Sunday, July 19, 2015

எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம் ? (1)

As shared on my Facebook wall since 16th July 2015:

சுதந்திரம் என்பது என்ன?

ஆகஸ்டு 15 இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் (68 முடிகிறது, 69 தொடங்குகிறது)

ஆகஸ்டு 14 அண்டை நாடான பாகிஸ்தான் தன் 69தைத் தொடுகிறது.

ஆகஸ்டு 15ல் பி.ஆர்.காங்கோ, தென் கொரியா இன்ன பிற நாடுகள் கூட தத்தம் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

சுதந்திரம் என்பது என்ன? அதன் வரையறை என்ன? அது எல்லோருக்கும் கிட்டியுள்ளதா? கிட்டுகிறதா? 

விடுதலை, சுதந்திரம், உரிமை சார் சுதந்திரம் எனப் பல உண்டு. ஆங்கிலத்தில் சொல்லப்படும் இன்டிபென்டன்ஸ் எனும் சுதந்திரம், விடுதலை எனும் பொருளில் கொள்ளப்படும் சுதந்திரம், ஒரு மனிதன் தான் விரும்பியதைச் செய்யும் சொல்லும் கருதும் சுதந்திரம் (எண்ண அளவில்), கருதியதை சொல்லும் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், ஒரு படைப்பாளி தன் கருத்தை தன் படைப்பின் வழி சொல்லும் சுதந்திரம் என்று பல உண்டு.

ஆங்கிலத்தில் விளக்கினால் சுதந்திரம், விடுதலை, இவற்றை தெளிவாக விளக்கலாம், தமிழில் சொல்லாடல் இந்த விஷயத்தில் குறைவு. லிபரேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விடுதலை வேட்கை சார்ந்த அரசியல் சார்ந்த போர், ஆட்சிபெறும் உரிமை கோரும் போராட்டம், தன்னாட்சி சார்ந்த போராட்டம் இவற்றின் வடிகால் வெற்றீ பெறும்போது கிடைக்கும் விடுதலையும் சுதந்திரம்தான் (தமிழில்). ஆங்கிலத்தில் அதற்கு போராடிப் பெற்றால்தான் விடுதலை அல்லது சுதந்திரம் பெற்றதாக கருதப்படும்.

ஏற்கெனெவே இருப்பதை ஒருவர் 'இந்தா வச்சுக்கோ' என்று கொடுப்பதல்ல சுதந்திரம். காரணம், பகுத்தறிவின் தாக்கத்தில் வளர்ந்த இந்தத் தமிழ்ச் சமூகம் கூடவே இதைக் கேட்கும் 'அதுதான் அங்கேயே முதலிலேயே இருக்கிறதே, நீ என்ன அதை எனக்கு அல்லது எங்களூக்கு கொடுப்பதற்கு?' இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்வதை நீ தடை செய்தால் அப்போது அது சுதந்திரமின்மை, எனவே அதைக் கோரி ஒரு சுதந்திரப் போர் அல்லது விடுதலைப்போர் என்று அறியப்படும், எனில், அது போராடிப் பெற வேண்டிய நிலையில் சமூகமோ ஒரு தனிப்பட்ட மனிதனோ உள்ளாகிறது/உள்ளாகிறான்.
பின் குறிப்பு: 
இதே தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு தொடராக இங்கே பகிர்ந்துள்ளேன். எண் வரிசை வாயிலாக ஆங்கிலப் பதிவும் தமிழ்ப் பதிவும் ஒரே நேர்க்கோட்டில் ஒரே மொழியாக்கத்தில் இருக்கணும் என்கிற அவசியம் இல்லை.

ஆனால் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல விழைகிறேன். சொற்கோவை சிந்தனைவழி சென்று அதன்படி வருவதால், ஆங்கிலப் பதிவின் நேரடித் தமிழாக்கமாக கருத வேண்டாம்.

ஆங்கிலம் வேண்டுவோர் அதைப் படிக்கலாம். சாராம்சம் நான் சொல்ல வரும் கருத்து ஒன்றுதான். மையக் கருத்து ஒரு புள்ளீயில்தான் செல்லும். 

No comments:

Post a Comment