Friday, January 23, 2015

Middle Class Woes, Turbulances & Recovery Phases (2)

This is a continuation in my series of posts under "Discreet Thoughts from Discreet Minds"

Today's topic I have taken up is:  "Middle Class Woes, Turbulances & Recovery Phases"

This is 2/3rd in this series more particularly:

இந்தப் பெற்றவர்களுக்கு இயல்பாகவே ஒரு எண்ணப் பாங்கு ஏற்பட்டிருக்கும்.

தம் இளமைப் பருவத்தில் அது படிக்கணும் இது படிக்கணும் என்று ஆசைஇருந்திருக்கும். ஆனால் (முன் தலைமுறை) தத்தம் பெற்றோரின் குடும்பச் சூழல், வருமானமின்மை,பொருளாதார நிதி ஆதாரம் இன்மை என்று பற்பல சூழல்களில் தத்தம் குறிக்கோளை தியாகம் செய்துவிட்டுகிடைத்த வேலையைச் செய்து சிறுகச் சிறுக முன்னேறியிருப்பார்கள்.

இதற்கு அவர்களுக்கு கைகொடுத்த கூடுதல் தொழில் நுட்ப டிப்ளமோக்கள்,டைப்ரைட்டிங் (தட்டச்சு), ஷார்ட் ஹான்ட் (சுருக்கெழுத்து), தனிப்பட்ட முறையில் இந்திபடித்திருந்தால் அந்தப் புலமை கூடவே பி ஏ, பி காம் மாதிரி படிப்பு படித்திருந்தால்அதுவும்தான் இந்த நடுத்தர வர்க்கத்தின் தொழில் மூலதனமாய் இருந்தது (60‍ 70 களில் பிறந்தவர்களுக்கு).

இந்தப் பின்னணியில் வளர்ந்தவர்கள், கஷ்டப்பட்டு குடும்பத்தை கட்டிக்காக்கவும்பேணிக்காக்கவும் தம் அடுத்த தலைமுறையினர் தன்னை மாதிரி கஷ்டப்படக் கூடாது. நிர்க்கதியாய்நிற்கக் கூடாது என்கிற சிந்தனையில், அதாவது, நாமதான் நல்ல கல்லூரி, பட்டப் படிப்புபடிக்கலையே, நம் குழந்தைகளையாவது படிக்க வைக்கலாம், அதற்காக எப்பாடு பட்டாவது பொருளாதாரநிதி ஆதாரங்களைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள்.
அதற்காக தாம் வாழும் சூழலில் கடனோ உடனோ வாங்கி அண்டா குண்டா அடகுவச்ச காலம் போய் நகைகள் வெள்ளி இத்யாதி இருந்தால் சொத்து பத்து இருந்தால் அவற்றை அடகு வைத்துத்தான் இந்த நடுத்தர வர்க்கம் அடுத்த தலைமுறைக்கான கல்வி ஆதாரம் வேண்டி உழைக்கிறது.

இந்தஉழைப்பு வீணாகக் கூடாது.

(To be continued)..........

No comments:

Post a Comment