பார்கள் என்றெல்லாம் நமக்கெல்லாம் பள்ளியில் பாடமாய் சொல்லிக்கொடுத்தார்கள்.

பாரதி மறைந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் போனபின் தான் அவர் படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏதோ ஒரு சம்பாவனை காம்பன்சேஷன் என்கிற வகையில் பொன்முடிப்பாக அவர் மனைவிக்கோ குடும்பத்திற்கோ சென்றிருக்கும். பாரதியின் வாரிசுகள் இருந்தார்கள், ஒரு சிலர் பிரபல பாடகராகக்கூட இருந்தார்.

திருவள்ளுவர்:
பாரதிக்கு முன் 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த வள்ளுவன் வாசுகி என்று ஒரு ஜோடி சித்தராய் வாழ்ந்தவர் அவர்தம் வரலாறு ஓரளவுக்கு நமக்கெல்லாம் பள்ளிப்பாடம் வாயிலாய் அவர் தந்த உலகப் பொதுமறை திருக்குறள் வழியாய் தெரியும்.

வாழ்ந்தால் வள்ளுவன் வாசுகி போல் கருத்தொருமித்து ஆதர்ச தம்பதிகளாய் வாழணும் என்று பெரியோர் ஆசி கூறுவர்.

வள்ளுவர் சித்தர் போல் வாழ்ந்தார், மனைவி இருந்தும் கிட்டத்தட்ட ஒரு துறவி மாதிரிதான் வாழ்ந்தார்.

வள்ளுவன் வாசுகிக்கு குழந்தைப்பேறு கிட்டியதா? யாராவது அவர்தம் வாரிசு என்று இருந்தனரா? இல்லையெனில் ஏனில்லை?
இருந்தார்களெனில் அவர்கள் என்ன ஆனார்கள்? காலச் சுவட்டில் காலத்தின் ஓட்டத்தில் அவர்கள் மறக்கப்பட்டனரா?

கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை:
கோவலன் கண்ணகி கதை சிலப்பதிகாரம் வாயிலாய் நமக்குத் தெரியும்.  கோவலன் மாதவி கதையும் தெரியும், மணிமேகலையும் தெரியும்.  கோவலன் செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெற்று மாண்டு போக, கண்ணகி கோபத்தில் மதுரையை எரித்த கதை தெரியும்.

அதன் பின் மாதவி என்ன ஆனார்? மணிமேகலை என்ன ஆனார்?

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாய் மணிமேகலையும் உண்டு.

வாழ்வியல் ரீதியாய் மாதவியும் மணிமேகலையும் என்ன ஆனார்கள்? ஏதாவது வரலாற்றுக் குறிப்பு உண்டா?

பள்ளிக் கல்வியில் மேற்சொன்ன சந்தேகங்களை தீர்க்கும் பாடங்கள் படித்ததாய் எனக்கு நினைவில்லை.

மக்கழே!! ஸ்டார்ட் மீஜிக்!!

Social Media (an awareness)

Posted since 29.12.2014 on my FB wall:

With the advent of technology and its developments, everybody is creating new aps using their open source and/or Android tools. At least last couple of weeks, there is a sudden spread of '2014 year-end Tamasha' going on in the name of 'My Times 2014' or something similar and everyone is trying their best to showcase what they did by just clicking a link and within 3 minutes are so, something comes up, we get elated and out of sheer anxiety, we share that on our wall again.

They just use some code to pick random stuff from our profile, our prior status updates, comments and/or shares whatever we indulged during a certain period (say one year) and they portray something and come with an output. It looks fine and adventurous and is a kind of entertainment and time pass.

Just imagine, if a 3rd party tool can just pick stuff from our own FB profile and/or prior inputs that we may have done in the past and come with certain output in NO time, Does it not sound coming with a risk as if 'what all these chaps can do with our data, pictures and status updates including our own personal information (base level) ?  We would not have and need not have shared our Credit card numbers, bank details and / or any such sensitive data.   Don't you think there is a tendency to play with our data and by a mere click of a button, most of our info gets into wrong and unscrupulous hands?   What's the surety and guarantee that our information would not be abused or misused by these portals and/or sites who apparently are behind these adventurous tasks or tools.

I also clicked one such couple of days.  But looking at the way these stuff work (does not work visibly to our comprehension and understanding and common sense), I see something fishy here.

