Sunday, July 19, 2015

நம்மை நாம் அறிவோம் (3)

=> ஒற்றுமையை உடைக்க வேற்றுமையை பயன்படுத்தினான்
=> பலம் என இருந்ததை உடைக்க தொழில் அல்லது பட்டறிவு அல்லது அனுபவ அறிவு என இருந்ததை களவாட திட்டம் தீட்டினான் 
=> அடிப்படைக் கல்வி பரவலாக இல்லை, அனைவருக்கும் கல்வி என்று பாடம் படித்தான், மூளைச் சலவை செய்தான்
=> வர்த்தகம் செய்ய வந்தவன் நம்மை நம்பவைக்க நம்மில் ஒருவராகி நம்மை நம்பிக் கழுத்தறுக்கும் மாயத்தை செய்து காலப்போக்கில் நம்மை நம்மில் நாம் இழந்தோம் என்று உணராமலேயே தான் தன்னை இங்கு பரவ விட்டான், பரவினான், நம்மையும் வெளி மண்ணில் பரவ விட்டான்
=> தொழில் நுட்பம், வர்த்தகம், புரிந்துணர்வு அது இது என்று பற்பல மாயச் சொற்களை அள்ளி வீசினான்
=> பகட்டில், ஆடம்பரத்தில், விதேசிப் பொருளின் மீது நாட்டத்தை ஏற்றினான்
=> கூடவே அறிவை மழுங்கடிக்கும் உற்சாக பானம் அது இது என்று ஒரு கூட்டத்தையே நாறடிக்க அவன் கொணர்ந்ததை நம்மை நம் ஆட்களே ஆட்சி செய்யும் தொடர்ந்து நாறடிக்கும் வித்தையை நம்மில் இருந்த வித்யைகளை அவித்யைகளாக்கும் சூட்சுமம் பயிற்றுவித்தான்

No comments:

Post a Comment