Sunday, July 19, 2015

எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம்? (2)

1980கள் வரை நம் இந்திய (பரவலாக) அல்லது குறிப்பாக தமிழ்ச் சமூக வீடுகளில் கூட்டுக் குடும்பம் என்பது காணப்பட்டது. 

ஒரு காலனி அல்லது ஸ்டோர் என்கிற அமைப்பில் பார்த்தால் அன்றெல்லாம் ஒரு மனையில் அல்லது வீடு அல்லது தொகுப்பு வீடு என்று சொல்லப்படும் ரெண்டு கட்டு, மூன்று கட்டு வீடுகளில் வீட்டு 4 அல்லது 5 அறைகள் இருக்கும். ஓரிரண்டை முதலாளி தன் பராமரிப்பில் வைத்துக்கொண்டு மற்ற அறைகளை வாடகைக்கு விட்டு விடுவார். அந்த வருமானம் அவருக்கு தன் இதர செலவினங்களுக்கு ஈடாகும். 

பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த நம் சமூகத்தில் அது மாதிரி கட்டுமானம் உள்ள வீடுகளில் பெரும்பாலும் மாடி போன்ற அமைப்பு இருக்காது. இருந்தாலும் ஒரு மாடி என்கிற அளவில்தான் இருக்கும். 

அது மாதிரி கூட்டமைப்பில் அனைவரும் தனித்தனி குடும்பங்களாய் இருந்தாலும் அது ஒரு ஜாயின்ட் ஃபேமிலி அல்லது கூட்டுக் குடும்பங்களின் கூட்டமைப்பாய்தான் வாழ்ந்தனர். ஒண்டுக் குடித்தனம் எனும் சொலவடை கூட உண்டு. திருச்சி மாதிரி ஊர்களில் ஸ்டோர் என்று அழைப்பர். 

பெரும்பாலும் கணவன் மனைவி (தலைவன் தலைவி) அல்லது புதிதாய்த் திருமணம் ஆன தம்பதிகளைத் தவிர அந்த வீடுகளில் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாய்தான் கூடம், தாழ்வாரம், முற்றம் என்கிற அமைப்புக்களில் இரவு தங்குவது உரையாடுவது உறங்குவது வழக்கம். 

சிறுவர் சிறுமியர் ஆண் பெண் அவரவருக்கு தக்கபடி அந்த அமைப்பில் தமக்கென்று ஓரிடத்தைப் பிடித்து இளைப்பாறுவர். குமரிப் பெண்கள் அவர்களுக்கென்று தனியிடத்தையும் ஆண்கள், திருமணாமாகாத ஆண்கள் அந்தப் பரந்த பெரிய வீடுகளின் திண்ணைகளிலும் இளைப்பாறுவர். மச்சு வீடு எனப்படும் மாடி வீடு வாய்க்கப் பெற்றவர்கள் தம்பதிகளை மேலே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு பகிர்ந்த கூட்டமைப்பில் வாழ்ந்து வந்தனர். 

அது மாதிரி அமைப்புக்கள் 1980களுக்கு பிறகு அரிதாகிவிட்டது. 90களில் குளோபலைசேஷன் அல்லது லிபரலைசேஷன் என்கிற உலகமயமாக்கலின் தாக்கத்தின் விளைவு தனி மனித வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக உயர உயர, கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து ந்யூக்ளியர் குடும்பம் என்கிற தனி வீடு, தனி அமைப்பாய் மக்கள் வாழத் துவங்கிவிட்டார்கள். இது காலம் நமக்குச் செய்த கொடை என்று கூட சொல்லலாம். 

(to be continued) 

No comments:

Post a Comment