Friends, please be aware (beware) of what you are doing in FB or any similar social medium and let's give priority to our own data protection and privacy.   Nothing shall occur at the cost of our personal data and privacy.

Monday, November 24, 2014

மத மாற்றம் ஒரு பார்வை!!

A friend of mine from Facebook has asked this query as his status post asking for feedback.  This is what I shared with him in a private message today (25-11-2014)

சட்டம் தெரிந்தவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்
இரு வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது கண்டிப்பாக இருவரும் அவர் தம் மதத்திலேயே தொடரவேண்டும். கட்டாயம் மதம் மாறுதல் கூடாது (அவன்/அவள் விருப்ப பட்டே மாறுகிறார்கள் என கண்டிப்பாக சொம்படிக்க கூடாது)
அவன்/அவள் மத விஷயங்களில் தலையிட கூடாது அவன்/அவள் தங்கள் மத வழக்கப்படி கடவுளை துதிக்க அனுமதிக்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் தனி நபர் மத சுதந்திரத்தில் தலையிட கூடாது.
அவர்கள் வாரிசுகளின் மீது குறிப்பிட்ட மதத்தை திணித்தல் கூடாது இதற்காகவே அவர் தம் வாரிசுகளை தனி பிரிவாக அங்கீகரித்து அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் படி செய்யவேண்டும்.
-----------------------------------------------------------------------------------
இது துவக்க புள்ளி தான். நிறை குறைகள் இருக்கலாம். இது தொடர்பாக நண்பர்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
சட்ட ஞானம் உள்ளவர்களிடம் அதிகமாக


மத மாற்றம் காதல் தன் மதத்தை பழக்க வழக்கத்தை தொடர இயலாமை (ஆணோ பெண்ணோ) இது தொடர்பான சட்ட ரீதியான விளக்கம் கேட்டிருந்தீர்கள். வெளிப்படையாக நாகரிகம் அல்லது கான்ட்ரவர்சியல் இடுகைகள் தவிர்க்கவே பலர் வெளிப்படையாக பேசாமல் பூடகமாகத் தங்கள் பதிவை பதிகிறார்கள். நானும் என் கருத்தை தனிப்பட்ட ரீதியில் உள்பெட்டியில் பதிவுசெய்ய விழைகிறேன்.

இந்த விஷயத்தில் நாட்டில் நடப்பது ஒரு எமொஷனல் ப்ளாக் மெயில் ரீதியில் லவ் ஜிஹாத் என்னவோ புதுப்பெயர் வேறு கொடுத்துள்ளார்கள் (மீடியாவில்).

உங்களுக்குத் தெரியாததல்ல. ஆணோ பெண்ணோ அவன்/அவள் இந்துவாக இருந்து மற்ற நபர் முக்காலோ பாவாடையோ எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும், இந்துவாகப்பட்டவர்தான் கட்டாயம் மதம் மாறியாக வேண்டும். மற்றவர்கள் இங்கே இந்துவாக மாறி உள்ளே வர அவர்கள் மார்க்கம் அவர்களை அனுமதிக்காது, மீறினால் உயிரோடு இருப்பதே அரிதாகிவிடும். அதிக பட்சம் சமூகத்திலிருந்து தள்ளி வைத்தல் என்கிற நிலையைத்தான் அந்தக் காதலர்கள் சந்திக்கணும் (உயிரோடு விட்டுவைக்கும் இரக்க சுபாவம் மிச்ச சொச்சம் இருந்தால், பெரியவர்களிடத்தில்).

சட்ட ரீதியாக அனுகூலங்கள், சலுகைகள், அடுத்த சந்ததியருக்காக குறிப்பிட்டீர்கள். இந்த மாதிரி இந்துவாகப் பார்த்து தேடித் தேடி காதல் என்கிற மாயையில் சுண்டியிழுக்க வேண்டியது, பின்னர் திருமணம் என்கிற நேரம் வரும்போது ஒருவர் மற்றொருவருக்குத் தேவை என்று வருகிறபோது இந்துவானவர்தான் விட்டுக்கொடுக்க வேண்டும் (வழக்கம்போல்). கால நேர வர்த்தமானங்கள் சரியாக அவர்கள் வாழ்வில் வாய்த்தால் அவர்கள் வாழ்வு சுமுகமாகப் போகும். இல்லையேல் அந்த இந்துவாய் இருந்து மாறியவருக்கு சொர்க்கம் நரகம் பாதாள லோகம் இகரபரசுகம் எல்லாம் இந்த மண்ணில்தான். சொல்லை மீறினால் வேறு ஊருக்கோ நாட்டுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு விபசாரம் இன்ன பிற வேண்டத் தகாத விளைவுகளைத்தான் சந்திக்கவேண்டும் (இந்து பெண்ணாக இருப்பின்).  நம்பி வந்தவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவிடுவதில் அந்த இரு க்ரூப்புக்கும் சொல்லியா தரணும்? அடுத்து 2, 3 4 என்று சேர்த்துக்கொள்ளத்தான் மார்க்கம் அவர்களை அனுமதிக்கிறதே?

