Sunday, January 4, 2015

பூ காய் கனி (ஒரு பார்வை)

பூ காய் கனி (ஒரு பார்வை)

January 2, 2015 at 12:21pm
நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமார் ஒரு பதிவில் காய் கனி என்று ஒரு கேள்வி பதில் புதிர் மாதிரி குறிப்பிட்டிருந்தார், நேற்றோ இன்றோ. 

அதன் தொடர்பில் சிந்தனை சென்றதன் பின் விளைவு இது. இந்த மனுஷனுக்கு ரொம்பவே 'கனிஞ்சிடுச்சோ' 'வெம்பிடுச்சோ'ன்னெல்லாம் ஆராயப்படாது, பிரிஞ்சிதா மக்கழே!! 

பூ பிஞ்சு காய் கனி 

காய் கனி என்றால் பின் வரும் பாடல்கள் நமக்கு நினைவில் வரும். 

அன்னை திரைப்படத்தில் பானுமதிம்மா பாடிய இந்தப் பாடல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு அருமையான தாலாட்டுப் பாடல், பெரும் புகழ் பெற்றது. 

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று 
பூவாமல் காய்க்காமல் விழுந்த மரம் ஒன்று..........



பலே பாண்டியா படத்தில்:
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் வெண்ணிலவே....





தேன் தேன் என்றும் சில பாடல்கள் உண்டு.
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்........என்று எத்தனை விதமான தேன் சுவைகள் இந்தப் பாடலில். 

பூ காய் கனி என்று இதிலுள்ள நுண்ணியல்களை ஆராய்ந்தால்?

பூ பூவாகவே இருந்து காயாகாமல் இருந்தால் பூமாலையாகும் பாக்கியம் எத்துணைப் பூக்களுக்குக் கிட்டும்? பூமாலை ஆகாவிடினும் பூவாகவே இறைவனுக்கு அர்ப்பணம் ஆகும் பூக்கள் எத்தனை? 
சிலவகைப் பூக்களுக்குத்தான் காய் கனி எனப் பரிணாம வளர்ச்சி தடைப்பட்டு நேரடியாய் பூஜைப் பொருளாய் ஆகும் பாக்கியம் உண்டு. 

பூ காயாகி கனியாகாமல் காயாகவே இருந்துவிட்டால், அதன் பயன்?
சில வகைக் காய்களுக்குத்தான் தேன்சுவை தரும் கனியாகும் பரிணாமம் வாய்த்துள்ளது. எல்லாக் காய்களுமே கனியாகுமா? கனியாகும் பரிணாமம் இயற்கையில் இல்லையில் அது காயின் குற்றமா?

காய் காயாகவே இல்லாமல் கனியாகும் பரிணாமமும் வாய்க்கப் பெற்றாலும், எத்துனைக் கனிகளுக்கு இறைப் பணியில் ஓர் அங்கமாகும் வாய்ப்பு உள்ளது? அவ்வண்ணம் கனியாகாமலேயே காய்ப்பருவத்தே பயன் தரும் காய்கள் பல உண்டு. காயோ கனியோ எந்தச் சுவையிலும் இனிமை தருவது கொய்யா. 

சில வகைக் கனிகளுக்கே கனியும் தன்மை வரை பயன் தரக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 

எத்துனைக் கனிகள் இருந்தாலும், காயான பருவத்தே கனிச்சுவை, தேன்சுவை பெற்று தேன்காயாக தேங்காயாக பரிணாமம் பெறுவது தென்னைக்கு மட்டுமே வாய்த்துள்ளது. 

தேன் சுவை சேர்ந்து செவ்விள நீர் தரும் தருவாயிலேயே தேங்காயாகும் பரிணாமும் எத்துனைத் தேங்காய்களுக்கு வாய்த்துள்ளது? இருப்பினும்  தேங்காயோ செவ்விளநீர் தரும் இளநியோ ஏதோ ஒரு ரூபத்தில் இறைப்பணியில் அங்கம் பெறுகிறது. இளநீர் அபிஷேகத்திற்கும், தேங்காய் பூஜைப் பொருளாகவும் ஆகிறது. 

பூவோ காயோ கனியோ ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கும் உடனுறை மிருகங்களுக்கும் உணவுப் பொருளாக அல்லது பின்னர் ஏதோ ஒரு ரூபத்தில் பழச்சாறு, எஸன்ஸ் என்று இவை ஒரு வடிவம் பெற்று மனிதகுலத்துக்கு உதவுகின்றன. 

பூ காய் கனி பற்றிப் பார்த்தாயிற்று. 

பூ பிஞ்சாகி அடுத்த கட்டம் பரிணாமம் பெறாமலேயே அதன் வளர்ச்சி நின்றுவிடும் ஒரு சில உயிர்களும் உண்டு. தாவரவகைகளில் சில அப்படிப்பட்டவை. பிஞ்சு என்கிற ஸ்திதியிலேயே மனிதன் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் பயன்படும் அளவில் அதனதன் இயல்பு வாய்த்துவிடுகிறது (வெள்ளரி பிஞ்சு). 

காய்ப் பருவத்திலேயே பரிணாமம் முற்றுப்பெற்று மருத்துவ ரீதியில் பயன்படும் சில தாவர வகை உண்டு (உ.ம். மணத்தக்காளி, சுண்டை இத்யாதி). 

வெகுசில கனிகளே முற்றிய கனிகளாகும் பருவத்தே பயன்படும் பாக்கியம் பெற்றவை. பெருவாரியாக முற்றிய கனிகள் நேரே குப்பைத் தொட்டிக்குள்தான் போகும். 

அதுபோல்தான் ஒவ்வொரு மனிதனும் பிறந்து வளர்ந்து தத்தம் இயல்புக்கேற்ப வாழ்ந்து பரிணாம வளர்ச்சியில் தமக்கென்று குடும்பம், பிள்ளைப்பேறு என்று வம்சவிருத்தி ஏற்படுகிறது. 

ஒரு சிலரே குடும்பம் பிள்ளைப்பேறு எனும் அடுத்தக்கட்ட வளர்ச்சி கிட்டாமல் தேங்கிவிடுகிறார்கள் / ஒரு நிலையில் தங்கி விடுகிறார்கள். 

இருப்பினும், அவரவர் இயல்புக்கேற்ப அவரவர் வழியில் இந்தச் சமூகத்திற்கு பயன் தரும் பணியைப் பாங்கே செய்கிறார்கள். சிலர் பயந்தரும் பணியையும் செய்வதுண்டு. அதுகண்டு பயந்தாருமுண்டு. 

(சிந்தைனை தொடரும்)

No comments:

Post a Comment