Sunday, July 19, 2015

ஒரு கதையின் காதை!!

Since 16th June 2015 from my Facebook wall:

ஒரு கதையின் காதை!!

இந்தக் கதைப்பாட்டுக்கு அல்லது பாடல்வழி கதைக்கு சூத்திரம் (Inspiration Indeed) வழங்கியவர் அன்பர் ஷங்கர் ராஜரத்தினம் (அவர்தம் மைன்ட் வாய்ஸ்: இன்னா சிவா, இப்பிடிக் கோத்து விட்டுட்டீங்களே, ஞாயமாரே?)

கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம், தோரணத்தில் ஊர்வலமாம், ஊர்வலத்தில் நாரணனாம், நாரணனின் மோகத்திலே நாயகனும் கிரிவலமாம்!! கிரிவலத்தில் நாயகன் தொலைந்தானாம் !!

தொலைந்தவனை கண்டெடுத்தவள் நாயகியாம்!! நாயகியின் நாயகன் இவனல்ல, ஆனால் இவன் மனதில் அவள்தான் நாயகியாம், நாயகியின் நாயகன் பின்னாளில் ஊடல் கொண்டானாம், கொண்டவனின் ஊடல் பேணா நாயகியோ நம் நாயகனின் தேறுதல் வார்த்தையில் மையலானாளாம், மையல் கொண்டபின் ஊடல் மறந்தாளாம், மறந்தவள் மறந்தவளாய் (தன்) நாயகனை மறந்தேதான் போனாளாம், போனவள் ஒரு நாளில் தன் தனயனைத்தான் கண்டாளாம், கண்டவள் கேட்டாள் பெற்றவன் கூற்றை நோக்கியதன் இடர் நிலை;

இடர் நிலை பொறாமல் கொற்றவனின் கருணை வேண்டி தன்னுயிர் ஈந்தாமலே ஈருயிர் ஓருடலாய் கொண்ட நாயகனைத் தேடிப்போனாளாம், போனவளை அவன் முகம் காணாமல் பகர்ந்தானாம் 'எங்கு வந்தாய்'? வந்தவளின் வாக்கினால் முகம் வாடி மாமனின் முகம் காண ஏகினானாம், கொண்டவளுடன்; கொண்டவளின் ஐயன் கூற்றை நாடி நிற்க கையறு நிலைகொண்டானாம், இடையில் நம் நாயகனும் அவ்விடம் வந்துசேர்ந்தானாம். 

சேர்ந்தவனின் கருத்தறிந்து பெற்றவனின் கூற்றை நிறுத்த நாயகி சிகிச்சை கொண்டாளாம், கொண்டவளின் நிலையறிந்து அவளைக் கொண்டவன் மனமிரங்கி ஊடல் போய் கூடல் காணா தேடலில் கலங்கினான், இலங்கை வேந்தன் போலத்தான். 

(கதையின் தேடல், தேடலின் கதை இன்னமும் தொடரும்)

No comments:

Post a Comment