பாவாடை மார்க்கத்தில் 2, 3 4 என்று ஒபிஷியலாக இல்லாவிட்டாலும் ஆப்லைனில் வைத்துக்கொள்ள ஒரு தடையும் இல்லையே. ஒருவேளை குற்ற உணர்ச்சி உறுத்தினால் இருக்கவே இருக்கு, பாவப் பரிகாரத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒரு பாவாடையிடம் பாவ மன்னிப்பு கேட்டால் ஆயிற்று.

இது சில பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் நம் எண்ணிக்கையைக் குறைத்து (ஒரு வித ஸ்ட்ரேடஜிக்கல் மூவ்) அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் யார் வென்றாலும் எதிரி தொலைந்தான் என்கிற மனோபாவம்தான் மேலோங்கி இருக்கிறது.

காதலரில் ஒருவர் மாறினாலே 50% இந்துவானவர் தன் தகுதியை இழக்கிறார் (மனதளவில் உள்ளத்தளவில் 50% மீதி தொடர்ந்து நம் மத விஷயங்களில் நாட்டம் இருக்கும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் நடித்துக்கொண்டுருப்பார்கள், சர்வைவலுக்காக!!)

இப்படித்தான் அவர்கள் பல தேசங்களில் தங்கள் அழிச்சாட்டியங்களை அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். வரலாறு சாமி!! அதற்குத்தான் அபிரகாமிய மேற்குலகம் வஹாபிய மேற்குலகம் கோடி கோடியாக கொட்டுகிறது இங்கே!!

சட்டப்படியாக இதை எதிர்கொள்வதில் ஒருவருக்கு தன் ஆயுள் பத்தாது. அடுத்த தலைமுறைக்கு ரிசர்வேஷன் அவர்கள் வளர்ந்து தத்தம் மதம் சார்பு நிலை குறித்து ஒரு முடிவு எடுப்பதற்குள் ஞான ஸ்னானம் இன்ன பிற கட்டுப்பாடுகளை விதித்துப் பழக்கி விடுவார்கள். மீறினால் உயிரோடு இருப்பதே சங்கடமாகிவிடாதா?

பிறகு எங்கே அவர்கள் சட்டப்படி முடிவெடுப்பது?

எல்லாம் இந்த தேசத்தை சீரழிக்க வந்த சீர்கேடுகள். அதன் தொடர்பில் வந்த அக்கறைதான் தங்கள் பதிவு என்பதை உணர்கிறேன்.

இது விஷயம் நாம் என்னதான் இங்கு கருத்துப் பரிமாறிக்கொண்டாலும் மாற்றம் இந்து மதம் காப்பாற்றப்பட நாம் ஏதாவது செய்யணும் என்கிற நம் அக்கறை புரிகிறது. நடைமுறை வாழ்க்கையில் அவரவர் தம் வழியைப் பார்த்துப் போகிறார்கள். எதற்கு வம்பு என்று குடிமகன் வாளாவிருக்கிறான். இந்த தேசத்தில் ஒரு நாள் ஒரு விடிவெள்ளி தோன்றும், நம்புவோம், எல்லாம் வல்ல இறைச் சக்தி அதற்கு ஒரு வழிகாட்ட வேண்டுவோம்.

நம் வரையில் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். நாம் இந்துவாக இப்பிறவியில் பிறந்தது ஒரு நோக்கத்தோடுதான் அதை ஏன் நாம் வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டும்?  நம்பிக்கையோடு நம் மத வழக்கங்களை நாம் கடைப்பிடிக்க யதார்த்தமாக ஒவ்வொரு இளைஞனுக்கும் சிறிது காலம் ஆகும். இது ஒரு நாளில் ஒரு சில வருடங்களில் வரும் மாற்றமல்ல. அதுதான் யதார்த்தம்!!